உலகம்

முடங்கிப்போன மனிதனின் வாழ்க்கையை புத்துயிர் பெற வைத்த மஸ்க்கின் நியூராலிங்க் சிப்

  • March 27, 2025
  • 0 Comments

உலக கோடீஸ்வரன் எலன் மஸ்க்கின் நியூராலிங்க் சிப் பொருத்தி கொண்ட முதல் நபர் புத்துயிர் பெற்று வருவதாக குறிப்பிட்டுள்ளார். கடந்த 8 வருடங்களாக பக்கவாத நோய்யால் முடங்கிப் போயிருந்த நோலண்ட் அர்பாக் என்பவரே இதனை பொருத்திக் கொண்டுள்ளார். தனது வாழ்க்கை தற்போது நியூராலிங் சிப் மூலம் புத்துயிர் பெற்றுள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் அமெரிக்காவின் அரிசோனா யூமாவைச் சேர்ந்த நோலண்ட் அர்பாக், டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க்கின், நியூராலிங்க் சிப்பை மூளையில் பொருத்திக்கொண்ட முதல் மனிதர் என்ற […]

ஆசியா

சிங்கப்பூரில் இளம் தம்பதிகளுக்கு புதிய வீடு – அமுலாகும் புதிய திட்டம்

  • March 27, 2025
  • 0 Comments

சிங்கப்பூரில் இளம் தம்பதிகள் வீடு வாங்குவதை எளிதாக்கும் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கமைய, கழக வீடு வாங்க விரும்பும் இளம் தம்பதியில் ஒருவர் முழுநேர மாணவர் அல்லது தேசியச் சேவையாளராக இருந்தால் அவர்கள் வருமான மதிப்பீட்டை ஒத்திவைக்க உதவும் புதிய திட்டத்துக்குத் தகுதிபெறுவர். விண்ணபிக்கும்போது வருமானத்தைக் காட்டத் தேவையில்லை எனவும் சாவி வாங்குவதற்முன் காட்டினால் போதும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஜூலை மாதம் புதிய திட்டம் அமுலுக்கு வருகிறது. அத்தகைய தம்பதிகள் வீடுவாங்குவதில் சிரமத்தை எதிர்நோக்குவதாக வீடமைப்பு […]

இன்றைய முக்கிய செய்திகள் வட அமெரிக்கா

கோகோ கோலாவில் பிளாஸ்டிக் துகள் – அமெரிக்காவில் 10,000 டின்கள் அவசர மீளக்கோரல்

  • March 27, 2025
  • 0 Comments

அமெரிக்காவில் 10,000 கோகோ கோலா குளிர்பான டின்களை கோகோ கோலா நிறுவனம் மீளக்கோர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குளிர்பானத்தில் பிளாஸ்டிக் துகள் கலந்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் தாமாக முன்வந்து கோகோ கோலா நிறுவனம் திரும்ப பெற்றது. விஸ்கான்சின், இல்லிநாய்ஸ் உள்ளிட்ட இடங்களில் சப்ளை செய்த குளிர்பான டின்கள் திரும்பப் பெறப்பட்டன. பிளாஸ்டிக் மாசுபாடு ஏற்படக்கூடும் என்பதால் 10,000க்கும் மேற்பட்ட கோகோ கோலா கேன்கள் தானாக முன்வந்து திரும்பப் பெறப்பட்டன. மார்ச் மாதம் 6 ஆம் திகதி கோகோ கோலா […]

இலங்கை

வெள்ளவத்தை, பாணந்துறை கடற்பகுதிகளுக்கு செல்லும் மக்களுக்கு விசேட எச்சரிக்கை!

  • March 27, 2025
  • 0 Comments

வௌ்ளவத்தை, கல்கிசை, பாணந்துறை கடற்பகுதிகளில் மீண்டும் முதலைகளால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதால் மக்களுக்கு இலங்கை உயிர்காப்பு சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளத. இது தொடர்பில் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சங்கத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி அசங்க நாணயக்கார தெரிவித்தார். குறித்த கடற்பகுதிகளுக்கு செல்லும்போது எச்சரிக்கையாக செயற்படுமாறு அவர் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார். இந்த விடயம் தொடர்பில் பொதுமக்களிடமிருந்து முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக இலங்கை உயிர்காப்பு சங்கத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி அசங்க நாணயக்கார மேலும் தெரிவித்தார்.

ஐரோப்பா

தலைவருடன் ஏற்பட்ட தகராறில் தனது ஆப்பிரிக்க எய்ட்ஸ் தொண்டு நிறுவனத்தில் இருந்து விலகிய இளவரசர் ஹாரி

பிரித்தானிய இளவரசர் ஹாரி, லெசோதோ மற்றும் போட்ஸ்வானாவில் எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட இளைஞர்களுக்கு உதவுவதற்காக அவர் அமைத்த பிரிட்டிஷ் தொண்டு நிறுவனமான சென்டெபேலின் புரவலராக இருந்து விலகியுள்ளார். மன்னன் சார்லஸின் இளைய மகன் ஹாரி, 2006 ஆம் ஆண்டில் தனது தாயார் இளவரசி டயானாவின் நினைவாக சென்டெபேலை நிறுவினார். தென்னாப்பிரிக்காவில் உள்ள லெசோதோவின் உள்ளூர் மொழியில் Sentebale என்றால் “என்னை மறந்துவிடு” என்று பொருள். லெசோதோவின் இணை நிறுவனர் இளவரசர் சீசோ மற்றும் அறங்காவலர் […]

பொழுதுபோக்கு

ட்ரென்டிங் நாயகன் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் புதிய படம்

  • March 26, 2025
  • 0 Comments

லவ் டுடே, டிராகன் போன்ற படங்களின் வெற்றியைத் தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி என்ற படத்தில் நடித்துள்ளார் பிரதீப் ரங்கநாதன். அதையடுத்து அவர் நடிக்கும் புதிய படத்தை அஜித்தின் குட் பேட் அக்லி படத்தை தயாரித்திருக்கும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. கீர்த்தீஸ்வரன் இயக்கும் இந்த படத்திற்கு சாய் அபிநயங்கார் இசையமைக்கிறார். பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக மமிதா பைஜூ நடிக்க, சரத்குமார் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு இன்று […]

பொழுதுபோக்கு

விக்ரமின் தாடிக்கு பின்னால் மறைந்திருக்கும் காதல் ரகசியம்….

  • March 26, 2025
  • 0 Comments

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் விக்ரம். சாமி, தூள், ஐ, பொன்னியின் செல்வன் போன்ற பல வெற்றி படங்களை கொடுத்த இவர் நடிப்பில் கடைசியாக தங்கலான் படம் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்திற்கு பின் விக்ரம் அருண்குமார் இயக்கத்தில் வீர தீர சூரன் படத்தில் நடித்து வருகிறார். படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக துஷாரா விஜயன் மற்றும் வில்லன் கதாபாத்திரத்தில் எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் நடித்துள்ளனர். இசையமைத்து உள்ளார். சியான் விக்ரம் ரசிகர்கள் அனைவரும் […]

இலங்கை

சுற்றுலாப் பயணிகளுக்கு முச்சக்கர வண்டிகளை வாடகைக்கு விடுதல் : இலங்கை காவல்துறையின் புதிய விதிமுறைகள்

வீதி விபத்துக்களை குறைக்கும் முயற்சியில் சுற்றுலா பயணிகளுக்கு வாடகைக்கு முச்சக்கர வண்டிகளை வழங்கும் நிறுவனங்களுக்கு இலங்கை காவல்துறை புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது. இலங்கையில் முச்சக்கர வண்டிகளை செலுத்தும் சுற்றுலாப் பயணிகளின் அதிகரிப்புடன், அவ்வாறான முச்சக்கர வண்டிகள் சம்பந்தப்பட்ட விபத்துக்களின் வீதமும் அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இச்சம்பவங்கள் தொடர்பிலான விசாரணையில் சுற்றுலாப் பயணிகளுக்கு முச்சக்கர வண்டிகளை ஓட்டுவதற்கு தேவையான பயிற்சி அல்லது அனுமதிப்பத்திரம் இல்லை என கண்டறியப்பட்டுள்ளது. அந்தவகையில், சுற்றுலாப்பயணிகள் முச்சக்கர வண்டிகளை வாடகைக்கு எடுக்கும் போது பின்வரும் […]

உலகம்

அமெரிக்காவுக்கு உளவு பார்த்ததாக சீனாவில் கைது செய்யப்பட்ட 5 பேர் விடுவிப்பு

சீன தலைநகர் பீஜிங்கில் அமெரிக்காவைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வந்தது. அங்கு வேலை பார்த்த ஊழியர்கள் சிலர் அமெரிக்காவுக்கு உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டது. அதன்பேரில் கடந்த 2023-ம் ஆண்டு 5 சீன தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர். இதனை தொடர்ந்து சீனாவில் இருந்த அந்த நிறுவனத்தின் அனைத்து கிளைகளும் மூடப்பட்டது. பின்னர் உளவு குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 5 பேர் மீதும் விசாரணை நடைபெற்று வந்தது. இதில் அவர்கள் உளவு பார்த்ததற்கான போதிய ஆதாரங்கள் […]

உலகம்

விமானி கடவுச்சீட்டை மறந்ததால் மாற்றி அனுப்பப்பட்ட விமானம்!

அமெரிக்காவிலிருந்து சீனா நோக்கிப் பயணித்த விமானமொன்றின் விமானி தமது கடவுச்சீட்டை மறந்து சென்றதால் குறித்த விமானம் மாற்றி அனுப்பப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்சில் இருந்து 257 பயணிகள் மற்றும் 13 பணியாளர்களுடன் சீனாவிற்குப் பயணித்த விமானமே இவ்வாறு மாற்றி அனுப்பப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த விமானம் சுமார் 2 மணிநேரம் தாமதமடைந்தமையின் காரணமாக அது சென்பிரான்சிஸ்கோ நோக்கி மாற்றி அனுப்பப்பட்டதாக சர்வதேச ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த விமானத்தின் நிறுவனம் இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டு, இதனால் […]