இந்தியா

வீட்டை உடைத்து தங்க நகைகளை கொள்ளை! பொலிஸார் விடுத்துள்ள கோரிக்கை

கோவை சரவணம்பட்டி காவல் நிலையத்திற்கு உட்பட்ட கணபதி பகுதியை சேர்ந்தவர் பிரேம்குமார். இவர் டைல்ஸ் கடை மற்றும் பேக்கரி நடத்தி வருகிறார். இவர் கடந்த 26ம் திகதி குடும்பத்துடன் சிவகங்க்கைக்கு சென்று விட்டு 28ம் திகதி வீட்டிற்கு திரும்பி வந்து பார்க்கையில் வீட்டின் முன்புற கதவு உடைக்கப்பட்டு இருந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பிரேம்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் வீடிற்கு உள்ளே சென்று பார்த்தபோது அலுமாரியில் வைக்கப்பட்டிருந்த துணிகள் எல்லாம் களைக்கப்பட்டு நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டிருந்துள்ளது. […]

இலங்கை

சிறுமியை துஷ்பிரயோகம் செய்த தந்தை மற்றும் சகோதரர்! பொலிஸார் தீவிர விசாரணை

எழுவன்குளம பிரதேசத்தில் 16 வயது சிறுமி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் இருவரை தேடி வனாத்தவில்லுவ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 53 மற்றும் 14 வயதுடைய சந்தேகநபர்கள் பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை மற்றும் சகோதரர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அதன்படி, சிறுமியிடம் விசாரணை நடத்தியதில், இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் இருவரும் தொடர்ந்து துஷ்பிரயோகம் செய்தது தெரியவந்தது. சிறுமியின் தாயார் மிகவும் இளம் வயதிலேயே உயிரிழந்துள்ளதாகவும், பின்னர் அவர் தனது தந்தை […]

பொழுதுபோக்கு

‘குஷி’ படத்தின் முதல்நாள் வசூல் விபரங்கள் வெளியாகின…

  • September 2, 2023
  • 0 Comments

சமந்தா, விஜய் தேவரகொண்டா இணைந்து நடித்து நேற்று வெளியான படம் ‘குஷி’. இந்த படத்தை ஷிவா நிர்வானா இயக்கியிருந்தார். பான் இந்திய படமாக வெளியான இந்த படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகி ரசிகர்களை வாய் பிளக்க வைத்துள்ளது. தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியான குஷி படம் முதல் நாள் வசூலாக உலகம் முழுவதும் 30 கோடியை வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. படம் வெளியான முதல் நாளில் இத்தனை […]

இலங்கை

மெனிங்கோகோகல் தொற்று பெரும்பாலும் வீட்டுக்குள்ளேயே அதிகளவில் பரவும்!

  • September 2, 2023
  • 0 Comments

மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம்  நடத்திய சோதனைகளின்படி, இதுவரை இரண்டு ‘மெனிங்கோகோகல்’ தொற்றுகள் மட்டுமே பதிவாகியுள்ளதாக  சுகாதார அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது. இது தொடர்பில் கருத்து தெரிவித்த சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன, கொழும்பு மாவட்டத்தில் பாக்டீரியா தொற்று பரவியுள்ளதாக அண்மையில் வெளியான ஊடகச் செய்திகளை மறுத்துள்ளதோடு, இதுவரை இரண்டு தொற்றுக்கள் மட்டுமே பதிவாகியுள்ளதாகவும், அதில் ஒன்று காலியில் பதிவாகியுள்ளதாகவும் தெரிவித்தார். இரண்டாவது நோயாளி ஜா-எல பிரதேசத்தில் வசிப்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார், அவர் தற்போது […]

வட அமெரிக்கா

சர்ச்சைக்குரிய வெடி பொருட்களை உக்ரைனுக்கு வழங்கவுள்ள அமெரிக்கா

  • September 2, 2023
  • 0 Comments

யுரேனியம் அடங்கிய சர்ச்சைக்குரிய வெடி பொருட்களை அமெரிக்கா முதன்முறையாக உக்ரேனுக்கு வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உக்ரேனுக்கான புதிய உதவிகள் தொடர்பான தகவல்கள் அடுத்த வாரம் அறிவிக்கப்படும் என இரண்டு அமெரிக்க அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உதவி 240 முதல் 375 மில்லியன் அமெரிக்க டொலர் வரை பெறுமதியுடையவை என தெரிவிக்கப்படுகிறது. அத்தோடு உதவியில் உள்ளடக்கப்படும் விடயங்கள் தொடர்பில் அமெரிக்கா இன்னும் இறுதி செய்யவில்லை எனவும் தகவல்கள் குறிப்பிடுகின்றன.எனினும் இந்த விடயம் தொடர்பில் வெள்ளை மாளிகை இதுவரையில் பதிலளிக்கவில்லை.

பொழுதுபோக்கு

தளபதி 68 படத்திற்கு ஓகே சொன்ன நடிகை.. யார் தெரியுமா?

  • September 2, 2023
  • 0 Comments

லோகேஷ்- விஜய் கூட்டணியில் உருவாகி இருக்கும் லியோ படம் வரும் அக்டோபர் 19ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்த படத்திற்கு பிறகு அடுத்ததாக விஜய்- வெங்கட் பிரபு கூட்டணியில் தளபதி 68 படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக யார் நடிக்கப் போகிறார் என்பது தற்போது தெரியவந்துள்ளது. விஜய் தளபதி 68 படத்தில் தந்தை, மகன் என இரண்டு கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.  இந்நிலையில் விஜய்யின் தந்தை கேரக்டருக்கு ஜோடியாக யார் நடிக்கப் போகிறார்கள் என்பதுதான் இப்போது […]

இலங்கை

நாட்டில் 8 மாவட்டங்களுக்கு அதிக அபாய மழை எச்சரிக்கை!

நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழையின் தீவிரம் காரணமாக, தீவின் தென்மேற்குப் பகுதியில் நிலவும் மழை நிலைமையை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என எதிர்வுகூறப்பட்டுள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, கம்பஹா, கேகாலை, கொழும்பு, களுத்துறை, இரத்தினபுரி, காலி, மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை உள்ளிட்ட எட்டு மாவட்டங்களுக்கு அதிக அபாய நிலை (சிவப்பு) எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இடியுடன் கூடிய மழையின் போது […]

வட அமெரிக்கா

அமெரிக்காவில் கர்ப்பிணியை துப்பாக்கியால் சுட்ட பொலிஸார்..!

  • September 2, 2023
  • 0 Comments

அமெரிக்காவில் வணிக வளாகத்தில் திருடியதாக குற்றம் சுமத்தப்பட்ட பெண்ணை பொலிஸார் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் ஓஹியோ வெஸ்டர்வில்லில் உள்ள க்ரோகர் வணிக வளாகத்தில் திருடியதாக குற்றம் சுமத்தப்பட்ட தாகியா யங் என்ற கர்ப்பிணி பெண் பொலிஸாரால் துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்த சம்பவத்தின் போது பிளெண்டன் டவுன்ஷிப் பொலிஸ் அதிகாரிகள் காரில் சாரதி இருக்கையில் அமர்ந்து இருந்த கர்ப்பிணியான தாகியா யங்-கை நெருங்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளது. அதில், தாகியா யங் நோக்கி […]

ஆசியா

கப்பல் ஏவுகணைகளை பரிசோதனை செய்த வடகொரியா!

  • September 2, 2023
  • 0 Comments

வடகொரியா கொரிய தீபகற்பத்தின் மேற்கு பகுதியில், பல கப்பல் ஏவுகணைகளை ஏவி பரிசோதனை செய்துள்ளதாக தென்கொரியா அறிவித்துள்ளது. ஏவுதல் பற்றிய கூடுதல் விவரங்கள் தென் கொரிய மற்றும் அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகளால் பகுப்பாய்வு செய்யப்பட்டு வருவதாக தென் கொரியாவின் கூட்டுப் படைத் தலைவர் ஒரு அறிக்கையில் கூறியுள்ளார். சமீபகாலமாக வடகொரிய அதிகளவிலான நீண்ட மற்றும் குறுகிய தூர ஏவுகணைகளை பரிசோதனை செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை

நாதனோடை மண் அகழ்வு பிரச்சனை-நேரில் சென்று பார்வையிட்ட MP செல்வராஜா கஜேந்திரன்

  • September 2, 2023
  • 0 Comments

திருகோணமலை வெருகல் பிரதேச செயலாளர் பிரிவு உட்பட்ட மணல் அகழ்வு பிரச்சனையை பார்வையிட பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் இன்று (02) விஜயமொன்றினை மேற்கொண்டுள்ளார். வெருகல்- பிரதேசத்திலுள்ள நாதனோடை பகுதியில் மணல் அகழ்வதினால் அணைக்கட்டு உடைப்பெடுக்கும். இதனால் ஒன்பது கிராம சேவையாளர் பிரிவைச் சேர்ந்த 13 ஆயிரம் பேர் பாதிக்கப்படலாம் என தெரிவித்து அப்பகுதியில் உள்ள மக்கள் தங்களது எதிர்ப்பினை வெளிப்படுத்தி வருகின்றனர்.இந்நிலையில் குறித்த நாதனோடை பகுதியில் மணல் அகழ்வதற்கு அனுமதிக்கப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஆனாலும் குறித்த […]