இலங்கை செய்தி

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படவுள்ள மின்சார வாகனங்கள் – அமைச்சர் மனுஷ நாணயக்கார

  • April 11, 2023
  • 0 Comments

வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்கள் வரிச் சலுகையுடன் கூடிய மின்சார வாகனங்களை இறக்குமதி செய்யும் வேலைத்திட்டம் ஆரம்பமாகியுள்ளது.இந்த வேலைத்திட்டம் நேற்று (9) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் இலங்கைக்கு ஏற்கனவே கொண்டுவரப்பட்ட மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களை விடுவிக்கும் நடவடிக்கையை சுங்கத்துறை ஆரம்பித்துள்ளது. வெளிநாட்டுப் பணப்பரிவர்த்தனையை அதிகரிப்பதற்கு இந்த வேலைத்திட்டம் உதவியுள்ளதாக அமைச்சர் மனுஷ நாணயக்கார கூறியுள்ளார். அதேவேளை இலங்கையிலிருந்து சட்ட ரீதியாக வெளிநாடுகளுக்கு தொழிலுக்காக செல்வோர் அனுப்பும் பணத்தின் அடிப்படையில் மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் […]

இலங்கை செய்தி

மாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட கண்ணீர்புகை பிரயோகம் : டிரானிற்கு அழை

  • April 11, 2023
  • 0 Comments

கொழும்பு களனி பல்கலைகழகங்களிற்கு அருகில் ஆர்ப்பாட்டங்களி;ல் ஈடுபட்ட மாணவர்களை கலைப்பதற்காக  பொலிஸார் செயற்பட்ட விதம் குறித்து இலங்கையின் மனித உரிமை ஆணைக்குழு விசாரணைகளை முன்னெடுக்க தீர்மானித்துள்ளது. இந்த விசாரணைகளிற்காக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலெசினை 13 ம் திகதி விசாரணைகளிற்காக ஆஜராகுமாறு மனித உரிமை ஆணைக்குழு அழைத்துள்ளது. இதே வேளை குறித்த ஆர்ப்பாட்டங்களை கட்டுப்படுத்தும் போது கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்களின் பெயர் பட்டியலை அவர்களது பதவி நிலையுடன் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு சமர்ப்பிக்குமாறு பொலிஸ்மா […]

இலங்கை செய்தி

நண்பன் வீட்டில் தங்க வளையலை திருடி செல்ல நாய்க்கு பிறந்தாள் கொண்டாடிய இளைஞன்

  • April 11, 2023
  • 0 Comments

நண்பர் ஒருவரின் வீட்டுக்குச் சென்ற நபர் ஒருவர், அங்கிருந்த சுமார் ஐந்தரை இலட்சம் ரூபா பெறுமதியான தங்க வளையலை திருடி, தனது செல்ல நாய்க்கு பிறந்தநாள் விழா நடத்திய சம்பவம் ஒன்று மொரட்டுமுல்லவில் இடம்பெற்றுள்ளது. 19 வயதுடைய குறித்த சந்தேக நபர், தனது நண்பரின் வீட்டுக்கு அடிக்கடி சென்று வருபவர். இந்நிலையில், கடந்த வாரம் வீட்டில் இருந்து தங்க நகை காணாமல் போனதாக பாதிக்கப்பட்ட தரப்பினர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர். வீட்டுக்கு அடிக்கடி செல்லும் நபர் தனது […]

இலங்கை செய்தி

நாளைய தினம் முதல் விமான டிக்கட்டுகளின் விலையில் ஏற்படவுள்ள மாற்றம்!

  • April 11, 2023
  • 0 Comments

நாளை முதல் விமான டிக்கட்டுகளின் விலை குறைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள இலங்கைக்கு அண்மைக்காலமாக அந்நிய செலாவணியின் உள்வருகை அதிகரித்து வருகிறமை மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிகளவான டொலரின் உள்வருகையால் ரூபாவின் பெறுமதி கணிசமான அளவு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக பொருட்கள் மற்றும் சேவைகளின் கட்டணங்கள் குறைக்கப்பட்டு வருகின்றமை மக்கள் மத்தியில் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் விமான டிக்கட்டுகளின் விலையைக் குறைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. அதன்படி நாளை முதல் விமான டிக்கட்டுகளின் விலை 8% குறைக்கப்படும் என […]

இலங்கை செய்தி

ஒரேவாரத்தில் 39,000ரூபாவால் குறைந்த தங்கவிலை!

  • April 11, 2023
  • 0 Comments

இலங்கையில் ஒரு வாரத்தில் தங்கம் ஒரு பவுன் விலை சுமார் 39,000 ரூபாவினால் குறைந்துள்ளதாக விலைமதிப்பற்ற உலோகங்கள் பகுப்பாய்வு பணியகத்தின் உதவிப் பணிப்பாளர் இந்திக்க பண்டார தெரிவித்தார். உலக தங்கத்தின் விலையுடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலரின் பெறுமதி குறைந்துள்ளதன் காரணமாக இலங்கையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபை தெரிவித்துள்ளது. அதேவேளை தங்கம் விலை குறைவால், நகைக்கடைகள், தங்க அடகு கடைகளில் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். இலங்கை மத்திய வங்கி […]

இலங்கை செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

  • April 11, 2023
  • 0 Comments

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த விடயம் தெரியவந்துள்ளது. 2022 ஆம் ஆண்டில் குறைந்து வரும் உணவு உற்பத்தி மற்றும் பணவீக்கம் காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. அத்துடன், இலங்கையில் 28 சதவீதம் அல்லது 6.3 மில்லியன் மக்கள் கடுமையான உணவுப் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளனர் என்று தெரியவந்துள்ளது. விவசாய உற்பத்தியை அதிகரிப்பது, பூச்சிகளால் ஏற்படும் பயிர் […]

செய்தி வட அமெரிக்கா

மனைவி மற்றும் மகன் கொடூர கொலை:700 ஆண்டுகள் சிறை தண்டனையை எதிர்கொள்ளவுள்ள அமெரிக்கர்!

அமெரிக்காவில் தனது மனைவி மற்றும் மகனை கொலை செய்ததுடன், நிதிக் குற்றங்களில் ஈடுபட்ட நபருக்கு கூடுதலாக 700 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கக்கூடும் என தெரிய வந்துள்ளது. தென் கரோலினாவைச் சேர்ந்தவர் அலெக்ஸ் முர்டாக் (52). இவர் கடந்த 2021ம் ஆண்டு தனது மனைவி மேகி மற்றும் மகன் பால் ஆகியோரை கொன்றதால் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். அவரது தோட்டத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் மேகி, பால் ஆகியோரின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. ஆனால் அப்போது கொலைகளை தாம் செய்யவில்லை என […]

செய்தி வட அமெரிக்கா

ஒன்ராறியோவில் பேரன் எனக்கூறி பாட்டியிடம் மோசடி செய்ய முயன்ற இளைஞன் -சாதுர்யமாக செயல்பட்ட பாட்டி..

நான் உங்கள் பேரன், எனக்கு உதவி வேண்டும் என்று கூறி, பாட்டி ஒருவரை ஏமாற்ற முயன்றுள்ளார் இளைஞர் ஒருவர்.ஆனால், பாட்டியில் சாதுர்யமான செயலால், இன்று கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறார் அவர். ஒன்ராறிb யோவின் விண்ட்சரில் வாழும் Bonnie Bednarik என்னும் பெண்மணிக்கு நேற்று முன்தினம் ஒரு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது.தொலைபேசியில் அழைத்தவர், பாட்டி, நான்தான் உங்கள் பேரன், என் நண்பனுடன் காரில் செல்லும்போது ஒரு விபத்தாகிவிட்டது, அவன் காரில் போதைப்பொருள் வைத்திருந்திருக்கிறான்.அவனை பொலிஸார் கைது செய்துவிட்டார்கள். அவனை ஜாமீனில் […]

செய்தி வட அமெரிக்கா

உக்ரைனுக்கு மேலும் ராணுவ உதவியை அறிவித்துள்ள அமெரிக்கா..

உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் ஒரு வருடங்களை கடந்து தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சிறிய நாடான உக்ரைன், பல்வேறு நாடுகளின் உதவி மற்றும் அமெரிக்காவின் ராணுவ உதவியுடனும் தொடர்ந்து சண்டை செய்து வருகிறது. இந்த சூழலில், உக்ரைனுக்கு ஆதரவாக புதிய ராணுவ உதவிப் பொதியை இன்று அறிவிக்கும் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி, புதிய ராணுவ உதவியின் மதிப்பு இன்னும் வெளிடவில்லை […]

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் பரபரப்பு – 6 வயதுச் சிறுவனை துப்பாக்கியால் சுட்ட 4 வயது நண்பன்

கனடாவில் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 6 வயதுச் சிறுவனை 4 வயது நண்பன் இவ்வாறு துப்பாக்கியால் சுட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. அவர்கள் இருவரும் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்கள் எனக் காவல்துறை தெரிவித்தது. காயமடைந்த சிறுவன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளான். சிறுவனின் உயிருக்கு ஆபத்து இல்லை. இந்நிலையில் அந்த ஆயுதத்தை வைத்திருந்த நபர் கைதாகியுள்ளார். சட்டவிரோதமான முறையில் துப்பாக்கியை வைத்திருந்ததாக அவர்மீது குற்றஞ்சாட்டப்படவுள்ளது. அவரிடமிருந்து 5 துப்பாக்கிகளும் வில்லும் கைப்பற்றப்பட்டன.

You cannot copy content of this page

Skip to content