இலங்கை

இலங்கையில் 500 நாட்களாக தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளி!

  • September 5, 2023
  • 0 Comments

ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் விபத்தினால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த மூத்த நடிகர்  ஜாக்சன் அந்தோணி 500 நாட்களாக தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள  அரசாங்க வைத்திய அதிகாரிகள் மன்றத்தின் தலைவர் ருக்ஷான் பெல்லான  “நாட்டின் பிரதான தீவிர சிகிச்சைப் பிரிவில் 500 நாட்கள் ஒரு நோயாளிக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் தீவிர சிகிச்சை பெற முடியாமல் பலர் உயிரிழப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். இதன்படி, இந்த நோயாளி தொடர்பில் விரைவில் முடிவெடுக்கப்பட […]

பொழுதுபோக்கு

தனது முதல் காதலி பற்றிய இரகசியத்தை கூறிய தனுஷ்….

  • September 5, 2023
  • 0 Comments

இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதை கட்டிப்போட்டவர் தனுஷ். தற்போது தனது 50வது படத்தை இயக்கி நடித்து வருகிறார். இதில் எஸ்.ஜே.சூர்யா, சந்தீப் கிஷன், அபர்ணா பாலமுரளி, காளிதாஸ் ஜெயராம், துஷரா விஜயன் மற்றும் பலர் நடித்து வருகின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு தற்போது சென்னையில் வட சென்னை பாணியில் அரங்கம் அமைத்து விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதில் நித்யா மேனன் நடித்து வருவதாக தகவல் வந்தது. இப்படத்தை அடுத்து பல முன்னணி இயக்குனர்கள் […]

இலங்கை

மட்டு வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழகத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் 33 வது நினைவேந்தல் உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பு!

மட்டக்களப்பு வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழகத்திலிருந்து விசாரணைக்கென அழைத்துச் செல்லப்பட்டு வலிந்துகாணாமால் ஆக்கப்பட்டவர்களின் 33வது ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று வந்தாறுமூலை பல்கலைக்கழக வளாக முன்றலில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல்ஆக்கப்பட்டவர்களின் உறவினர் சங்கம் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழக கலை காலாசார பீட மாணவர் ஒன்றியம் இணைந்து ஏற்பாடு செய்த நினைவேந்தலில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர். இதன்போது சர்வதேச நீதிப்பொறிமுறையின கீழ் காணாமல்ஆக்கப்பட்டவர்களுக்கான நீதியைப்பெற்றுக்கொடுக்க வலியுறுத்தி அமைதியான முறையில் […]

ஐரோப்பா

ரஷ்ய தலைவரை சந்திக்கும் வடகொரிய தலைவர்!

  • September 5, 2023
  • 0 Comments

வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் உத்தியோகபூர்வ பயணமாக ரஷ்யா செல்லவுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உக்ரைன் போருக்கு தேவையான ஆயுதங்களை வடகொரியாவிடம் இருந்து பெற முடியுமா என்பது குறித்து இதன்போது விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இந்த பயணம் அடுத்தமாதம் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது.  இதற்காக கிம் ஜாங் உன் கவச ரயிலை பயன்படுத்துவார் என கணிக்கப்பட்டுள்ளது. அவர் இரு நாட்டு எல்லை வழியாக வந்து, அருகில் உள்ள ரஷ்ய நகரான விளாடிவோஸ்டோக்கில் அதிபர் புதினை சந்திப்பார் என்று தெரிவிக்கப்படுகிறது. […]

இலங்கை

க.பொ.த. உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள்: யாழ்ப்பாணம் இந்து கல்லூரி மாணவர்களின் புதிய அத்தியாயம்!

2022ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் கணிதம் மற்றும் உயிரியல் பிரிவுகளில் யாழ்ப்பாணம் இந்து கல்லூரி மாணவர்கள் புதிய அத்தியாயத்தை ஏற்படுத்தியுள்ளனர். பௌதிக பிரிவில் 6 மாணவர்களும் உயிரியல் பிரிவில் 5 மாணவர்களும் யாழ்ப்பாணம் மாவட்ட மட்ட தர நிலையில் இடம்பிடித்துள்ளனர். உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மாணவன் ஆனந்தஜோதி வித்தியாஷாகர் யாழ்ப்பாண மாவட்டத்தில் முதல் நிலையும் தேசிய மட்டத்தில் 9 நிலையும் பெற்றுள்ளார். கணிதப்பிரிவில் யாழ்ப்பாண மாவட்ட மட்டத்தில் ஸ்ரீபண்டாகரன் சினேகன் முதல் […]

இலங்கை

பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவருக்கு எதிராக பிடியாணை உத்தரவு!

  • September 5, 2023
  • 0 Comments

பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சார்ள்ஸ் நிர்மலநாதன் மற்றும் பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் சிவாஜிலிங்கம் ஆகியோருக்கு எதிராக யாழ் நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. இலங்கையின் சுதந்திர தினத்தன்று , யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கரிநாள் பேரணியில் கலந்து கொண்டு , அமைதிக்கு பங்கம் விளைவித்தனர் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் குறித்த நால்வரும் கைது செய்யப்பட்டு பின் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தனர். இந்நிலையில், அவர்களுக்கு எதிரான வழக்கு விசாரணை தொடர்ச்சிாக யாழ் நீதிமன்றத்தில்  நடைபெற்று வருகிறது. இதன்படி நேற்று […]

இலங்கை

மருத்துவச்சிகள் பற்றாக்குறையால் தாய் மற்றும் குழந்தை சுகாதார சேவைகள் ஆபத்தில்?

குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர்களுக்கு நிலவும் பற்றாக்குறையின் விளைவாக நாட்டில் தாய் மற்றும் குழந்தை சுகாதார சேவை வீழ்ச்சியடையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அரசாங்க குடும்ப சுகாதார சேவைகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. நாட்டில் சுமார் 3,000 மருத்துவச்சிகள் பற்றாக்குறை இருப்பதாக மருத்துவச்சிகள் சங்கத்தின் தலைவர் தேவிகா கொடித்துவக்கு தெரிவித்துள்ளார். மேலும், இவ்விடயம் தொடர்பில் உரிய அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்ட போதிலும் இதுவரையில் எந்தவொரு தீர்வும் வழங்கப்படவில்லை எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். “இந்தப் பற்றாக்குறை தொடருமானால், குடும்பச் சுகாதாரச் சேவையில் […]

இலங்கை

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து : ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிப்பு!

  • September 5, 2023
  • 0 Comments

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கஹதுடுவ பகுதியில் லொறி ஒன்று மற்றுமொரு லொறியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் லொறியின் சாரதி காயமடைந்த நிலையில், ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. லொறிக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதுடன், காயமடைந்த சாரதியின் கவனக்குறைவே விபத்து ஏற்பட காரணம் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர். சதர்ன் எக்ஸ்பிரஸ் கலனிகம போக்குவரத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கை

விஞ்ஞான பிரிவில் மாவட்ட ரீதியில் முதலிடம் பிடித்த ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரி மாணவி

  • September 5, 2023
  • 0 Comments

திருகோணமலை மாவட்டத்தில் விஞ்ஞான பிரிவில் ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரி மாணவி டேகா உமாசங்கர் முதலாவது இடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளார். எதிர்காலத்தில் சிறந்த வைத்திய நிபுணராக வருவதற்கு ஆசைப்படுவதாகவும் தனக்கு கற்பதற்கு உதவி அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் தெரிவித்தார். இதேவேளை திருகோணமலை ஸாஹிரா கல்லூரி மாணவி ஜகுபர் றிஸ்னி மாவட்டத்தில் இரண்டாம் இடத்தினையும் பெற்றுள்ளார். தந்தை கடற்றொழிலில் ஈடுபட்டு வருவதாகவும் திருகோணமலை ஸாஹிரா கல்லூரியில் விஞ்ஞான உயிரியல் பிரிவில் கல்வி கற்று வந்த […]

இலங்கை

மின்சார முச்சக்கரவண்டிகளை பதிவு செய்ய அனுமதி!

  • September 5, 2023
  • 0 Comments

மின்சார முச்சக்கரவண்டிகளை பதிவு செய்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கு அமைச்சரவைக் கூட்டத்தில் பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன. இதன்படி, வரைவினால் தயாரிக்கப்பட்ட சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் அனுமதி கிடைத்துள்ளது. மின்சார முச்சக்கரவண்டிகளின் உற்பத்தியிலும், பெட்ரோல் அல்லது டீசலில் இயங்கும் முச்சக்கரவண்டிகளை மின்சாரத்தில் இயக்குவதற்கும் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், மோட்டார் வாகனச் சட்டத்தின் விளக்கத்தின்படி, ஒரு மோட்டார் முச்சக்கரவண்டியின் கர்ப் எடை 500 கிலோவும், மொத்த எடை 1,000 கிலோவும் இருக்க வேண்டும். இதன்படி, மின்சார முச்சக்கரவண்டிகளை பதிவு செய்வதற்கு உள்ள […]