இலங்கை

ஆளுநர்கள் பதவி விலகாவிடின், பதவி நீக்கப்படுவார்கள் என அறிவி்ப்பு!

  • May 14, 2023
  • 0 Comments

ஜனாதிபதி அலுவலகத்தினால் பதவி விலகுமாறு அறிவிக்கப்பட்ட நான்கு ஆளுநர்கள் உடனடியாக பதவிகளை இராஜினாமா செய்யாவிடின்,  அவர்களை பதவி நீக்குவதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆராயப்பட்டு வருவதாக அரசாங்கத்தின் முக்கியஸ்தர் ஒருவர் குறிப்பிட்டார். ஏற்கனவே அந்த நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் இம்மாத இறுதியில் இடம்பெறவுள்ள ஜனாதிபதியின் ஜப்பான் விஜயத்துக்கு முன்பாக ஆளுநர் பதவிகளில் மாற்றங்கள் வரும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். அதே போன்று குறித்த நான்கு ஆளுநர்களின் இடத்துக்கு புதிய ஆளுநர்களாக நவீன் திசாநாயக்க, செந்தில் தொண்டமான்,  தயா கமகே […]

செய்தி தமிழ்நாடு

கோவில் உண்டியலை உடைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது

  • May 14, 2023
  • 0 Comments

கோவையில் பிரசித்தி பெற்ற கோனியம்மன் கோயில் உண்டியலை உடைத்து கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோவையின் காவல் தெய்வமான கோனியம்மன் கோயில் டவுன்ஹால் பகுதியில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் இன்று அதிகாலை 3 மணியளவில் கோயில் உண்டியல் பூட்டு உடைக்கப்பட்டு கொள்ளை போயிருப்பதை கோயில் காவலாளி ஒருவர் பார்த்தார்.நள்ளிரவில் கோயிலுக்குள் நுழைந்த மர்ம நபர்கள் உண்டியலை உடைத்து. பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உடனே இது குறித்து கோயில் நிர்வாகத்தினருக்கு தகவல் கொடுத்தார்.அவர்கள் இந்த […]

இலங்கை

யாழ் இளைஞனுக்கு துபாயில் நேர்ந்த கொடூரம்..!

  • May 14, 2023
  • 0 Comments

குடும்ப வறுமையால் யாழ்ப்பாணத்திலிருந்து துபாய்க்கு வேலைக்கு சென்ற இளைஞர் ஒருவர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இரு சகோதரர்கள் வேலைக்காக சென்றிருந்த நிலையில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதோடு மற்றைய சகோதரனை மீண்டும் நாட்டிற்கு அழைப்பதிலும் சிக்கல் நிலை எழுந்துள்ளதாக அவரது தாயார் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் சுண்டுக்குழி பதியைச் சேர்ந்த 26 வயதுடைய கமலதாஸ் நிலக்சன் மற்றும் அவருடைய சகோதரரான 22 வயதுடைய கமலதாஸ் டிலக்சன் ஆகியோர் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் துபாய்க்கு […]

செய்தி தமிழ்நாடு

மூன்று பிரிவுகளாக மாரத்தான் போட்டி

  • May 14, 2023
  • 0 Comments

திருப்பத்தூர் மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் வேர்கள் அறக்கட்டளை இணைந்து நெகிழி இல்லா திருப்பத்தூர் மாவட்டத்தை உருவாக்கவும் அதற்காக விழிப்புணர்வு ஏற்படுத்த இன்று காலை 5000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற மினி மராத்தான் போட்டி திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மாரத்தான் போட்டி நடைபெற்றது. என்ன மராத்தான் போட்டியை திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர் பாண்டியன் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி,மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன். திருப்பத்தூர் வட்டாட்சியர் சிவப்பிரகாசம், திருப்பத்தூர் நகர மன்ற தலைவர் சங்கீதா […]

மத்திய கிழக்கு

துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் பலியான சூடானின் மிகப்பெரிய பாடகி

  • May 14, 2023
  • 0 Comments

சூடானின் மிகப்பெரிய பாடகர்களில் ஒருவரான ஷேதன் கார்டூட்(37) துப்பாக்கிச் சூட்டில் பரிதாபமாக கொல்லப்பட்டுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. சூடான் ராணுவத்திற்கு துணை ராணுவப்பிரிவுக்கும் இடையேயான மோதலில் பாடகி கார்டூட் கொல்லப்பட்டுள்ளார் என்றே கூறுகின்றனர். சூடானில் இரு பிரிவினருக்குமான மோதலில் சிக்கிக்கொண்டுள்ள பொதுமக்களின் துன்பத்தைப் போக்க ஒப்பந்தம் கையெழுத்தான அடுத்த நாளே பாடகி துப்பாக்கிச் சூட்டில் பலியாகியுள்ளார். அதிகாரத்தை கைப்பற்றும் நோக்கில் ஏப்ரல் மாதம் தொடங்கி சூடானில் ராணுவத்திற்கும் துணை ராணுவப் பிரிவுக்கும் கடுமையான சண்டை நடந்து வருகிறது. […]

அறிவியல் & தொழில்நுட்பம்

AI தொழில்நுட்பத்தால் உலகிற்கு காத்திருக்கும் ஆபத்து – கட்டுப்படுத்துமாறு கோரிக்கை

  • May 14, 2023
  • 0 Comments

AI தொழில்நுட்பத்தால் எதிர்காலத்தில் மிகப்பெரிய ஆபத்து ஏற்படும் என்றும் மைக்ரோசாப்ட் பொருளாதார நிபுணர் எச்சரித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. AI தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்த அதிக வாய்ப்பு இருப்பதாகவும் எனவே அதை கட்டுப்படுத்தாவிட்டால் இந்த நிலைமை ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. AI தொழில்நுட்பம் என்ற செயற்கை நுண்ணறிவு தற்போது பல துறைகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பதும் இதை பயன்படுத்துவதால் மிக எளிதாக வேலை முடிகிறது என்பதும் தெரிந்ததே. ஆனால் அதே நேரத்தில் AI தொழில்நுட்பத்தால் ஏராளமான […]

ஆசியா

சிங்கப்பூரில் வீடுகளில் அமுலாகும் நடைமுறை!

  • May 14, 2023
  • 0 Comments

சிங்கப்பூரில் எல்லா வீடுகளிலும் மின்சார அதிர்வைத் தடுக்கும் சாதனம் பொருத்தப்பட்டிருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மின்சாரக் கசிவு ஏற்படும்போது மின்சாரம் தாக்காமல் அந்தச் சாதனம் தடுக்கும் என குறிப்பிடப்படுகின்றது. எதிர்வரும் ஜூலை மாதம் முதல் எல்லா வீடுகளிலும் அந்தச் சாதனத்தைப் பொருத்தவேண்டும் என்று எரிசக்திச் சந்தை ஆணையமும் வீடமைப்பு வளர்ச்சிக் கழகமும் தெரிவித்தன. மின்சாரப் பாதுகாப்புச் சாதனத்தைப் பொருத்த வீட்டு உரிமையாளர்களுக்கு 2 ஆண்டு அவகாசம் வழங்கப்படுகிறது. பழைய, கெட்டுப்போன கம்பி வடங்களைக் கொண்ட மின்சாதனங்களால் ஏற்படக்கூடிய […]

இலங்கை

இலங்கை அரசுக்கு கடும் அழுத்தங்களை பிரயோகிக்கும் வகையில் ‘சதி’ நடவடிக்கை

  • May 14, 2023
  • 0 Comments

இலங்கை அரசுக்கு கடும் அழுத்தங்களை பிரயோகிக்கும் வகையில் ‘சதி’ நடவடிக்கையொன்று இடம்பெறுவதாக கிடைக்கப்பெற்ற புலனாய்வு தகவலையடுத்து கொழும்பில் முக்கிய பல இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பொலிஸார், முப்படையினர், விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸ் கலகமடக்கும் பிரிவினரை உள்ளடக்கிய வகையில் விசேட கூட்டு பாதுகாப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. அத்துடன், குருணாகலை உட்பட நாட்டில் ஏனைய சில இடங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. கொழும்பு பல்கலைக்கழகத்தை மையப்படுத்தி, அரசுக்கு கடும் அழுத்தம் பிரயோகிக்கும் வகையில் இரகசிய நடவடிக்கை இடம்பெறுவதாக புலனாய்வு பிரிவினருக்கு […]

பொழுதுபோக்கு

தமிழ் சினிமா பக்கம் பார்வையை வீசும் கவர்ச்சி நடிகை

  • May 14, 2023
  • 0 Comments

கனவு கன்னியாக வலம் வரும் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் ஒரு சிறந்த தொழிலதிபர் மற்றும் நடிகையும் ஆவார். அவ்வாறு இருக்க தற்போது தமிழ் சினிமா பக்கம் இவரின் பார்வை திரும்பத் தொடங்கி இருக்கிறது. இந்நிலையில் 2012ல் பாலிவுட்டில் இவர் தன் சினிமா பயணத்தை தொடங்கி இருக்கிறார். மேலும் தற்பொழுது தமிழ் சினிமாவில் சில படங்களில் கால் சீட் கொடுத்து வருகிறார். அந்த வகையில், வடகறி, ஓ மை கோஸ்ட், வீரமாதேவி, கொட்டேஷன் கேங் போன்ற தமிழ் […]

வட அமெரிக்கா

அமெரிக்காவில் லட்ச கணக்கான அரசாங்க ஊழியர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி

  • May 14, 2023
  • 0 Comments

அமெரிக்காவில் அரசாங்க ஊழியர்களின் தனிப்பட்ட தகவல்கள் ஊடுருவப்பட்டுள்ளது. 237,000 பேரின் தகவல்கள் ஊடுருவப்பட்டுள்ளதாக இதுவரையில் தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் போக்குவரத்துத் துறை அந்தத் தகவல்களை வெளியிட்டது. சில போக்குவரத்துச் செலவுகளைக் கையாளும் கட்டமைப்பில் அரசாங்க ஊழியர்களின் தனிப்பட்ட தகவல்கள் அடங்கியிருக்கின்றன. ஆனால் அந்தத் தகவல்கள் குற்றவியல் காரணங்களுக்குப் பயன்படுத்தப்பட்டதா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. ஊடுருவல் சம்பவத்துக்கு யார் காரணம் என்பதும் இன்னும் தெரியவில்லை. இதற்கு முன்னரும் அமெரிக்க அரசாங்க ஊழியர்களுடன் அமைப்புகளும் ஊடுருவல்களுக்கு இலக்காகியிருக்கின்றன.

You cannot copy content of this page

Skip to content