இலங்கை செய்தி

சர்வதேச மன்னிப்புச்சபையின் சிரேஸ்ட இயக்குநர் டெப்புரோஸ் முச்சேனா இலங்கை வருகை!

  • April 11, 2023
  • 0 Comments

சர்வதேச மன்னிப்புச்சபையின் சிரேஸ்ட இயக்குநர் டெப்புரோஸ் முச்சேனா இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். கொழும்பில் 28 ம் திகதி இடம்பெறவுள்ள அறிக்கை வெளியிடும் நிகழ்வில் டெப்புரோஸ் முச்சேனா கலந்துகொண்டு உரையாற்றவுள்ளார். இலங்கை எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் மனித உரிமை நிலவரத்தை கருத்தில் கொள்ளும்போது நாட்டின் 22 மில்லியன் மக்களின் மனித உரிமைகளை பாதுகாக்கவேண்டியதன் ஊக்குவிக்கவேண்டியதன் அவசியத்தை அவர் தனது உரையிலும் இலங்கையில் பிரசன்னமாகியிருப்பதன் மூலமும் வலியுறுத்தவுள்ளார். சர்வதேச மன்னிப்புச்சபையின் பிராந்திய மனித உரிமைகள் தாக்கத்திற்கான மூத்த இயக்குநராக […]

இலங்கை செய்தி

முதல் தடவையாக இலங்கையை வந்தடைந்த உலகின் புதிய பயணிகள் விமானம்!

  • April 11, 2023
  • 0 Comments

உலகின் புதிய பயணிகள் விமானம் ஒன்று  இன்று (27) காலை முதல் தடவையாக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது. சிங்கப்பூர் ஏர்லைன்ஸுக்குச் சொந்தமான இந்த போயிங் 787-10 ரக விமானமே இவ்வாறு  கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வந்துள்ளது. அமெரிக்க போயிங் விமான உற்பத்தியாளரின் ட்ரீம்லைனர் விமானப் பிரிவின் கீழ் புதிதாக தயாரிக்கப்பட்டுள்ள இந்த விமானம் ஒரே நேரத்தில் 337 பயணிகள் பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இரண்டு ரோல்ஸ் ரொய்ஸ் இன்ஜின்கள் மூலம் இயக்கப்படும் இந்த விமானம் 36 […]

இலங்கை செய்தி

பிரித்தானிய வாழ் இலங்கை தமிழ் பிரஜையை அதிரடியாக கைது செய்த இந்திய கடலோர காவல்படை!

  • April 11, 2023
  • 0 Comments

பிரித்தானியாவில் அகதி நிலை கோரிய இலங்கை தமிழர் ஒருவர் இந்திய கடலோர காவல்படையினரால் தமிழக கடற்கரையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கைதான நபர் இங்கிலாந்தில் வசிக்கும் இலங்கையர் எனத் தெரிவிக்கப்படுகிறது. 39 வயதான  தமிழரே  இந்திய கடலோர காவல்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த நபர் நேற்று முன்தினம் (24) கைது செய்யப்பட்டதாக இந்திய கடலோர காவல்படை தெரிவித்துள்ளது. கைதான தமிழ் பிரஜை இலங்கையை விட்டு அகதியாக வெளியேறி இலங்கைக்கு திரும்ப முடியாது என்ற நிபந்தனையுடன் நிரந்தர விசா பெற்று […]

இலங்கை செய்தி

நீதவானை கொலை செய்ய மாயாவியின் உதவியை நாடிய சட்டத்தரணி!

  • April 11, 2023
  • 0 Comments

சட்டத்தரணி ஒருவர் , ஹொரணை நீதவான் சந்தன கலன்சூரியவை சூனியம் செய்து கொலை செய்ய சூனியக்காரர் ஒருவருடன் ஒப்பந்தம் செய்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் ஹொரண பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். நிதி மோசடி தொடர்பில் களுத்துறை சிறைச்சாலையில் இருந்த போது அவருடன் பழகிய சூனியக்காரருக்கு , குறித்த சட்டத்தரணி ஒப்பந்தத்தை வழங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்நிலையில் சம்பவம் தொடர்பில் சூனியக்காரர் ஹொரண பொலிஸில் முறைப்பாடு செய்ததை அடுத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இலங்கை செய்தி

இலங்கை – இந்தியா பயணிகள் கப்பல் சேவை ஆரம்பம்!

  • April 11, 2023
  • 0 Comments

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை ஏப்ரல் 29ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சு இதனை தெரிவித்துள்ளது. காரைக்கால் துறைமுகத்தில் இருந்து காங்கேசன்துறை துறைமுகம் வரை இந்த சேவை இயக்கப்படும். காங்கசந்துறை துறைமுகத்தின் உட்கட்டமைப்பு அபிவிருத்தி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த பயணிகள் கப்பல் சேவையை ஆரம்பிக்க கடற்படையின் ஒத்துழைப்புடன் புதிய பயணிகள் முனையம் நிர்மாணிக்கப்படும் எனவும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா குறிப்பிட்டார். இந்த […]

இலங்கை செய்தி

யாழில் 27 வயதான இளைஞனின் உயிரை பறித்த விபத்து

  • April 11, 2023
  • 0 Comments

யாழில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயரிழந்துள்ளார்.யாழ்ப்பாணம் கொடிகாமம் – மிருசுவில் பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. வீதியில் பயணித்த வேன் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதிக்கு அருகில் இருந்த மரம் ஒன்றின் மீது மோதி இவ்வாறு விபத்துக்கு உள்ளாகியுள்ளது. இதன்போது, வேனின் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவத்தில் உயிரிழந்தவர் பரந்தனை சேர்ந்த 27 வயதான குமாரசாமி கஜீபன் என தெரியவருகிறது. இன்று அதிகாலை 3.30 மணியளவில் கொடிகாமம் – மிருசுவில் பகுதியில் […]

செய்தி வட அமெரிக்கா

அமெரிக்கன் ஏர்லைன்ஸில் பயணி மீது சிறுநீர் கழித்த குற்றச்சாட்டில் மாணவர் கைது

நியூயார்க்கில் இருந்து புது தில்லிக்கு அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணித்த மது அருந்திய மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டார். 21 வயதான ஆர்யா வோஹ்ரா என அடையாளம் காணப்பட்ட மாணவர், விமானத்தில் எதிர்கால விமானங்களில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் நேரப்படி இரவு 9.50 மணிக்கு இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறங்கிய விமானம் 292, ஒரு இடையூறு விளைவிக்கும் வாடிக்கையாளர் காரணமாக சட்ட அமலாக்க அதிகாரிகளால் சந்தித்ததாக விமான நிறுவனம் கூறியது. பல […]

இலங்கை செய்தி

ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகும் ரணில் – உறுப்பினர்களுக்கு விடுத்த உத்தரவு

  • April 11, 2023
  • 0 Comments

2024 ஆண்டு ஆரம்பத்தில் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டிருப்பதாக தெரியவந்துள்ளது. அதற்கு முன் எந்தத் தேர்தலையும் நடத்துவதில்லை என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளதாக அரச உயர்மட்டம் தெரிவிக்கின்றது. இந்த ஜனாதிபதி தேர்தலுக்காக இப்போதே தயாராகுமாறு அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களுக்கு ஜனாதிபதி அறிவித்துள்ளார் என்று அந்தத் தகவல் கூறுகின்றது. சர்வதேச நாணய நிதியத்தின் பணத்தைப் பெற்று ஓரளவாவது பொருளாதாரப் பிரச்சினையைத் தீர்த்துவிட்டு ஜனாதிபதித் தேர்தலுக்குச் சென்றால் அதில் தான் வென்றுவிடலாம் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஏற்கனவே […]

இலங்கை செய்தி

ஐரோப்பிய நாட்டில் இருந்து இலங்கை வந்த பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி

  • April 11, 2023
  • 0 Comments

இலங்கை வந்த ஜேர்மனிய பெண் ஒருவருக்கு பாலியல் தொந்தரவு அளிகப்பட்டுள்ளது. காலி – ஹபராதுவ பிரதேசத்தில் உள்ள சுற்றுலா விடுதியொன்றிலுள்ள உடற்பிடிப்பு நிலையமொன்றுக்கு சென்றிருந்த போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளர். இது தொடர்பில், அதன் ஊழியரான சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 65 வயதான சுற்றுலாப் பயணி ஹபராதுவ காவல்நிலையத்துக்கு அளித்த முறைப்பாட்டின் பிரகாரம் சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். உடற்பிடிப்பின்போது, சந்தேகநபரான ஊழியர் தமது அந்தரங்க பாகங்களை ஸ்பரிசம் செய்ததாக குறித்த பெண் தமது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார். சந்தேக […]

இலங்கை செய்தி

கிளிநொச்சியில் பெண் ஒருவரின் அதிர்ச்சி செயல்

  • April 11, 2023
  • 0 Comments

கிளிநொச்சியில் 54 போத்தல் கசிப்புடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று அதிகாலை கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விசுவமடு புன்னை நீராவி பகுதியில் காவல் கடமையில் ஈடுபட்ட பொலிசார் வீதிச் சோதனை மேற்கொண்டனர். இதன்போது, பொதி செய்யப்பட்ட கசிப்பினை மோட்டார் சைக்கிளில் ஏற்றியவாறு வேறொரு பகுதிக்கு கொண்டு சென்ற பொழுது சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட பெண்ணிடமிருந்து 54 போத்தல் கசிப்பு மற்றும் கசிப்பினை கொண்டு செல்ல பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் என்பன […]