ஆளும் கட்சியுடன் ஜனாதிபதிக்கு முரண்பாடு
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கும் இடையில் அரசியல் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதன் காரணமாகவே ஜனாதிபதியுடன் நேற்று (12) இடம்பெற்ற கலந்துரையாடலில் அந்த முன்னணியின் மாவட்ட தலைவர்கள் பங்கேற்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது. ஒவ்வொரு திங்கட்கிழமையும் ஆளும் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் எம்.பி.க்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு இடம்பெறும். எவ்வாறாயினும், ஆளும் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரமே இம்முறை கூட்டத்தில் பங்கேற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று (12ம் திகதி) […]