கிணற்றில் 3 பிள்ளைகளுடன் சடலமாக கிடந்த பெண்!
இந்திய மாநிலம் உத்தர பிரதேசத்தில் பெண்ணொருவர் தனது 3 பிள்ளைகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. உத்தர பிரதேச மாநிலம் பிரதாப்கர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சோகன்லால். இவர் மும்பையில் தங்கி கூலி வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பிரமிளா தனது 3 பிள்ளைகளுடன் பிரதாப்கரில் வாழ்ந்து வந்துள்ளார்.இந்நிலையில், நகர்பூர் கிராமத்தின் ஒதுக்குப்புறமாக உள்ள கிணற்றில் பெண்ணொருவர் மூன்று பிள்ளைகளுடன் பிணமாக மிதப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து அங்கு விரைந்த […]