இலங்கை

இலங்கை சபாநாயகருக்கு ஐக்கிய நாடுகளின் வதிவிட பிரதிநிதி வாழ்த்து!

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு ஐக்கிய நாடுகளின் வதிவிட பிரதிநிதி மார்க் அண்ட்ரே ப்ரான்ச்சே வாழ்த்து தெரிவித்துள்ளார். ஊழல் எதிர்ப்பு சட்டம் நிறைவேற்றப்பட்டமை நாடாளுமன்ற பாதீட்டு அலுவலகம் ஸ்தாபிக்கப்பட்டமை தொடர்பிலே ஐக்கிய நாடுகளின் வதிவிட பிரதிநிதி மார்க் அண்ட்ரே ப்ரான்ச்சே வாழ்த்து தெரிவித்துள்ளார். ஊழலை தடுப்பதற்கும், பாதீட்டு அலுவலகத்தின் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கும் ஐக்கிய நாடுகள் சபை புதிய ஒத்துழைப்பு வேலைத்திட்டத்தின் ஊடாக அடுத்த ஐந்து வருடங்களுக்கு 300 மில்லியன் டொலர்களை வழங்க தயாராக உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார் […]

இலங்கை

இலங்கையில் இருந்து 02 இலட்சம் பேர் வெளியேற்றம்!

  • September 4, 2023
  • 0 Comments

2023 ஆம் ஆண்டின் முதல் 8 மாதங்களில் 200,387 இலங்கையர்கள் வேலைக்காக வெளிநாடு சென்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு வெளிநாடுகளுக்கு வேலைக்காக சென்றவர்களில்  113,635 ஆண் தொழிலாளர்களும், 86,752  பெண் தொழிலாளர்களும் உள்ளடங்குகின்றனர். பெரும்பாலான இலங்கையர்கள் சவுதி அரேபியாவிற்கு வேலைக்காக வெளிநாடு சென்றுள்ளனர்.  இரண்டாவதாக, குவைத்திற்கும், மூன்றாவதாக கட்டாருக்கும் நான்காவதாக ஐக்கிய இராச்சியத்திற்கும் தொழிலுக்காக சென்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை 47,796 பேர் மாத்திரமே வீட்டு பராமரிப்பு உதவியாளர் பதவிக்கு வெளியேறியுள்ளனர். மாவட்டங்களைப் பொறுத்தமட்டில், கொழும்பு மாவட்டத்திலிருந்து பெரும்பாலானோர் வெளிநாடுகளுக்கு வேலைக்காக இடம்பெயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசியா

வயிற்றுவலியால் தவித்த 10மாத குழந்தை: மருத்துவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

  • September 4, 2023
  • 0 Comments

பாகிஸ்தானில் வயிற்றுவலியால் அவதியுற்றுவந்த குழந்தை ஒன்றை பரிசோதித்த மருத்துவர்கள், அதன் வயிற்றில் கட்டி ஒன்று இருக்கலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளனர். அந்த 10 மாதக் குழந்தை, கடும் வயிற்றுவலியால் அவதியுற்றுவந்துள்ளாள். அவளைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவளுக்கு ஸ்கேன் ஒன்று எடுக்கலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளனர்.அதன்படி அவளுக்கு ஸ்கேன் எடுக்கப்பட்டுள்ளது. ஸ்கேனில், அவளது வயிற்றில் கட்டி ஒன்று இருப்பது தெரியவந்ததால், குழந்தைக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்வது என முடிவாகியுள்ளது. குழந்தையின் வயிற்றில் அறுவை சிகிச்சை செய்து அந்தக் கட்டியை […]

இலங்கை

திருகோணமலை மாவட்ட மாணவர்களுக்கு நியாயம் வழங்குவதில் செந்தில் தொண்டமான் தோல்வி கண்டுள்ளார்!- இம்ரான் எம்.பி

கிழக்கு மாகாண கல்வித் துறையினரால் திருகோணமலை மாவட்ட மாணவர்களுக்கு இழைக்கட்டு வரும் அநீதியைக் கழைந்து நியாயம் வழங்குவதில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான தோல்வி கண்டுள்ளார் என திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இ;ம்ரான் மகரூப் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு இந்தக் கருத்தைத் தெரிவித்த அவர் மேலும் கூறியுள்ளதாவது, கிழக்கு மாகாணத்தில் சில பாடங்களுக்கு போதுமான அளவு அல்லது மேலதிக ஆசிரியர்கள் இருப்பதாக் குறிப்பிடப்படுகின்ற போதிலும் திருகோணமலை மாவட்டத்தில் தொடர்ச்சியாக ஆசிரியர் பற்றாக்குறை நிலவி வருகின்றது. எனவே, […]

இலங்கை

கட்சி என்ற ரீதியில் உடன்படவில்லை, ஆனால் மக்களுக்காகவே செய்கிறோம் – சாகர!

  • September 4, 2023
  • 0 Comments

கட்சி என்ற ரீதியில் நாம் உடன்படாவிட்டாலும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் மக்கள் கேட்டதை பெற்றுக் கொள்கின்றோம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். இன்று (04.09) நடைபெற்ற வாரந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “மக்கள் சலுகைகளை கோரவில்லை. அதிக வரி விதிக்க வேண்டும் என்றும் வரி வசூலை குறைக்க வேண்டாம் என்றும் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்தனர்.  எனவே அந்த […]

இலங்கை

துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்ட இராணுவ சிப்பாய்! பின்னணியில் வெளியான காரணம்

பளை இயக்கச்சி இராணுவ முகாம் ஒன்றிலிருந்து T-56 ரக துப்பாக்கி மற்றும் நான்கு மகசீன்களுடன் குருநாகல் பிரதேசத்தில் உள்ள தனது வீட்டுக்குச் செல்ல முற்பட்ட இராணுவ சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த இராணுவ சிப்பாய் மாங்குளம் புகையிரத நிலையத்தில் வைத்து இன்று (04) கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாதாவது, இயக்கச்சி முகாம் ஒன்றில் பணியாற்றும் இராணுவ சிப்பாய் ஒருவர் விடுமுறையில் வீட்டுக்குச் செல்லும் வேளையில் தனது T-56 ரக துப்பாக்கியையும் எடுத்துச் சென்றுள்ளார். […]

ஆசியா

5வது மாடி ஜன்னல் கம்பியில் சிக்கி உயிருக்கு போராடிய குழந்தை… போராடி மீட்ட இளைஞர்கள்!

  • September 4, 2023
  • 0 Comments

சீனாவில் 5 மாடி ஜன்னல் கம்பியில் குழந்தை ஒன்று சிக்கி உயிருக்குப் போராடிய சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு அக் குழந்தையை இளைஞர்கள் சிலர் மீட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சோங்கிங் பகுதியில் உள்ள அடுக்கு மாடிக்குடியிருப்பின் 5வது தளத்தின் ஜன்னல் பகுதிக்கு வந்த குழந்தை ஒன்று அங்கு தடுப்புக்காக வைக்கப்பட்டிருந்த கம்பிக்குள் விழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அக் குழந்தையின் கழுத்துப் பகுதி சிக்கிக் கொண்ட நிலையில் குழந்தை உயிருக்குப் போராடியது. இதனைக் கண்ட பக்கத்து வீட்டைச் சேர்ந்த […]

இலங்கை

திருகோணமலையில் யானை தாக்குதலுக்கு இலக்காகி படுகாயமடைந்த குடும்பஸ்தர்!

  • September 4, 2023
  • 0 Comments

திருகோணமலை -மொரவெவ, நாமல்வத்தை காட்டுப்பகுதியில் கால்நடைகளை காவல்காத்து வந்த இரண்டு பிள்ளைகளின் தந்தை காட்டு யானையின் தாக்குதலுக்குள்ளாகி படுகாயமடைந்துள்ளார். இச்சம்பவம் இன்று (04) அதிகாலை இடம்பெற்றுள்ளது. மொரவெவ பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட நாமல்வத்தை காட்டுப்பகுதியில் கால்நடைகளை காவல்காக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஒருவரை இன்று (04) அதிகாலை காட்டு யானை தாக்கியுள்ளது. இத்தாக்குதலில் அதே இடத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான டபிள்யூ. நியாஸ் ( 42) என்பவரே படுகாயமடைந்துள்ளார். படுகாயமடைந்தவர் மஹாதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் […]

ஆஸ்திரேலியா

அண்டார்டிகாவில் இருந்து நோய்வாய்ப்பட்ட ஆராய்ச்சியாளரை மீட்ட ஆஸ்திரேலியா

  • September 4, 2023
  • 0 Comments

உறைபனியால் மூடப்பட்ட அண்டார்டிகாவில் நிரந்தர குடிமக்கள் கிடையாது. பல்வேறு நாடுகள் ஆராய்ச்சி மையங்களை அமைத்துள்ளன. அதில் ஆராய்ச்சியாளர்கள் தங்கியிருந்து ஆராய்ச்சி மேற்கொள்கின்றனர். இங்குள்ள சீதோஷ்ண நிலையில் தங்கியிருந்து பணியாற்றுவது மிகவும் சவாலான விஷயமாகும். இந்நிலையில் அண்டார்டிகாவின் தொலைதூர பகுதியில் உள்ள கேசி ஆராய்ச்சி நிலையத்தில் தங்கியிருந்த ஆஸ்திரேலிய ஆராய்ச்சியாளருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. தொடர்ந்து அவரால் சமாளிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து அவரை மீட்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. பனிக்கட்டிகளை உடைத்து முன்னேறி செல்லும் கப்பலில் மருத்துவ மீட்புக் […]

வட அமெரிக்கா

பல்பொருள் அங்காடிகளில் அதிகரிக்கும் திருட்டு! அமெரிக்க நிறுவனங்கள் கவலை

அமெரிக்காவில் உள்ள பல்பொருள் அங்காடிகளில் டூத்பேஸ்ட், சாக்லேட், வாஷிங் பவுடர் உள்ளிட்ட பொருட்களை வாடிக்கையாளர்கள் திருடுவது அதிகரித்து வருவதாக, வால்மார்ட், டார்கெட் உள்ளிட்ட முன்னணி சில்லறை வர்த்தக நிறுவனங்கள் கவலை தெரிவித்துள்ளன. சில வாடிக்கையாளர்கள் வன்முறையில் ஈடுபட்டு திருட்டில் ஈடுபடுவதாகவும் புகார் எழுந்துள்ளது. இதுபோல சிவிஎஸ் மற்றும் வால்கிரீன்ஸ் உள்ளிட்ட சங்கிலிதொடர் மருந்து விற்பனை நிறுவனங்கள், வீட்டு மேம்பாட்டு நிறுவனமான ஹோம் டெப்போ மற்றும் காலணி விற்பனையாளரான புட் லாக்கர் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த சில்லறை […]