மீண்டும் மன்னிப்பு கோரினார் போதனர் ஜெரோம் பெர்னாண்டோ
மத நல்லிணக்கத்தை பாதிக்கும் வகையில் கருத்து வெளியிட்ட போதனர் ஜெரோம் பெர்னாண்டோ, பௌத்த, இந்து, இஸ்லாமிய மக்களிடம் மீண்டும் மன்னிப்பு கோரியுள்ளார். நுகேகொட மிரிஹான பிரதேசத்தில் அமைந்துள்ள விழா மண்டபம் ஒன்றில் நேற்று (26) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சமய விரிவுரையில் கலந்துகொண்ட அவர் மன்னிப்பு கேட்டுக்கொண்டார். போதகர் ஜெரோம் பெர்னாண்டோ ஒரு சமயப் பிரசங்கத்தில் தெரிவித்த கருத்து, புத்தர் மற்றும் பிற மத நம்பிக்கைகளை அவமதித்ததாக பல தரப்பினரும் குற்றம் சாட்டி நாட்டில் பெரிதும் பேசப்பட்டது. அதன்படி […]