இலங்கை செய்தி

மிகவும் கடினமான சவாலை சமாளிக்க சரியான பாதையில் பயணிகின்றோம் என்கிறார் பிரதமர்

  • April 11, 2023
  • 0 Comments

மிகவும் கடினமான சவாலை சமாளிக்க சரியான பாதையில் பயணிகின்றோம் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி, மற்ற நட்பு நாடுகள்,இந்தியா மற்றும் சீனா இந்த நெருக்கடியின் போது எங்களுக்கு குறிப்பாக ஆதரவளித்தன எனவும் அவர்  தெரிவித்துள்ளார். நமது நாடு எதிர்கொண்டுள்ள மிக மோசமான நெருக்கடியை சமாளிக்கும் வகையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் அண்மையில் இரண்டு பெரும் பிரச்சினைகளை எதிர்கொண்டது. அந்நியச் செலாவணியைப் பெறுவதில் உள்ள பிரச்சனையே முதன்மையானது. […]

இலங்கை செய்தி

இலங்கைக்கு வருகை தந்த அமெரிக்க இராஜதந்திரிகள் தொடர்பில் தகவல்களை வழங்குமாறு கோரிக்கை!

  • April 11, 2023
  • 0 Comments

நாட்டிற்கு வருகை தந்த அமெரிக்க இராஜதந்திரிகள் தொடர்பில் தகவல்களை வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவினால், குடிவரவு குடியல்வு திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்திலேயே இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த பெப்பிரவரி மாதம் 14 ஆம் திகதி சீ 17 க்லோப்மாஸ்ட்டர் என்ற இரு விமானங்களில் அமெரிக்க இராஜதந்திரிகள் நாட்டிற்கு வருகை தந்திருந்தனர். இதற்கமைய குறித்த இராஜதந்திரிகளின் வருகை தொடர்பில் 08 காரணங்களை முன்வைத்து நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில இந்த கடிதத்தினை அனுப்பிவைத்துள்ளார். […]

இலங்கை செய்தி

உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலம் நாளையுடன் நிறைவு!

  • April 11, 2023
  • 0 Comments

340 உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலம் நாளை மறுதினத்துடன்(19) நிறைவடையவுள்ளது. எவ்வாறாயினும், உள்ளுராட்சி மன்றத் தேர்தல் ஏப்ரல் 25ஆம் திகதி நடைபெறவுள்ள போதிலும், வாக்குச் சீட்டு அச்சிடுவதற்கு இதுவரை பணம் கிடைக்கப்பெறவில்லை என அரசாங்க அச்சக அலுவலர் கங்கானி லியனகே தெரிவித்துள்ளார். 340 உள்ளூராட்சி நிறுவனங்களின் பதவிக்காலம் நாளை மறுதினத்துடன் நிறைவடையவுள்ள நிலையில், அவற்றின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் மாகாண ஆளுநர்களுக்கு இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. உள்ளூராட்சி மன்றங்களை ஆணையாளர்களின் கட்டுப்பாட்டுக்குள் […]

இலங்கை செய்தி

இலங்கையில் அதிகரிக்கும் காசநோயாளர்கள் : பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

  • April 11, 2023
  • 0 Comments

இலங்கையில் வருடாந்தம் சுமார் 10,000 காசநோயாளிகள் கண்டுபிடிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. காசநோயாளிகள் சரியான நேரத்தில் சிகிச்சை பெற்றுக் கொள்ளாதுவிட்டால் மரணம் கூட நேரிடும் என்றும் சுவாச நோய் தொடர்பான நிபுணர் டாக்டர் போதிக சமரசேகர கூறியுள்ளார். சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், காசநோய் காற்றினால் பரவும் நோய் என்பதால் சிகிச்சை எடுக்காமல் இருப்பது ஆபத்தானது என்றும் குறிப்பிட்டுள்ளார். சமூகத்தில் நுரையீரல் காசநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளால் ஆரோக்கியமான மக்களுக்கு […]

இலங்கை செய்தி

13ஆவது திருத்தத்தை அமுல்படுத்த சர்வதேசம் அழுத்தம் கொடுக்க வேண்டும் – சம்பந்தன் வலியுறுத்து!

  • April 11, 2023
  • 0 Comments

அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தை தற்போதைய ஆட்சியாளர்கள் முழுமையாக நடைமுறைப்படுத்த சர்வதேச சமூகம் அழுத்தம் கொடுக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார். இலங்கைக்கான கனேடியத் தூதுவர் மற்றும் இலங்கைக்கான ஆஸ்திரேலியத் தூதுவர் ஆகியோரிடம் இது குறித்து சம்பந்தன் தெரிவித்துள்ளார். இரு நாட்டுத் தூதுவர்களுடான சந்திப்பு குறித்து கருத்து வெளியிட்டுள்ள சம்பந்தன், இலங்கைக்கான புதிய கனேடியத் தூதுவரையும், புதிய ஆஸ்திரேலியத் தூதுவரையும் சந்தித்தோம். இந்தச் சந்திப்பு மிகவும் திருப்திகரமாக இருந்தது. இன்றைய அரசியல் நிலைமை, […]

இலங்கை செய்தி

15 ஆண்டுகளாக சிறையில் இருந்த தமிழ் அரசியல் கைதி விடுதலை!

  • April 11, 2023
  • 0 Comments

15ஆண்டுகளாக சிறையிலிருந்த தமிழ் அரசியல் கைதி சதீஸ்குமார் விடுதலை செய்யப்பட்டுள்ளார். சுயாதீன ஊடகவியலாளரும் எழுத்தாளருமான செல்லையா சதீஸ்குமார் கடந்த 15 ஆண்டுகள் தமிழ் அரசியல் கைதியாக சிறைப்படுத்தப்பட்டிருந்தார். இவருக்கு, பெப்ரவரி முதலாம் ஆம் திகதி ஜனாதிபதியினால் பொது மன்னிப்பு அறிவிக்கப்பட்டது. இருப்பினும் சதீஸ்குமார், ஏற்கனவே உச்ச நீதிமன்றில் மேல் முறையீடு செய்திருந்தார். இதனை மீளப் பெறுவதற்கான கோரிக்கை பெப்ரவரி 23 சட்டத்தரணியூடாக சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து மனுதாரரின் மேல் முறையீட்டு மனுவினை மீளளித்த உச்ச நீதிமன்றம் குறித்த வழக்கினை […]

இலங்கை செய்தி

12 இந்திய மீனவர்கள் நிபந்தனையுடன் விடுதலை!

  • April 11, 2023
  • 0 Comments

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள்  12 பேர்  நிபந்தனையுடன் விடுவிக்கப்பட்டுள்ளனர். குறித்த  12 மீனவர்களும் கடந்த  ஞாயிற்றுக்கிழமை வடக்கு கடற்பரப்பில் கைது செய்யப்பட்டு கடந்த திங்கட்கிழமை பருத்தித்துறை  நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட நிலையில் இன்றுவரை விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் இது குறித்த வழக்கு இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. 12 மீனவர்களுக்கும் 10 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஒன்றரை வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன் அவர்கள் பயன்படுத்திய படகு அரசுடமையாக்கப்பட்டுள்ளது. […]

இலங்கை செய்தி

யாழில் வறுமையில் வாடும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்கள்!

  • April 11, 2023
  • 0 Comments

யாழ்ப்பாண மாவட்டத்தில் 1814 கர்ப்பிணிகள் வறுமை நிலையில் உள்ளதாக யாழ். மாவட்ட செயலகப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. நாட்டில் ஏற்பட்ட கொரோனா இடர் காலத்துக்கு பின்னர் ஏற்பட்ட பொருளாதார நிலைமை காரணமாக பல கர்ப்பிணிப் பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு பாதிக்கப்பட்ட பெண்களில் கோப்பாய் பிரதேச செயலகப் பிரிவில் 370 கர்ப்பிணிப் பெண்கள் வறுமை நிலையில் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. பருத்தித் துறைப் பிரதேச செயலகத்தில்  226 கர்ப்பிணிப் பெண்களும்,  சங்கானையில் 157 பேர்,  தெல்லிப்பழையில் 139 பேர், யாழ்ப்பாணத்தில்  […]

இலங்கை செய்தி

மீண்டும் சடுதியாக அதிகரித்த தங்கத்தின் விலை!

  • April 11, 2023
  • 0 Comments

நாட்டில் தங்கத்தின் விலை மீண்டும் சடுதியாக அதிகரித்துள்ளது. நேற்றைய தினம் 166,500 ஆக காணப்பட்ட 22 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை இன்று, 172,500 ஆக காணப்படுகின்றது. டொலரின் விலை ஏற்ற இறக்கத்தை அடுத்து, தங்கத்தின் விலை மீண்டும் பழைய நிலைக்கே வந்துள்ளது. இதனால் தங்கம் வாங்க காத்திருந்தோருக்கு இவ்விடயம் பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

இலங்கை செய்தி

வலி. கிழக்கு பிரதேச சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் மீது வாள்வெட்டு!

  • April 11, 2023
  • 0 Comments

வலி. கிழக்கு பிரதேச சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் செல்வராசா மற்றும் அவரின் மனைவி ஆகியோர் மீது கும்பல் ஒன்று வாள்வெட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளது. தாக்குதலுக்கு உள்ளானவர்கள் யாழ்ட போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம்  நேற்று (வியாழக்கிழமை)  இரவு 8.30 மணி அளவில் கோப்பாய், மானிப்பாய் வீதியில் அமைந்துள்ள அவரது வீட்டுக்கு முன்பாக இடம்பெற்றுள்ளது. பிரதேச சபை உறுப்பினரும் அவரது மனைவியும் ஆலய திருவிழாவில் கலந்து கொண்டுவிட்டு வீடு திரும்பிக் […]

You cannot copy content of this page

Skip to content