இலங்கை

இஸ்ரேலில் கைது செய்யப்பட்ட இலங்கையர்கள் குறித்து வெளியான தகவல்!

  • October 15, 2023
  • 0 Comments

ஜோர்தான் எல்லை வழியாக சட்டவிரோதமாக இஸ்ரேலுக்குள் பிரவேசித்த இலங்கையர்கள் என சந்தேகிக்கப்படும் இரண்டு பெண்களும் ஜோர்தானுக்கு திருப்பி அனுப்பப்படவுள்ளதாக தற்போது தகவல் கிடைத்துள்ளது. இது தொடர்பில்  இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர்  நிமல் பண்டார விசேட அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளார். இந்த இரண்டு பெண்களும் இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினரால் நேற்று (14) கைது செய்யப்பட்டனர். இவர்களது அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை எனவும், இது தொடர்பில் இன்றும் (15) நாளையும் (16) துல்லியமான தகவல்கள் தேடப்படும் எனவும் நிமல் பண்டார […]

ஐரோப்பா

தயாராக இருக்கும்படி பிரித்தானிய மக்களுக்கு அறிவுறுத்தல்

எகிப்துக்குள் நுழையும் ரஃபா எல்லை திறக்கப்பட்டால், காசாவில் உள்ள பிரித்தானிய பிரஜைகள் தயாராக இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. காசாவின் தெற்கில் அமைந்துள்ள இந்த குறுக்குவழியானது, ஹமாஸ், எகிப்து மற்றும் இஸ்ரேல் ஆகிய அனைத்து நாடுகளும், யார் அந்த வழியாக செல்லலாம் என்பதில் கட்டுப்பாட்டை கொண்டுள்ள நிலையில், தற்போது பிரதேசத்தை விட்டு வெளியேறும் ஒரே பாதையாகும். கடந்த வார இறுதியில் இஸ்ரேலில் நடத்தப்பட்ட தொடர் தாக்குதலில் 1,300க்கும் மேற்பட்டவர்களைக் கொன்ற ஹமாஸை குறிவைக்கும் நோக்கத்தில் தரைவழித் தாக்குதலுக்கு […]

இலங்கை

மலையகம் ஊடான ரயில் போக்குவரத்து இரத்து!

  • October 15, 2023
  • 0 Comments

மரம் முறிந்து வீழ்ந்ததால் மலையக ரயில் பாதையில் போக்குவரத்து தடை பட்டுள்ளது. வட்டவளை மற்றும் கலபட புகையிரத நிலையங்களுக்கு இடைப்பட்ட புகையிரத பாதையில் மரம் முறிந்து வீழ்ந்துள்ளது. இதன் காரணமாக கொழும்பில் இருந்து பதுளை நோக்கி பயணித்த உதார மெனிகே புகையிரதமும் கலபடை நிலையத்திற்கு அருகில் நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. மரத்தை அகற்றும் பணி தற்போது நடைபெற்று வருவதாகவும், விரைவில் ரயில் போக்குவரத்தை சீரமைக்க முடியும் எனவும் ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

புகைப்பட தொகுப்பு பொழுதுபோக்கு

படு மேசமான கிளாமர் உடையில் பூனம் பாஜ்வா நடத்திய போட்டோஷூட்

  • October 15, 2023
  • 0 Comments

பிகினியை விட படு கிளாமரான உடையணிந்து நடிகை பூனம் பாஜ்வா நடத்திய போட்டோஷூட் வைரலாகி வருகிறது. மும்பையில் இருந்து கோலிவுட்டிற்கு படையெடுத்து வந்த நடிகைகளுள் பூனம் பாஜ்வாவும் ஒருவர். இவர் கடந்த 2007-ம் ஆண்டு ஹரி இயக்கத்தில் வெளிவந்த சேவல் திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார். சேவல் படத்தில் பரத்துக்கு ஜோடியாக நடித்த பூனம் பாஜ்வா, அப்படத்தின் ஸ்கூல் பெண்ணாக நடித்திருந்ததால் பெரியளவில் கிளாமர் காட்டவில்லை. இதையடுத்து தனக்கு கிளாமரெல்லாம் அத்துப்படி என்பதை நிரூபிக்கும் விதமாக தெனாவட்டு, […]

இலங்கை

அரச வங்கிகளின் பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்ய திட்டம்!

  • October 15, 2023
  • 0 Comments

ஆறு அரச வங்கிகளின் பங்குகளை தனியாருக்கு விற்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக இலங்கை வங்கி ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது. முதற்கட்டமாக அரச  வங்கி நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாக சங்கத்தின் பொதுச் செயலாளர் ரஞ்சன் சேனாநாயக்க தெரிவித்தார்.   இதன்படி, தற்போதைய அரச  வங்கிச் சட்டம் நீக்கப்படும் என்றும் அச்சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. இந்த 06 ங்கிகளில் உலகின் முப்பது பெரிய அரச வங்கிகளில் இரண்டு வங்கிகளும் இருப்பதாக குறிப்பிடப்படுவதுடன்,  அரச வங்கிகள் இலாப நோக்குடன் நிறுவப்படவில்லை என்றும், […]

இலங்கை

மயிலத்துமடு விவகாரம்: ஜனாதிபதி அதிகாரிகளுக்கு விடுத்துள்ள பணிப்புரை

மயிலதமடு, மாதவனை கால்நடைவளர்ப்பு பண்ணையாளர்கள் தமது மேய்ச்சல் தரை காணிகளில் தனியார் ஆக்கிரமிப்புகள் இடம்பெற்றுள்ளதாக கடந்த சில மாதங்களாக குற்றச்சாட்டுகள் முன்வைத்துவரும் நிலையில், இந்த பிரச்சினை தொடர்பில் இன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் விசேட கலந்துரையாடல் நடைபெற்றது. இந்த கலந்துரையாடலில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், ஜனாதிபதியின் செயலாளர்,ஆளுங்கட்சி அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அரச அதிபர்,மகாவலி DG, பொலிஸ்மா அதிபர் மற்றும் வனவிலங்கு அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர். விவசாயம் மற்றும் கால்நடைவளர்ப்பு […]

தமிழ்நாடு

ப்ளூ டூத் உதவியுடன் சுங்கத்துறை தேர்வு… 28 வடமாநில இளைஞர்கள் கைது!

  • October 15, 2023
  • 0 Comments

சென்னையில் சுங்கத்துறை தேர்வை `ப்ளூடூத்’ உதவியுடன் மோசடியாக எழுதிய ஹரியாணாவைச் சேர்ந்த 28 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை சுங்கத்துறை அலுவலகத்தில் கேன்ட்டீன் உதவியாளர், ஓட்டுநர் என 17 காலியிடங்களுக்கான தேர்வு அறிவிக்கப்பட்டு, நேற்று நடத்தப்பட்டது. 1,600 பேர் நேற்று இந்த தேர்வை எழுதினர். இந்நிலையில், தேர்வில் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்கள், ப்ளூ டூத், ஹெட்செட்டுகளைப் பயன்படுத்தி தேர்வு எழுதியது கண்டுபிடிக்கப்பட்டது. இளைஞர்கள் மோசடியாக தேர்வு எழுதியது குறித்து காவல்துறைக்கு […]

இலங்கை

பாலஸ்தீன்- இஸ்ரேல் தொடர்பில் தெற்கின் சக்திகள் போராடுவதனை வரவேற்கின்றோம்- அருட்தந்தை மா.சத்திவேல்

  • October 15, 2023
  • 0 Comments

பாலஸ்தீனத்திற்கு ஆதரவு தெரிவித்தும் இஸ்ரேலுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் தெற்கின் சக்திகள் போராடுவதனை வரவேற்கின்றோம். அத்தோடு பௌத்த சிங்கள நில ஆக்கிரமிப்புக்கு எதிராகவும் குரல் கொடுக்க வேண்டும் அவ்வாறு செய்தாலே பாலஸ்தீனத்திற்கான போராட்டம் உண்மை உள்ளதாக அமையும் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார். அவரால் இன்று (15.10.2023) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,பாலஸ்தீனத்தின் ஹமாஸ் இயக்கத்திற்கும், இஸ்ரேல் […]

உலகம்

இஸ்ரேலுக்கு இலவசமாக தொலைபேசி அழைப்புக்களை வழங்கும் Orange தொலைத்தொடர்பு நிறுவனம்

இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே மோதல் ஆரம்பித்து ஒரு வாரம் ஆன நிலையில், இஸ்ரேலுக்கு இலவசமாக தொலைபேசி அழைப்புக்களை மேற்கொள்ள முடியும் என Orange தொலைத்தொடர்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இஸ்ரேலில் இருக்கும் உறவுகளுடன் தொலைபேசியூடாக உரையாக இந்த இலவச சேவையினை Orange நாளை திங்கட்கிழமை முதல் வழங்குகிறது. ஹமாஸ் அமைப்பினர் மேற்கொண்டு வரும் தாக்குதலில் இதுவரை 15 பிரெஞ்சு மக்கள் இஸ்ரேலில் கொல்லப்பட்டுள்ளனர். 17 பேர் குறித்த தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை. இந்நிலையிலேயே இந்த இலவச தொலைபேசி […]

இலங்கை

யாழில் கப்பம் பெறும் கும்பலை கைது செய்ய உத்தரவு!

  • October 15, 2023
  • 0 Comments

யாழ்.மாவட்டத்தில் விவசாயிகளிடம் கப்பம் பெறும் குழுவை உடனடியாக கைது செய்யுமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர யாழ்ப்பாண பொலிஸ் மா அதிபர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். யாழ்.மாவட்டச் செயலகத்தில் இன்று (15.10) காலை நடைபெற்ற விசேட விவசாயக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சரிடம் விவசாயிகள் முறைப்பாடுகளை முன்வைத்துள்ள நிலையில், இது தொடர்பான சம்பவங்கள் தொடர்பில் இதுவரை பொலிஸார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். யாழ்.மாவட்ட விவசாயிகள் தமது பயிர்களை விற்பனைக்காக சந்தைக்கு கொண்டு வரும்போது, […]