இலங்கையில் சத்திரசிகிச்சையின் போது 4 மரணங்கள் – பணிப்பாளர்கள் விசாரணைக்கு அழைப்பு
இலங்கையில் சத்திரசிகிச்சையின் போது, இரண்டு சிறுவர்கள் உள்ளிட்ட 4 பேர் உயிரிழந்துள்ளனர். இது தொடர்பிலான விசாரணைகளுக்காக, பேராதனை போதனா மற்றும் பேராதனை பண்டாரநாயக்க சிறுவர் வைத்தியசாலைகளின் பணிப்பாளர்கள் இன்று சுகாதார அமைச்சுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். வைத்தியசாலை பணிப்பாளர்களுடன், சத்திரசிகிச்சைகளை மேற்கொண்ட ஏனைய அதிகாரிகளும் சுகாதார அமைச்சுக்கு அழைக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். சத்திரசிகிச்சை மேற்கொண்ட விதம் மற்றும் பயன்படுத்தப்பட்ட மருந்துகள் குறித்தும் விசாரணை நடத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பேராதனை போதனா மற்றும் பேராதனை பண்டாரநாயக்க சிறுவர் […]