பொழுதுபோக்கு

ஜெயம் ரவியின் அடுத்தப்படத்தை கிருத்திகா உதயநிதி இயக்கவுள்ளதாக தகவல்!

  • May 19, 2023
  • 0 Comments

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ஜெயம் ரவி ‘பொன்னியின் செல்வன்’ படத்தை தொடர்ந்து ‘இறைவன்’, ‘சைரன்’ போன்ற படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில், ஜெயம் ரவியின் அடுத்த படத்தின் இயக்குனர் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இவரின் அடுத்தப்படத்தை ‘வணக்கம் சென்னை’, ‘காளி’, ‘பேப்பர் ராக்கெட்’ போன்ற படங்களின் மூலம் கவனம் ஈர்த்த கிருத்திகா உதயநிதி இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. நித்யா மேனன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கவுள்ளதாகவும் ரெட் […]

உலகம்

தென்பசுபிக் கடலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – பல பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை

  • May 19, 2023
  • 0 Comments

தென் பசுபிக் கடலில் சற்று முன்னர் 7.7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பிஜி, வனுவாடு, நிவ் கலிடோனியா கடற்கரைப் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது எனினும் இலங்கைக்கு இந்த நிலநடுக்கம் காரணமாக எதுவித பாதிப்பும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

இலங்கை

வலி நிவாரணி மாத்திரைகளை உட்கொள்வதால் ஆபத்து – இலங்கையர்களுக்கு எச்சரிக்கை

  • May 19, 2023
  • 0 Comments

டெங்கு நோய் நிவாரணியாக Non-steroidal anti-inflammatory drugs வகை வலி நிவாரணி மாத்திரைகளை உட்கொள்வதால் மரணங்கள் சம்பவிக்கலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுகாதார ஊக்குவிப்பு செயலகம் இது தொடர்பில் பொதுமக்களை எச்சரித்துள்ளது. கடும் காய்ச்சல் மற்றும் அதிக உடல்வலி மற்றும் பாரிய தலைவலி காரணமாக மக்கள் மேற்படி வலி நிவாரணி மாத்திரைகளை உட்கொண்டு வருவதாகவும் அதனால் சில மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும் அச்செயலகம் பொதுமக்களை எச்சரித்துள்ளது. இதுபோன்ற வலி நிவாரணிகளை நோயாளர் பெற்றுக் கொள்வதானால், மருத்துவர்களின் ஆலோசனை இல்லாமல் […]

இலங்கை

கொழும்பு வாழ் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

  • May 19, 2023
  • 0 Comments

கொழும்பில் இன்று இரவு முதல் 10 மணித்தியாலங்களுக்கு நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை இதனை தெரிவித்துள்ளது. அதன்படி, கொழும்பின் பல பகுதிகளுக்கு இன்று இரவு 10.00 மணி முதல் நாளை காலை 08.00 மணி வரை நீர் விநியோகம் தடைப்படும். கோட்டே மற்றும் கடுவெல நகரசபை பகுதிகளுக்கும் மஹரகம மற்றும் பொரலஸ்கமுவ நகரசபை பகுதிகளுக்கும் நீர் விநியோகம் தடைப்படும். அத்துடன் கொழும்பு 04, 05, 07 மற்றும் […]

ஆசியா

சிங்கப்பூரில் 3 வாரங்களில் 2வது நபருக்கு தூக்கு தண்டனை!

  • May 19, 2023
  • 0 Comments

சிங்கப்பூரில் நேற்று மேலும் ஒருவர் தூக்கிலிடப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. கஞ்சா கடத்தல் வழக்கில் தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட தங்கராஜு சுப்பையா என்ற 46 வயதுடையவருக்கு கடந்த ஏப்ரல் 26-ம் திகதி சிங்கப்பூர் அரசு தூக்கு தண்டனை நிறைவேற்றியது. தங்கராஜிடம் இருந்து போதைப்பொருள் எதுவும் கைப்பற்றப்படவில்லை என்றாலும் கடத்தலை கையடக்க தொலைபேசி மூலம் ஒருங்கிணைத்ததாகக் கூறி அவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இந்த வழக்கில் கடுமையான தண்டனை வழங்கும் அளவுக்கு போதுமான ஆதாரங்கள் இல்லை என எதிர்ப்பு கிளம்பியது. […]

இலங்கை

இலங்கையில் அதிர்ச்சி – மகளை தாக்கி விசம் கொடுத்த தந்தை

  • May 19, 2023
  • 0 Comments

மஸ்கெலியா – மொக்கா தோட்டத்தில் தனது மகளை தாக்கி, விசம் கொடுத்ததற்காக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நபர் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேகநபரின் மூன்று பெண் பிள்ளைகள் பாதுகாப்பு நிமித்தம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கு ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. தாக்குதலுக்கு உள்ளான அவரின் மகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து, சந்தேகநபர் கடந்த 03 ஆம் திகதி கைது செய்யப்பட்டார். இந்நிலையில் தாக்குதலுக்கு உள்ளான 20 வயதான யுவதி […]

அறிவியல் & தொழில்நுட்பம்

டுவிட்டரைப் போல மாறும் பேஸ்புக் – மெட்டா நிறுவனம் அதிரடி அறிவிப்பு

  • May 19, 2023
  • 0 Comments

டுவிட்டரைப் போல ப்ளூடிக் சந்தா சேவையை பேஸ்புக்க்கின் தாய் நிறுவனமான மெட்டா அறிமுகப்படுத்தியுள்ளது. பிரபல சமூக வலைதளங்களான டுவிட்டர் தற்பொழுது உலகம் முழுவதும் பலரும் பயன்படுத்தக்கூடிய சமூக வலைதளமாக மாறிவிட்டது. இதற்கு முன்னதாக, இந்த டுவிட்டரை உபயோகம் செய்யும் சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட சில பயனர்களுக்கு மட்டுமே ப்ளூடிக் கொடுக்கப்பட்டது. ஆனால், டுவிட்டரை எலான் மஸ்க் வாங்கியவுடன் சந்தா செலுத்தினால் மட்டுமே ப்ளூடிக் வசதி உண்டு என்ற மாற்றத்தை கொண்டு வந்தார். அதிலிருந்து, பயனர்கள் […]

கருத்து & பகுப்பாய்வு

தினசரி பயன்படுத்தும் பல பொருட்களில் ஆபத்தான இரசாயனங்கள் – மக்களுக்கு எச்சரிக்கை

  • May 19, 2023
  • 0 Comments

தினசரி பயன்படுத்தப்படும் 100க்கும் அதிகமான பொருள்களில் ஆபத்தான இரசாயனங்கள் இருப்பதாக ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது. சவர்க்காரம், ஷெம்போ எனும் முடியைக் கழுவும் திரவம் முதல் பாத்திரம் கழுவும் திரவம், சலவைக்குப் பயன்படுத்தப்படும் சவர்க்காரம் வரையிலான பொருள்களில் இரசாயனம் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. Environmental Science & Technology சஞ்சிகையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டது. அமெரிக்காவின் California பல்கலைக்கழகம், Silent Spring Institute எனும் சுகாதார ஆய்வு அமைப்பு ஆகியவை California மாநிலத்தின் தகவல் தளங்களை ஆராய்ந்தன. குறிப்பாக, காற்றில் எளிதில் […]

அறிந்திருக்க வேண்டியவை

உலகிலேயே அதிக விலை – கின்னஸ் சாதனை படைத்த ஐஸ்கிரீம்

  • May 19, 2023
  • 0 Comments

ஜப்பானிய ஐஸ்கிரீம் ‘பைகுயா’ கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளது. உலகின் மிக விலையுயர்ந்த ஐஸ்கிரீம் என்ற சாதனையை அந்த ஐஸ்கிரீம் படைத்துள்ளது. ஜப்பானிய ஐஸ்கிரீம் பிராண்டான செல்லாடோ தயாரித்த ‘பைகுயா’ உலகின் விலை உயர்ந்த ஐஸ்கிரீம் என, கின்னஸ் உலக சாதனை படைத்ததாக அறிவித்தன. இதன்விலை சுமார் 873,400 ஜப்பானிய யென் மதிப்பாகும். இத்தாலியின் அல்பாவில் வளர்க்கப்படும் ஒருவகை அரிய வெள்ளை நிற பாசிகளைக் கொண்டு இந்த பைகுயா ஐஸ்கிரீம் தயாரிக்கப்படுவது தான் இதன் விலை அதிகமாக […]

ஆசியா

சிங்கப்பூரில் வாழும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு வெளியான தகவல்

  • May 19, 2023
  • 0 Comments

சிங்கப்பூரில் வாழும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு வழங்கப்படும் உணவு குறித்து ஏதேனும் புகார் இருப்பின் அறிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. FAST குழு அதிகாரிகளிடம் இது குறித்து தெரிவிக்கலாம் என MOM தெரிவித்துள்ளது. அனைத்து விடுதிகளிலும் சோதனை கண்காணிப்பு தொடர்ந்து வழக்கம்போல நடைபெறுவதாக மனிதவள அமைச்சர் டான் சீ லெங் கூறினார். விடுதிகளில் உள்ள சமையலறை சுத்தம் மற்றும் ஒழுங்குமுறை சரியாக உள்ளதா என்பதையும் கண்காணிப்பதாக அவர் கூறினார். வெளி இடங்களில் இருந்து உணவுகளை வாங்கும்போது முறையாக உரிமம் பெற்ற […]

You cannot copy content of this page

Skip to content