செய்தி

மாபெரும் ரத்ததான முகாம் நடைபெற்றது

  • April 10, 2023
  • 0 Comments

புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் 132 வது பிறந்தநாள் சமத்துவநாள் முன்னிட்டு ராணிப்பேட்டை புதிய பேருந்து நிலையத்தில் மாபெரும் ரத்ததான முகாம் நடைப்பெற்றது. நிகழ்ச்சிக்கு ஏற்பாடு ராணிப்பேட்டை விடுதலை சிறுத்தை கட்சியின் நகரமன்ற உறுப்பினரும் மாவட்ட தொண்டரணி துனை அமைப்பாளருமாகிய அ.நரேஷ் அவர்கள் தலைமை தாங்கினார்.ராணிப்பேட்டை நகர செயலாளர் கி.ராஜசேகர் வரவேற்ப்புரையாற்றினார்.சிறப்பு அழைப்பாளராக விடுதலை சிறுத்தை கட்சியின் மாவட்ட செயலாளர் குண்டாசார்லஸ் அவர்கள் கலந்து கொண்டு ரத்ததான முகாமை துவக்கி வைத்தார். இதில் வாலாஜா அரசு மருத்துவமனை மருத்துவர்கள் […]

தமிழ்நாடு

முன்னாள் அமைச்சர் ப.வளர்மதி பங்கேற்பு

  • April 10, 2023
  • 0 Comments

பம்மல், அனகாபுத்தூர்  பகுதிக கழக அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா, முன்னாள் அமைச்சர் ப.வளர்மதி பங்கேற்பு. சென்னை அடுத்த பம்மல் பேரூந்து நிலையம் அருகே பம்மல் வடக்கு பகுதிகழக அதிமுக சார்பில் பொதுமக்களின் தாகம் தீர்க்கும் தண்ணீர் பந்தல் திறப்பு விழா பகுதிகழக செயலாளர் ஜெகன்நாதன் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர் ப.வளர்மதி. செங்கல்பட்டு மேற்கு மாவட்ட கழக செயலாளர் சிட்லப்பாக்கம் ச.இராசேந்திரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ப.தன்சிங் கலந்து […]

தமிழ்நாடு

மாணவ மாணவிகளுக்கு அபாகஸ் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது

  • April 10, 2023
  • 0 Comments

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை பகுதி உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வாலாஜாபேட்டை பகுதியில் இயங்கி வரும் தனியார் கல்வி நிறுவனமான எஸ் டி எம் ஏ எஸ் அபாகஸ் பயிற்சி மையம் சார்பாக நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு அபாகஸ் பயிற்சி அளிக்கப்பட்டு. வருகிறது இந்நிலையில் அகில இந்திய அளவில் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் மூலமாக அபாகஸ் போட்டிகள் நடைபெற்றது இதில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி இன்று […]

தமிழ்நாடு

தண்டவாளத்தை விட்டு தடம் புரண்ட ரயில்

  • April 10, 2023
  • 0 Comments

மதுராந்தகம் அருகே ரயில்வே தண்டவாளம் சீரமைக்கும் பணியின் பொழுது கூட்ஸ் வண்டியில் ஏற்றி வந்த தண்டவாள படிகள் சரிந்தால்  ரயில் இன்ஜின் சக்கரம் தண்டவாளத்தை விட்டு தடம் புரண்டதால் ரயில்வே போக்குவரத்து நிறுத்தம். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த தொழில்பேடு கலசங்கள் இடையில் தண்டவாள பணிகள் நடைபெற்று வருகிறது இதற்கான மூலப் பொருட்களை ஏற்றிச் சென்ற கூட்ஸ் வண்டியின் ஒரு சக்கரம் தடம் புரண்டதால் குருவாயூர் எக்ஸ்பிரஸ் , பாண்டிச்சேரி ,திருப்பதி. சோழன் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்கள் […]

தமிழ்நாடு

பிரபல ரவுடி வினோத் வெட்டிக் கொலை

  • April 10, 2023
  • 0 Comments

போரூரை அடுத்த அய்யப்பன்தாங்கல், சுப்பிரமணியம் நகர், பொன்னியம்மன் கோயில் தெருவில் நேற்று முன் தினம் இரவு மோட்டார் சைக்கிளில் வாலிபர் வந்த போது 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் வழி மறித்து வெட்டியது. இதில் அந்த வாலிபர் உயிருக்குப் பயந்து அருகில் இருந்த வீட்டிற்க்குள் நுழைந்தார். விடாமல் விரட்டிச் சென்ற கும்பல் கதவை உடைத்து வெட்டி கொலை செய்து விட்டு தப்பியோடி விட்டனர். இது குறித்து தகவல் அறிந்த போரூர் போலீசார் […]

தமிழ்நாடு

ராணுவ வீரர் வீட்டில் மின் கசிவு

  • April 10, 2023
  • 0 Comments

சென்னை புறநகர் பகுதியான ஆவடி அடுத்த திருமுல்லைவாயில் தேவி நகர் திருவள்ளுவர் தெருவை சார்ந்தவர் பாலசுப்பிரமணியன் ராணுவ வீரர் தற்பொழுது உத்தரப்பிரதேச மாநிலத்தில் பணியாற்றி வருகிறார் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தனது சொந்தமான திருமுல்லைவாயில் வீட்டிற்கு வந்து தங்கியிருந்த நிலையில் திரும்பவும் பணிக்குச் செல்லும் பொழுது வீட்டை பூட்டிவிட்டு உத்தரப்பிரதேசம் சென்றார் தற்பொழுது யாரும் வீட்டில் இல்லாத நேரத்தில் இன்று காலை வீட்டில் மின் கசிவு திடீரென்று ஏற்பட்டதால் வீட்டின் முன் கதவு ஜன்னல் தீப்பற்றி […]

தமிழ்நாடு

பூவை மூர்த்தியார் 71வது பிறந்த நாள் விழா

  • April 10, 2023
  • 0 Comments

வாலாஜாபாத் ஒன்றியம் புரட்சி பாரதம் கட்சி மேற்கு ஒன்றியம் சார்பில் பூவை மூர்த்தியார் பிறந்த நாள் முன்னிட்டு 71அடி கட்டவுட் புகைப்படத்திற்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டு பிறந்தநாள் விழா கொண்டாடினர். காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியம் சிறுவள்ளுர் ஊராட்சியில் புரட்சி பாரதக் கட்சி நிறுவனரும் அக்கட்சித் தலைவருமான வழக்கறிஞர் பூவை மூர்த்தியார் அவர்களின் 71வது பிறந்த நாளை முன்னிட்டு புரட்சி பாரதம் கட்சி வாலாஜாபாத் மேற்கு ஒன்றியம் சார்பில் ஒன்றிய செயலாளர் ஆர் கே ரமேஷ் தலைமையில் […]

செய்தி

ஒருவரை கல்லால் அடித்து கொலை

  • April 10, 2023
  • 0 Comments

திருப்போரூர் அருகே மது போதையில் ஏற்பட்ட தகராறில் ஒருவரை கல்லால் அடித்து கொலை செய்த  நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்த கண்ணகப்பட்டு பகுதியில் வசித்து வருபவர் தேவராஜ் வயது 55 இவரது பேத்தியின் குழந்தைக்கு பெயர் சூட்டு விழா நேற்று நடைபெற்றது.  இதில் தனது மகனின் நண்பரான அதே பகுதியை சேர்ந்த சதீஷ்  என்பவருடன் சேர்ந்து இரவு மது அருந்தியதாக கூறப்படுகிறது. மது போதையில் இருவருக்கும் இடையே […]

இலங்கை

ரோஹிதவின் கணக்கில் இருந்த 400 டொலர்கள் மாயம்!

  • April 10, 2023
  • 0 Comments

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் ரோஹித ராஜபக்சவின் கடன் அட்டையில் இருந்து சுமார் 400 அமெரிக்க டொலர்கள் காணாமல் போயுள்ளது. இந்த நிலையில் பணத்தை திருட இணையத்தில் மோசடி செய்தமை தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் கொழும்பு மேலதிக நீதவானிடம் அறிவித்துள்ளனர். ரோஹிதவின் கடன் அட்டையில் இருந்து 387 அமெரிக்க டொலர் பெறுமதியான நான்கு இணையப் பரிவர்த்தனைகளை யாரோ ஒருவர் மேற்கொண்டுள்ளதாக மேலதிக நீதவான் பசன் அமரசேனவிடம் பொலிஸார் தெரிவித்தனர். கொழும்பு 7, விஜேராம மாவத்தை, […]

இலங்கை

இலங்கை மத்திய வங்கி ஆளுநரின் முக்கிய அறிவித்தல்!

  • April 10, 2023
  • 0 Comments

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு முறை ஏப்ரல் மாதத்திற்குள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க இதனை தெரிவித்தார். வணிக கடன் வழங்குநர்களுடன் பேச்சுவார்த்தைகளை விரைவுபடுத்த நம்புவதாக அவர் மேலும் தெரிவித்தார். இலங்கைக்கு வழங்கப்படவுள்ள நிதிப் பொதி குறித்த முதலாவது மீளாய்வு 6 மாதங்களில் மேற்கொள்ளப்படும் எனவும் அதற்கு முன்னர் இது தொடர்பான கலந்துரையாடல்கள் தொடர்பில் தீர்மானிக்கப்படும் எனவும் மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்துள்ளார். எதிர்வரும் மார்ச் மாதம் 20 […]