ஐரோப்பா

முட்டை வெடித்ததால் பிரித்தானிய பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்..!

  • May 30, 2023
  • 0 Comments

பிரித்தானியாவில் மைக்ரோவேவில் முட்டையை வேகவைத்து எடுத்தபோது வெடித்ததில் பெண்ணின் முகம் ஒருபக்கமாக சிதைந்தது. பிரித்தானியாவின் கிரேட்டர் மான்செஸ்டரின் போல்டனில் வசிப்பவர் ஷாஃபியா பஷிர். 37 வயதான இவர் இணையத்தில் பிரபலமான நுட்பத்தை பயன்படுத்தி முட்டையை வேக வைத்து சாப்பிடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். Microwaved Poached Egg என்னும் இந்த முறையில், கண்ணாடி கிண்ணம் அல்லது குவளை ஒன்றில் பாதியளவு சாதாரண நீரை ஒற்றி, அதில் பச்சை முட்டையை ஊற்றி உப்பு சேர்த்து மைக்ரோவேவில் ஒரு நிமிடம் வேகவைத்து […]

இலங்கை

சமூக ஊடகங்கள் மூலம் இனங்களுக்கு இடையில் பதற்றத்தை ஏற்படுத்த முயற்சி!

  • May 30, 2023
  • 0 Comments

சமூக ஊடகங்கள் மூலம் இனங்களுக்கு இடையில் பதற்றத்தை ஏற்படுத்த பல்வேறு குழுக்கள் மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தேசிய பாதுகாப்புச் சபைக்கு அண்மையில் தெரிவிக்கப்பட்டதாக அமைச்சரவைப் பேச்சாளர்  அமைச்சர் பந்துல குணவர்தன இன்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் பேசிய அவர்  ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் இருந்து அரசாங்கம் பாடம் கற்றுக்கொண்டதாக குறிப்பிட்டுள்ளார். ஆகவே இவ்வாறான செயற்பாடுகளுக்கு தீர்வு காண தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்கும் […]

இலங்கை

மட்டக்களப்பில் இருந்து வெளிநாடு செல்பவர்களுக்கு எச்சரிக்கை!

  • May 30, 2023
  • 0 Comments

மட்டக்களப்பில் வெளிநாட்டு வேலைவாய்பு என கூறிஇ போலி முகவர்கள் பலர் மக்களிடம் இலட்சக்கணக்கில் பணங்களை பெற்றுக் கொண்டு ஏமாற்றிய சம்பவங்கள் பதிவாகியுள்ளன. ஒரு மாத்தில் மட்டும் 4 முறைப்பாடு கிடைத்துள்ள நிலையில்  போலி முகவர் ஒருவர் கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். ஆகவே போலி வெளிநாட்டு முகவர்கள் தொடர்பாக பொதுமக்கள் அவதானமாகவும் விழிப்பாக செயற்படுமாறு மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் கோரியுள்ளனர். வெளிநாடு செல்வதாக இருந்தால் மட்டக்களப்பு பொது சந்தை கட்டிடத்திலுள்ள அரச வெளிநாட்டு […]

இலங்கை

ஒரு பில்லியன் கடனை நீட்டிக்க இந்தியாவிடம் இலங்கை ஒப்பந்தம்!

  • May 30, 2023
  • 0 Comments

அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்காக இந்தியா வழங்கிய 1 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் உதவியை ஒரு வருட காலத்திற்கு நீடிப்பதற்கான ஒப்பந்தத்தில் இலங்கை இன்று கைச்சாத்திட்டுள்ளது. இந்திய ஸ்டேட் வங்கியின் அதிகாரிகளின் பங்கேற்புடன் இந்த ஒப்பந்தம் கைச்சாத்தானது என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க உறுதிப்படுத்தியுள்ளார். முன்னதாக இதற்கான ஆரம்ப ஒப்பந்தம் 2023 மார்ச்சில் கைச்சாத்திடப்பட்டதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். இந்தியா வழங்கிய 1 பில்லியன் டொலர் கடனில் இருந்து […]

வட அமெரிக்கா

ப்ளோரிடா மாகாணத்தில் துப்பாக்கிச்சூடு- 3 குழந்தைகள் உட்பட 9 பேர் காயம்

  • May 30, 2023
  • 0 Comments

அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 3 குழந்தைகள் உட்பட 9 பேர் படுகாயம் அடைந்தனர். ஹாலிவுட் என்ற பகுதியிலுள்ள கடற்கரை நடைபாதையில் இரு பிரிவினர் இடையே ஏற்பட்ட மோதலில் இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்துள்ளது. இதில் ஈடுபட்ட ஒருவர் தப்பிய நிலையில் மற்றொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐரோப்பா

ரஸ்ய தலைநகர் மொஸ்கோவில் ஆளில்லா விமானதாக்குதல்கள்!

  • May 30, 2023
  • 0 Comments

ரஸ்ய தலைநகர் மொஸ்கோவில் ஆளில்லா விமானதாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன. ஆளில்லா விமானதாக்குதல்கள் காரணமாக கட்டிடங்களிற்கு சிறிய சேதங்கள் ஏற்பட்டுள்ளன மொஸ்கோவை நோக்கி வந்த பல ஆளில்லா விமானங்களை சுட்டுவீழ்த்தியுள்ளதாக ரஸ்ய பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. எனினும் இந்த ஆளில்லா விமானங்கள் எங்கிருந்து அனுப்பப்பட்டன என்பது குறித்த விபரங்கள் இன்னமும் வெளியாகவில்லை. ரஸ்ய தலைநகர் மீது புகைமண்டலங்களையும் உடைந்த ஜன்னல் கண்ணாடிகளையும் காண்பிக்கும் படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.

ஆஸ்திரேலியா

அவுஸ்திரேலியாவிலுள்ள பௌத்த விகாரைக்குள் நடந்தேறிய திருட்டு சம்பவம்

  • May 30, 2023
  • 0 Comments

அவுஸ்திரேலிய அடிலெய்டில் உள்ள இலங்கையின் பௌத்த விகாரைக்குள் பிரவேசித்த ஒருவர் வழிபாட்டாளர்கள் வழங்கிய பணத்தை திருடிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. இதன் போது அவர் 3000 அவுஸ்திரேலியா டொலர்களை திருடிச்சென்றுள்ளமை சீசீடிவி கமராவில் மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்நிலையில், அவர் ஏற்கனவே தெற்கு அவுஸ்திரேலியாவில் உள்ள மற்றொரு விகாரையில் அண்மையில் பணத்தை திருடியவர் என்பதும் தெரியவந்துள்ளது.இவ் விகாரையில் இருந்து அவர் 800 டொலர்களை திருடிச்சென்றதாக முறையிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பொழுதுபோக்கு

“மாமன்னன்” படம் தொடர்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது படக்குழு

  • May 30, 2023
  • 0 Comments

தமிழ் திரையுலகில் தயாரிப்பாளராக அறிமுகமாகி தனது ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் மூலம் பல்வேறு பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்தவர் உதயநிதி ஸ்டாலின். பின்னர் ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான உதயநிதி, தொடர்ந்து சினிமாவில் 10 ஆண்டுகளுக்கு மேலாக நடிகராக ஜொலித்து வந்தார். இதையடுத்து அரசியலில் எண்ட்ரி கொடுத்த உதயநிதி, தற்போது அமைச்சர் ஆனதால், இனி சினிமாவில் நடிக்க மாட்டேன் என்று அதிரடியாக அறிவித்தார். உதயநிதி கடைசியாக நடித்த திரைப்படம் மாமன்னன். […]

வட அமெரிக்கா

கனடாவில் வாத்துக்களை காப்பாற்ற நினைத்தவருக்கு 8 மாத சிறைத்தண்டனை

  • May 30, 2023
  • 0 Comments

கனடாவில் வீதியை கடந்த வாத்துக் குடும்பம் ஒன்றை காப்பாற்றும் நோக்கில் வீதி தடத்தை மாற்றிய ட்ரக் சாரதிக்கு எட்டு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ட்ரக் வண்டியை செலுத்திய போது எதிரில் வாத்துக் குடும்பம் ஒன்று வீதியை கடப்பதனை அவதானித்த சாரதி, தான் செல்ல வேண்டிய வீதி தடத்திலிருந்து விலகி மாற்று வீதித் தடத்தில் வண்டியை செலுத்தியுள்ளார். இதன் போது எதிரில் வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று ட்ரக் வண்டியில் மோதுண்டுள்ளது. இதனால் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் […]

பொழுதுபோக்கு

விவாகரத்தான நடிகருக்கு சாய் பல்லவி மீது ஒருதலைக் காதல்!!

  • May 30, 2023
  • 0 Comments

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் சாய் பல்லவி, மீது தனக்கு கிரஷ் இருப்பதாக விவாகரத்தான நடிகர் ஒருவர் பேட்டி ஒன்றில் கூறி உள்ளார். தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருப்பவர் சாய் பல்லவி. இவர் கடந்த 2015- ஆண்டு அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் மலையாளத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன பிரேமம் படம் மூலம் நடிகையாக காலடி எடுத்து வைத்தார். முதல் படத்திலேயே சாய் பல்லவி இளசுகளின் கிரஷ் லிஸ்ட்டில் இணைந்து விட்டார். […]

You cannot copy content of this page

Skip to content