இலங்கையில் தமிழர் பகுதியில் சோகம் : இரு மாணவிகள் நீரில் மூழ்கி பலி!
முல்லைத்தீவு பிள்ளையார் பகுதியில் உள்ள ஒரு கோவிலில் உள்ள குளத்தில் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்த 15 வயது சிறுமிகள் இருவர் நீரில் மூழ்கி இறப்பதைக் காட்டும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. இறந்தவர்கள் மாமுளை பகுதியைச் சேர்ந்த 10 ஆம் வகுப்பு படிக்கும் இரண்டு மாணவிகள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.