11 ஆண்டுகளின் பின்னர் மீண்டும் இயங்கும் சவுதி அரேபிய, சிரியத் தூதரங்கள்
11 ஆண்டுகளின் பின்னர் சவுதி அரேபியாவும் சிரியாவும் அவற்றின் தூதரகங்களை மீண்டும் செயல்படுத்த முடிவெடுத்துள்ளன. 11 ஆண்டுகளாக இருநாடுகளின் உறவில் விரிசல் நீடித்தது. நோன்பு மாதத்துக்குப் பிறகு தூதரகங்களை மீண்டும் திறக்க அவை திட்டமிட்டுள்ளது. மேலும் இருநாடுகளின் துணைத் தூதரச் சேவைகளை மீண்டும் தொடங்கப் பேச்சுவார்த்தை நடைபெறுவதைச் சவுதி அரேபிய அரசாங்கத் தொலைகாட்சி உறுதிப்படுத்தியது. சவுதி அரேபியாவும் ஈரானும் அவற்றின் உறவைச் சீர்ப்படுத்தும் முக்கிய உடன்பாட்டில் 2 வாரங்களுக்கு முன்னர் கையெழுத்திட்டன. பரந்த அரபு வட்டாரத்துக்குச் சிரியா […]