988 கைதிகளுக்கு ஜனாதிபதியால் பொதுமன்னிப்பு
வெசாக் போஹோவை முன்னிட்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் கைதிகளுக்கு விசேட பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் 34வது சரத்தின் பிரகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய இந்த விசேட அரச மன்னிப்பு வழங்கப்பட உள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து சிறைச்சாலைகளையும் உள்ளடக்கிய 982 ஆண் கைதிகள் மற்றும் 06 பெண் கைதிகள் உட்பட 988 பேர் விடுதலை செய்யப்பட உள்ளனர். இது தவிர போஹோ தினத்தை முன்னிட்டு பார்வையாளர்களை பார்வையிட சிறைக்கைதிகளுக்கு […]