இலங்கை செய்தி

இலங்கையில் நடந்த சோகம் – நான்கு இளைஞர்கள் பரிதாபமாக சாவு

  • April 11, 2023
  • 0 Comments

வெல்லவாய, எல்லேவல நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்று காணாமல் போன எஞ்சிய 03 இளைஞர்களின் சடலங்கள் இன்று (22) காலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கடற்படை சுழியோடிக் குழுவினர் சடலங்களை மீட்டுள்ளதுடன், காணாமல் போன இளைஞர் ஒருவரின் சடலம் நேற்று மீட்கப்பட்டுள்ளது. நேற்று (21) காலை 10 பேர் கொண்ட இளைஞர்கள் குழுவொன்று எல்லாவல நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்குச் சென்றிருந்த நிலையில், அந்தக் குழுவில் 04 பேர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர். கல்முனை பிரதேசத்தில் வசிக்கும் 20 மற்றும் 21 வயதுடைய […]

இலங்கை செய்தி

லிஸ்டீரியா நோய் குறித்து சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள புதிய தகவல்!

  • April 11, 2023
  • 0 Comments

சுகாதார அமைச்சின் தொற்று நோய்ப் பிரிவினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் நாட்டில் இதுவரை லிஸ்டீரியா நோய் நிலைமை இனக்காணப்படவில்லை. எனவே இது குறித்து மக்கள் வீண் அச்சம் கொள்ளத் தேவையில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த பெப்ரவரி மாத இறுதியில்இ லிஸ்டீரியா நோய் நிலைமை காணப்படுவதாக செய்திகள் வெளியாகின. லிஸ்டீரியாசிஸ் என்பது லிஸ்டீரியா மோனோசைட்டோஜென்ஸ் என்ற பற்றீரியாவால் ஏற்படும் ஒரு நோய் நிலைமையாகும். உணவு மாதிரிகள் மற்றும் நீர் ஆகாரங்களிலிருந்து மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டிருந்தன. அதற்கமைய அமைச்சின் […]

இலங்கை செய்தி

அரசாங்க பங்குகளை தனியார் மயப்படுத்துவதன் நோக்கம் என்ன : விமல் கேள்வி!

  • April 11, 2023
  • 0 Comments

மறுசீரமைப்பு என்று குறிப்பிட்டுக் கொண்டு லங்கா டெலிகொம் நிறுவனத்தின் அரச பங்குகளையும் லங்கா வைத்தியசாலையின் அரச பங்குகளையும் விற்பதன் நோக்கம் என்ன என்பதை ஜனாதிபதி சபைக்கு அறிவிக்க வேண்டும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச ஜனாதிபதியிடம் கேள்வி எழுப்பினார். பாராளுமன்றத்தில் இன்று (22) புதன்கிழமை சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கையை சமர்ப்பித்து ஜனாதிபதி உரையாற்றியதை தொடர்ந்து ஒழுங்கு பிரச்சினையொன்றை எழுப்பி கேள்வியெழுப்பிய போதே அவர் மேற்படி கூறினார். தொடர்ந்து தெரிவித்த அவர், சர்வதேச […]

இலங்கை செய்தி

பெப்ரவரியிலும் 32 சதவீதமாகத் தொடரும் உணவுப்பாதுகாப்பின்மை நிலை

  • April 11, 2023
  • 0 Comments

இலங்கையில் உணவுப்பாதுகாப்பின்மையால் பாதிக்கப்பட்டிருப்போரின் எண்ணிக்கை கடந்த பெப்ரவரி மாதமும் 32 சதவீதமாகத் தொடர்வதாகச் சுட்டிக்காட்டியுள்ள உலக உணவுத்திட்டம், கடந்த மாதத்தில் மாத்திரம் அத்தியாவசிய உதவிகள் தேவைப்படும் 197,192 பேருக்கான உதவிகளை வழங்கியிருப்பதாகத் தெரிவித்துள்ளது. உலக உணவுத்திட்டத்தினால் வெளியிடப்பட்டுள்ள பெப்ரவரி மாதத்துக்கான அறிக்கையின் பிரகாரம் நாடளாவிய ரீதியில் அத்தியாவசியத்தேவையுடையோருக்கு 1,129,495 மெட்ரிக் தொன் உணவு பகிர்ந்தளிக்கப்பட்டிருப்பதுடன் 7 மில்லியன் டொலர் பெறுமதியான பணமும், காசோலைகளும் வழங்கப்பட்டுள்ளன. அதேவேளை உலக உணவுத்திட்டம் மற்றும் உணவு, விவசாய அமைப்பு என்பன இலங்கை […]

இலங்கை செய்தி

தமிழர் பகுதியில் முன்னெடுக்கப்படும் பௌத்த குடியேற்றங்கள் : மோசமான விளைவுகள் ஏற்படும் என கஜேந்திர குமார் எச்சரிக்கை!

  • April 11, 2023
  • 0 Comments

யுத்தம் முடிவடைந்த பின்னரான காலப்பகுதியிலும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழர் தாயகம் இராணுவத்தின் உதவியுடன் அழிக்கப்பட்டு சிங்கள குடியேற்றங்கள் உருவாக்கப்படுகின்றமை எதிர்காலத்தில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் அவை நடவடிக்கைகள் நேற்று கூடிய நிலையில், இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு கூறினார். தொடர்ந்து தெரிவித்த அவர், தமிழ் இனப்படுகொலையாளி சவேந்திர சில்வாவினால் நாவற்குழியில் திறந்து வைக்கப்பட்ட பௌத்த விகாரை […]

இலங்கை செய்தி

உயர்கல்வித் துறையில் அரசு அல்லாத நிறுவனங்களின் பங்களிப்பு குறித்து ஆராய்வு

  • April 11, 2023
  • 0 Comments

இலங்கையில் உயர்கல்வி வாய்ப்புகளை மேம்படுத்துவது தொடர்பில் பொருத்தமான பரிந்துரைகளை மேற்கொள்வதற்கான பாராளுமன்ற விசேட குழு அதன் தலைவர் அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி (கலாநிதி) விஜயதாச ராஜபக்ஷ தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடியது. உயர்கல்வித் துறையில் அரசு அல்லாத நிறுவனங்களின் பங்களிப்பு, அவற்றை மேலும் வினைத்திறனாக்குவதற்கான வாய்ப்புக்கள் மற்றும் தடைகள் தொடர்பில் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. இலங்கையின் உள்ள அரசு அல்லாத உயர்கல்வி நிறுவனங்களான நாகனந்தா நிறுவனம், SLINTE உயர்கல்வி நிறுவனம், ஈசொப்ட் மெட்ரோ கெம்பஸ், செய்ஜீஸ் கெம்பஸ், […]

இலங்கை செய்தி

யாழ் நாகர் கோவில் பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த படகுகளுக்கு தீ வைப்பு!

  • April 11, 2023
  • 0 Comments

யாழ்ப்பாணம் நாகர்கோவில் கடற்கரை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 10 படகுகள் இனம் தெரியாத நபர்களால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. புத்தளம் தில்லையாடி பகுதியை சேர்ந்த நபர் ஒருவருக்கு சொந்தமான படகுகளே தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. கடலட்டை தொழிலை முன்னெடுக்கும் முகமாக புத்தளம் பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நாகர்கோவில் பகுதிக்கு கொண்டுவரப்பட்ட படகுகள் , தொழிலில் ஈடுபடுத்தப்படாமல் நீண்டகாலமாக கடற்கரை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்துள்ளது. இந்நிலையில் இன்றைய தினம் புதன்கிழமை (22) அதிகாலை குறித்த 10 படகுகளும் இனம் தெரியாத நபர்கள் […]

இலங்கை செய்தி

தினேஷ் ஷாப்டரின் மரண வழக்கு ஒத்திவைப்பு!

  • April 11, 2023
  • 0 Comments

ஜனசக்தி குழுமத்தின் பணிப்பாளராக கடமையாற்றிய  தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பான மேலதிக நீதிவான் விசாரணையை எதிர்வரும் 4ஆம் திகதி வரை ஒத்திவைக்க  கொழும்பு மேலதிக நீதிவான் டி. என். இளங்கசிங்க  உத்தரவிட்டார். இந்தச் சம்பவம் தொடர்பான நீதிவான் விசாரணை  மீண்டும் நீதிமன்றில் அழைக்கப்பட்ட போதே  இவ்வாறு ஒத்திவைக்கப்பட்டது. இந்த மரணம் தற்செயலானதா அல்லது கொலையா என்பதை தீர்மானிக்க ஐவரடங்கிய விசேட வைத்திய சபையொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் இது நீண்டகால விசாரணையாக மாறியுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட தரப்பு சார்பில் நீதிமன்றில் முன்னிலையான […]

இலங்கை செய்தி

குவைட்டுக்கு தொழிலுக்காக சென்ற 48 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

  • April 11, 2023
  • 0 Comments

தொழிலுக்காக குவைட்டிற்கு சென்று பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கிய 48 இலங்கையர்கள் இன்றைய தினம் நாடு திரும்பியுள்ளனர். இலங்கை விமான சேவைக்கு சொந்தமான யு எல் 230 என்ற விமானத்தில் இன்று அதிகாலை நாடு திரும்பியுள்ளனர். குவைட்டுக்கு தொழிலுக்காக சென்று பல்வேறு சிரமங்களை எதிர்கொண்ட இலங்கையர்கள் குவைட்டுக்கான இலங்கை தூதரகத்திற்கு அறிவித்துள்ளனர். இந்நிலையில் இலங்கைக்கான தூதரகத்தின் நடவடிக்கையால் 48 இலங்கையர்களும் இன்று நாடு திரும்பியுள்ளனர். 38 பெண்களும் 10 ஆண்களுமே இவ்வாறு நாடு திரும்பியுள்ளனர். இது தொடர்பில் கருத்து […]

இலங்கை செய்தி

எரிபொருள் விலை குறைப்பு தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள தகவல்

  • April 11, 2023
  • 0 Comments

அடுத்த மாதம் முதல் எரிபொருள் விலைய குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனை இலங்கை எரிபொருள் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இந்த எரிபொருளின் விலையை எதிர்வரும் ஏப்ரல் மாதம் மேற்கொள்ளப்படும் விலை சூத்திரத்திற்கமைய முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.அதற்கமைய பெட்ரோல் விலை 100 ரூபாயில் குறைக்க தயார் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2018 ஆம் ஆண்டுக்கான எரிபொருள் விலை சூத்திரத்தின் மூலம் மாத்திரமே எரிபொருள் விலைகள் தீர்மானிக்கப்படும் மற்றும் மின்சாரச் சட்டமூலம் 06 மாதங்களுக்கு ஒருமுறை மாற்றியமைக்கப்படும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார். […]

You cannot copy content of this page

Skip to content