உலகம்

அரபிக்கடலில் உருவானது பிபோர்ஜாய் புயல்!

அரபிக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது 24 மணி நேரத்தில் தீவிர புயலாக வலுவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று (05.06.2023) மாலை 05:30 மணி அளவில் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியது. இன்று (06.06.2023) காலை 05:30 மணி அளவில் மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக குறித்த இடத்தில் நிலவி வருகிறது. இந்த […]

ஆசியா செய்தி

கார் குண்டுவெடிப்பில் ஆப்கானிஸ்தான் மாகாண ஆளுநர் பலி

  • June 6, 2023
  • 0 Comments

வடகிழக்கு ஆப்கானிஸ்தான் மாகாணத்தின் செயல் ஆளுநர் கார் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டுள்ளார், மாகாணத் தலைநகர் ஃபைசாபாத்தில், வடக்கு படாக்ஷானின் பொறுப்பு ஆளுநர் நிசார் அகமது அஹ்மதி சென்ற வாகனத்தின் மீது வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட காரை வெடிகுண்டு தாக்கியது. இத்தாக்குதலில் சாரதியும் கொல்லப்பட்டதுடன் மேலும் 6 பேர் காயமடைந்துள்ளனர். பல வாரங்களில் ஆப்கானிஸ்தானில் தலிபான் அதிகாரி மீது நடத்தப்பட்ட முதல் தாக்குதலான இந்த குண்டுவெடிப்பின் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை. மாகாணத்தின் கலாச்சாரம் மற்றும் தகவல் தலைவர் […]

இந்தியா

விரைவில் வெளியாகவுள்ள நீட் தேர்வு முடிவுகள்! வெளியான அறிவிப்பு

இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு கடந்த மாதம் 7ம் திகதி நடந்தது முடிந்தது. இத்தேர்வில், நாடு முழுவதும் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று தேர்வு எழுதினர். தமிழகத்தில் இருந்து ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். இந்நிலையில் நீட் தேர்வு முடிவுகள் வரும் 15ம் திகதி வெளியாகலாம் என தகவல் வெளியாகியிருக்கிறது. மணிப்பூர் கலவரம் காரணமாக மாணவர்களுக்கு தேர்வு தள்ளி வைக்கப்பட்டதால் தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது. நாடு முழுவதும் அரசு, தனியார் […]

உலகம்

ஜப்பானில் கட்டுமானத் துறையில் ஆண்களுக்கான வேலை வாய்ப்பு! வெளியான அறிவிப்பு

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) ஜப்பானில் கட்டுமானத் துறையில் ஆண்களுக்கான வேலை வாய்ப்புகளை தொடர்பான அறிவித்தலை வெளியிட்டுள்ளது. மேலும், விண்ணப்பப் படிவங்களை அதன் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.slbfe.lk இலிருந்து பெற்றுக்கொள்ள முடியும் என SLBFE அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தகுதியுடையவர்கள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தேவையான ஆவணங்களுடன் நாளை (7) மாலை 04.00 மணிக்கு முன்னதாக அமைச்சின் உத்தியோகபூர்வ titp@slbfe.lk என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கோரப்பட்டுள்ளது.

இந்தியா

அமெரிக்காவில் பணியாற்ற வழங்கப்படும் எச்-1பி விசா பெறுவதில் இந்தியர்களுக்கு தொடர்ந்தும் முதலிடம்

அமெரிக்காவில் வெளிநாட்டினர் தங்கி பணியாற்ற எச்-1பி விசா வழங்கப்பட்டு வருகிறது. இதில் இந்தியர்கள் அதிக அளவு பயன் அடைந்து வருகிறார்கள். தகவல் தொழில்நுட்பத்துறையில் பலர் எச்-1பி விசா மூலம் அமெரிக்காவுக்கு வேலைக்கு செல்கிறார்கள். இதற்கிடையே அமெரிக்காவில் 2022-ம் நிதியாண்டில் அமெரிக்க குடியுரிமை சேவைகள் துறை மூலம் 4.41 லட்சம் எச்-1பி விசாக்கள் வழங்கப்பட்டுள்ளன. . இதில் 3 லட்சத்து 20 ஆயிரத்து 791 விசாக்கள் இந்தியர்களுக்கு வழங்கப்பட்டு இருக்கிறது. இது 72.6 சதவீதமாகும். இதற்கு அடுத்தபடியாக சீனாவை […]

பொழுதுபோக்கு

ஹீரோவாக அவதாரம் எடுக்கும் சாண்டி மாஸ்டர் : இசையமைக்கும் ஏ.ஆர். ரஹ்மான்!

  • June 6, 2023
  • 0 Comments

சாண்டி மாஸ்டர் ஆரம்பத்தில் தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோவில் நடனமாடும் கலைஞர்களுக்கு டான்ஸ் மாஸ்டராக பணியாற்றி வந்தார். தற்போது  கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி சினிமாவில் உள்ள ஹீரோகளுக்கு கொரியோகிராபராக வந்தார். பின்பு பிக் பாஸில் பங்கேற்று ரசிகர்கள் மனதில் இவருக்கு என்று ஒரு இடத்தை பிடித்து விட்டார். அதை வைத்துக்கொண்டு பல பாடல்களுக்கும் ஹீரோகளுக்கும் டான்ஸ் சொல்லிக் கொடுத்து முன்னணி டான்ஸ் மாஸ்டராக வந்து விட்டார். இந்த சமயத்தில் தற்போது இவர் புது ரூட்டை ஒன்றை ஃபாலோ செய்கிறார். […]

இந்தியா

ஒடிசா புகையிரத விபத்தில் இறந்த ஒருவரின் உடலுக்கு உரிமை கோரும் பல குடும்பத்தினர்!

ஒடிசாவின் பாலசோரில் நடந்த புகையிரத விபத்தில் 275 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் உடல்களை கேட்டு வரும் குடும்பத்தினருக்கு உதவியாக புவனேஸ்வர் மாநகராட்சி மற்றும் மேற்கு வங்காள அரசு இணைந்து உதவி மையங்களை ஏற்படுத்தி உள்ளன. இது குறித்து புவனேஸ்வர் நகர துணை காவல் ஆணையாளர் பிரதீக் சிங் கூறுகையில், ஒரு உடலுக்கு பல குடும்பத்தினர் உரிமை கோரும் குழப்பமான நிகழ்வும் காணப்படுகிறது. இதுபோன்ற நேரத்தில் நாங்கள் மரபணு பரிசோதனைக்கு செல்கிறோம். அனைத்து உடல்களில் இருந்தும் மரபணு மாதிரிகளை […]

இலங்கை

இலங்கைக்குள் சட்டவிரோத துப்பாக்கிகளும் கொண்டுவரப்படுகின்றன -டிரான் அலஸ்!

  • June 6, 2023
  • 0 Comments

போதைப்பொருள் கடத்தலுடன் சட்டவிராேத துப்பாக்கிகளும் நாட்டுக்குள் கொண்டுவரப்படுவதாக பொது மக்கள் பாதுபாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்தார். விசேட அதிரடிப்படையின் சோதனையின் மூலம் கடந்த 3வருடங்களில் 1163 சட்டவிராேத துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பாராளுமன்றத்தில் இன்று (06) இடம்பெற்ற வாய்மொழிமூலமான கேள்வி நேரத்தின் போது ஆளும் கட்சி உறுப்பினர் சஞ்ஞீவ எதிரிமான்னவினால் கேட்கப்பட்ட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். நாட்டில் பல்வேறு பகுதிகளில் தற்போது மனித படுகொலைகள் உள்ளிட்ட பாரதூரமான குற்றச்செயல்கள் இடம்பெற்று […]

இலங்கை

சென்னை : இலங்கை சொகுசுக் கப்பல் – ஆயிரக்கணக்கான பயணிகளுடன் முதல் சேவை

சென்னை – இலங்கை இடையேயான பயணிகள் சொகுசுக் கப்பல் போக்குவரத்து நேற்று ஆரம்பிக்கப்பட்ட நிலையில், எம்.வி. எம்பிரஸ் (MS Empress) எனும் கப்பல் தனது முதல் பயணத்தை ஆரம்பித்து 1600 பயணிகளுடன் ஹம்பாந்தோட்டையை வந்தடைந்துள்ளது. இந்தியாவின் முன்னணி கப்பல் நிறுவனமான Cordelia Cruises உடன் ஏற்படுத்தப்பட்ட புதிய கூட்டிணைவின்படி, இந்த கப்பல் நேற்று (05) பிற்பகல் சென்னையில் இருந்து இலங்கைக்கு தனது பயணத்தை ஆரம்பித்தது. இந்தக் கப்பல் இலங்கையில் உள்ள ஹம்பாந்தோட்டை, திருகோணமலை, காங்கேசன்துறை ஆகிய 3 […]

ஆரோக்கியம் வாழ்வியல்

வெறும் காலில் நடப்பதால் நமக்கு கிடைக்கும் நன்மைகள்

  • June 6, 2023
  • 0 Comments

நடக்கும்போது அல்லது ஓடும் போது காலணிகள் அல்லது ஷூக்கள் அணிந்து செல்வதுதான் உலகம் முழுக்க மக்களின் வழக்கமாக இருக்கிறது. உண்மையில் வசதியாக நடப்பதற்காக ஷூக்களுக்கு அதிக பணத்தை செலவழிக்கும் வழக்கம் பலருக்கும் உள்ளது. ஆனால் வெறும் காலில் நடப்பதில் இருக்கும் நன்மைகள் பற்றி பலருக்கும் தெரியாது என்பதே உண்மை. வெறும் காலில் நடப்பது ‘எர்திங்’ அல்லது ‘கிரவுண்டிங்’ என்றும் அழைக்கப்படுகிறது, வெறுங்காலுடன் நடப்பது நமது சருமத்தை பூமியுடன் நெருங்கிய தொடர்பில் வைக்கிறது. இதன்மூலம் பூமியின் எதிர்மறை அயனிகள் […]

You cannot copy content of this page

Skip to content