சேர்பியாவில் நேற்று நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில், குறைந்தபட்சம் 8 பேர் உயிரிழந்துள்ளதுடன், 14 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஓடிக்கொண்டிருந்த காரிலிருந்து இளைஞர் ஒருவர் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மிலாடேனோவாக் நகருக்கு அருகிலுள்ள 3 கிராமங்களில் இச்சம்பவம் இடம்பெற்றள்ளது என அரச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இரவு முழுவதும் நடந்த தேடுதலையடுத்து, 21 வயதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார் என சேர்பிய அதிகாரிகள் இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளனர். சேர்பியாவில் இரு நாட்களில் நடந்த […]