செய்தி தமிழ்நாடு

டிரைவருக்கு அரைவிட்ட ஆய்வாளர்

  • April 14, 2023
  • 0 Comments

திருவள்ளூர் மாவட்டம்,  ஊத்துக்கோட்டை அடுத்த அம்பேத்கர் நகர் பகுதியில் வீட்டுமனை பட்டாகேட்டு நடைபெற்ற அறவழி போராட்டத்தில்,போராட்டத்தில் ஈடுபடும் நபர்களுக்கு  பந்தல் போடுவதற்காக சேர் மற்றும் சாமினா பந்தல் கொண்டு வந்த  ஓட்டுநரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த  பெண் காவல் ஆய்வாளர்  சத்தியபாமா  பந்தல்  ஏன் எடுத்து வந்தாய் என்று கூறி ஓங்கி கன்னத்தில் அறைந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது, பின்னர்அங்கிருந்த கிராம மக்கள் காவல்துறை ஆய்வாளரை சூழ்ந்து கொண்டுவாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் […]

ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் அதிர்ச்சி – கொலை செய்யப்பட்டு காட்டில் வீசப்பட்ட சிறுமி

  • April 14, 2023
  • 0 Comments

ஜெர்மனியில் சிறுமியின் கொலை சம்பவம் பாரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காட்டில் வீசப்பட்ட சிறுமி ஒருவரின் உடலை பொலிஸார் கண்டுப்பிடித்துள்ளனர். ஜெர்மனியில்13 ஆம் திகதி ரைலான்வாஸ் மாநிலத்தில் உள்ள வொரைடன் பேர்க் என்ற கிராமத்தில்  12 வயது சிறுமியானவர் தனது பெண் சிநேகிதியின் வீட்டுக்கு சென்றுள்ளார். இந்த 12 வயது சிறுமி சிநேகிதியிடம் இருந்து 3 கிலோ மீற்றர் துரத்தில் உள்ள தனது வீட்டுக்கு காட்டு பாதையின் ஊடாக வந்திருக்கின்றார். இதேவேளை இந்த சிறுமியானவர் தனது வீட்டை சென்று […]

ஐரோப்பா செய்தி

பிரான்ஸில் சிறுவர்களுக்கு ஆபத்தான வளர்ப்பு நாய்

  • April 14, 2023
  • 0 Comments

பிரான்ஸில் வளர்ப்பு நாய் ஒன்று எதிர்பாரா விதமாக இரு சிறுவர்களை கடித்துக்குதறியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர். இந்த சம்பவத்தையடுத்து நாயின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். சனிக்கிழமை இரவு இச்சம்பவம Champ de Mars (Perpignan) நகரில் இடம்பெற்றுள்ளது. இங்குள்ள வீடொன்றில் வசிக்கும் இரு சிறுவர்கள் வீட்டின் முன்பாக் விளையாடிக்கொண்டிருந்துள்ளனர். அப்போது ஒருவர் தனது வளர்ப்பு நாயுடன் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அமைதியாக சென்ற இந்த நிகழ்வில் திடீரென நாய் குறித்த இரு சிறுவர்கள் மீதும் பாய்ந்துள்ளது. மூக்கு, வாய் […]

செய்தி தமிழ்நாடு

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் : முடிவை அறிவிக்க தடை விதித்த நீதிமன்றம்!

  • April 14, 2023
  • 0 Comments

அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி கடந்த 9 மாதங்களாக பதவி வகித்து வருகிறார். இந்த நிலையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தல் வருகிற 26-ந்தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கான வேட்புமனு தாக்கல் ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நேற்று தொடங்கியது. தொடர்ந்து இன்றும் மனுதாக்கல் நடைபெறுகிறது. பொதுச்செயலாளர் பதவிக்கு எடப்பாடி பழனிசாமி மட்டுமே வேட்பு மனுதாக்கல் செய்துள்ள நிலையில் வேறு யாரும் மனுதாக்கல் செய்யாவிட்டால் இன்று பிற்பகல் 3 மணிக்கு வேட்புமனு தாக்கல் முடிந்த […]

ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் தடுப்பு ஊசியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி

  • April 14, 2023
  • 0 Comments

ஜெர்மனியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகள் வழங்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் கொரோனா தடுப்பு ஊசியால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் தற்பொழுது இந்த உதவி வழங்கப்படவுள்ளது. கடந்த ஆண்டுளில்  கொரோனா தொற்று உலகம் முழுவதுமே பாரிய  அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருந்தது. அந்த வகையில் ஜெர்மனியிலும்  கொரோனா தொற்றானது பல உயிர் பலிகளை காவு கொண்டுள்ளது. மக்களை கொரோனா தொற்றில் இருந்து மீட்பதற்காக மருத்துவர்களும், நிபுணர்களும் பல தடுப்பு ஊசிகளை கண்டுபிடித்து நடைமுறைக்கு கொண்டுவந்துள்ளனர். இந்நிலையில் ஜெர்மனியின் மத்திய சுகாதார அமைச்சர் காள் லௌட் […]

செய்தி தமிழ்நாடு

முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் இருதயம்,பல்,கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

  • April 14, 2023
  • 0 Comments

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்த நாளை முன்னிட்டு சி.வி.என்.அண்ணாமலை அறக்கட்டளை சார்பில் செட்டிநாடு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, லைஃப் கேர் மருத்துவமனை, இந்திய பல் மருத்துவச் சங்கம்,குமார் கண் சிகிச்சை மையம் ஆகியவை இணைந்த நடத்தும் மாபெரும் இருதய,பல்,கண் பரிசோதனை முகாம் காஞ்சிபுரம் பச்சையப்பன் மேல்நிலைப்பள்ளியில் சி.வி.எம்.அண்ணாமலை அறக்கட்டளை மேலாண்மை செயலாளரும்,காஞ்சிபுரம் எம்.எல். ஏவுமான சி.வி.எம்.பி.எழிலரசன் ஏற்பாட்டின் பேரில் நடைபெற்றது.இம்முகாமினை திமுக காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளரும், உத்திரமேரூர் எம்.எல்.ஏவுமான க.சுந்தர் தொடங்கி வைத்தார். இம்முகாமில் […]

செய்தி தமிழ்நாடு

தமிழ் வளர்ச்சிக்கு உதவும் வகையில் எழுத்துப் பிழையின்றி அச்சிட வேண்டும்

  • April 14, 2023
  • 0 Comments

காஞ்சிபுரத்தில் ரொமான்சிங் பிரிண்ட் 2023 என்ற தலைப்பில் காஞ்சிபுரம் சித்தி ஈஸ்வரர் மகாலில் தமிழ்நாடு மாநிலத் தலைவர் செந்தில்குமார் மற்றும் மாநில செயலாளர் துரை குமரன் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக அகில இந்திய அச்சக உரிமையாளர் நல சங்க தலைவர் ரவீந்திர ஜோஷி, பொதுச் செயலாளர் ராகவேந்திரா தத்தாபருவா , பொருளாளர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தமிழ்நாடு முழுவதிலும் இருந்து 37 மாவட்டங்களை சேர்ந்த  400க்கும் மேற்பட்ட அச்சக உரிமையாளர்கள் இந்த தேசிய […]

ஐரோப்பா செய்தி

கனவு நகரமான பாரிஸ் குப்பை நகரானது – கடும் நெருக்கடியில் மக்கள்

  • April 14, 2023
  • 0 Comments

பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் குப்பைகள் நிறைந்த நகரமாக மாறியுள்ளது. பாரிஸிற்குச் சென்று சுற்றிப் பார்க்க வேண்டும் என்பது பலரின் கனவாக இருக்கலாம். ஆனால் அந்தக் கனவு நகரம் தற்போது குப்பைகள் நிறைந்த நகரமாக உள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குப்பைகளைச் சேகரிக்கும் நகர சபை ஊழியர்கள் கடந்த வாரத்திலிருந்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருப்பதே அதற்குக் காரணமாகும். எதிர்வரும் திங்கட்கிழமை வரை வேலை நிறுத்தம் நீடிக்கும் என்று கூறப்படுகிறது. அதனால் நகரின் நடைபாதைகளில் 6,600 டன் குப்பைகள் கிடக்கின்றன. பிரான்சில் ஓய்வு […]

ஐரோப்பா செய்தி

நாசவேலையில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட ரஷ்ய உளவு அமைப்பு போலந்தில் கைது

  • April 14, 2023
  • 0 Comments

ரஷ்யாவுக்காக உளவு பார்த்ததாக சந்தேகத்தின் பேரில் வெளிநாட்டு பிரஜைகள் குழுவொன்று கைது செய்யப்பட்டுள்ளதாக போலந்து அரசாங்க அதிகாரிகள் இருவர் பிபிசியிடம் தெரிவித்துள்ளனர். போலந்து பாதுகாப்பு சேவைகள் ரஷ்யாவுக்காக வேலை செய்யும் உளவு வலையமைப்பை உடைத்ததாக ஊடகம் அறிவித்தது. உக்ரைனுக்கு உதவிகளை வழங்கப் பயன்படுத்தப்படும் போக்குவரத்து உள்கட்டமைப்பை ஒளிப்பதிவு செய்ய ரகசிய கேமராக்களை பொருத்தியதாக சந்தேகத்தின் பேரில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த குழு செல் நாசவேலை திட்டங்களை தயாரித்துள்ளது என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உக்ரைன் […]

ஐரோப்பா செய்தி

உக்ரைனுக்கு எதிராக சைபர் தாக்குதலுக்கு தயாரகும் ரஷ்யா

  • April 14, 2023
  • 0 Comments

ஷ்ய ஹேக்கர்கள் உக்ரைனுக்கு எதிராக புதுப்பிக்கப்பட்ட சைபர் தாக்குதல் அலைகளைத் தயாரித்து வருவதாகத் தெரிகிறது, இதில் உக்ரைனின் விநியோக வரிகளுக்கு சேவை செய்யும் நிறுவனங்களுக்கு ransomware-பாணி அச்சுறுத்தல் உள்ளது என்று மைக்ரோசாப்ட் புதன்கிழமை தெரிவித்துள்ளது. தொழில்நுட்ப நிறுவனமான சைபர் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வுக் குழுவால் எழுதப்பட்ட அறிக்கை, உக்ரைன் மோதலின் போது ரஷ்ய ஹேக்கர்கள் எவ்வாறு செயல்பட்டார்கள் மற்றும் அடுத்து என்ன வரலாம் என்பது பற்றிய புதிய கண்டுபிடிப்புகளின் வரிசையை கோடிட்டுக் காட்டுகிறது. ஜனவரி 2023 […]

You cannot copy content of this page

Skip to content