உலகம்

உக்ரைன் மீது ரஷ்ய தாக்குதல்கள் ஐந்து பொதுமக்கள் பலி

இன்று அதிகாலையில் ரஷ்யா மேற்கொண்ட தாக்குதலில் ஐந்து உக்ரைனியே பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். மற்றும் வடகிழக்கு நகரமான கார்கிவில் மின் கட்டத்தை சேதப்படுத்தியது என்றும் உக்ரேனிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். “தீய அரசு தொடர்ந்து பயங்கரவாதத்தைப் பயன்படுத்துகிறது மற்றும் பொதுமக்கள் மீது போரை நடத்துகிறது. ரஷ்ய பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட வேண்டும், ”என்று ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி டெலிகிராமில் எழுதியுள்ளார். மேலும் ரஷ்யப் படைகள் முன்னணி நகரமான அவ்திவ்கா மீது தாக்குதலை அதிகரிக்க வாய்ப்புள்ளது மற்றும் அருகிலுள்ள உக்ரேனிய நிலைகள் மீது […]

ஐரோப்பா

ஐரோப்பிய நாடுகளில் யூத எதிர்ப்பு சம்பவங்கள் அதிகரிப்பு : தொடரும் பதற்றம்

சில ஐரோப்பிய நாடுகளில் யூத எதிர்ப்பு சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், ஜெப ஆலயத்தில் வீசப்பட்ட இரண்டு பெட்ரோல் குண்டுகளால் பதற்றம் அதிகரித்துள்ளது. ஜெப ஆலயத்தில் “திரவத்தால் நிரப்பப்பட்ட எரியும் பாட்டில்களை” இரண்டு பேர் வீசியதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு ஜெர்மனி அதிபர் ஓலாஃப் ஷோல்ஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஹமாஸ் பயங்கரவாதம் இஸ்ரேலையும் பாலஸ்தீனியர்களையும் ஒரு புதிய வன்முறைச் சுழலில் தள்ளிவிட்டது என்று ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் புதன்கிழமை […]

உலகம்

ஹமாஸ் அமைப்பின் கணக்குகளை முடக்க போவதில்லை; விளக்கமளித்துள்ள டெலிகிராம் CEO

  • October 18, 2023
  • 0 Comments

ஹமாஸ் அமைப்பினரின் கணக்குகளை முடக்கப்போவது இல்லை என டெலிகிராம் நிறுவனம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் ஹமாஸ் படைகளுக்கு இடையே போர் தாக்குதல் நடைபெற்று வரும் நிலையில், முக்கிய இணையதளங்கள் ஹமாஸ் அமைப்பினரின் கணக்குகளை முடக்கி உள்ளது. அந்த வகையில் முன்னணி சமூக வலைதளங்களான பேஸ்புக் மற்றும் ட்விட்டர் ஆகிய சமூக வலைதளங்கள் ஹமாஸ் அமைப்பினரின் சமூக வலைதளங்களை முடக்கி வருகின்றனர்.இந்நிலையில் ஹமாஸ் அமைப்பினரின் கணக்குகளை முடக்கப்போவது இல்லை என டெலிகிராம் நிறுவனம் தெரிவித்துள்ளது. 80 கோடி பயனர்களை கொண்டுள்ள […]

உலகம்

முன்னாள் ஆஸ்திரிய அதிபருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை? பின்னணியில் வெளியான காரணம்

ஆஸ்திரியாவின் முன்னாள் அதிபர் செபாஸ்டியன் குர்ஸ் தனது முதல் அரசாங்கத்தில் ஊழல் நடந்ததாகக் கூறப்படும் நாடாளுமன்ற விசாரணையில் தவறான அறிக்கைகளை வழங்கிய குற்றச்சாட்டில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. ஒரு காலத்தில் ஐரோப்பாவில் பழமைவாதிகள் மத்தியில் வளர்ந்து வரும் நட்சத்திரமாக இருந்த குர்ஸ், தனி ஊழல் விசாரணைக்கு மத்தியில் 2021 இல் ராஜினாமா செய்தார், பின்னர் அரசியலில் இருந்து விலகினார். குற்றச்சாட்டை மறுக்கும் குர்ஸ், குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

ஐரோப்பா

பிரான்சில் ஆறு விமானநிலையங்களிற்கு மின்னஞ்சல் மூலம் அச்சுறுத்தல்..!

  • October 18, 2023
  • 0 Comments

பிரான்சின் ஆறு விமானநிலையங்களிற்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட நிலையில் ஆறு விமானநிலையங்களில் இருந்து மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர். பிரான்ஸ் பொலிஸாரை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் இத்தகவலை வெளியிட்டுள்ளன. மின்னஞ்சல் மூலம் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன – மத்திய கிழக்குபதற்ற நிலையை தொடர்ந்து பிரான்சில் தொடர்ச்சியாக இவ்வாறான அச்சுறுத்தல்கள் வெளியாகியுள்ளன. அச்சுறுத்தல்கள் உண்மையானவையாஎன்பதை உறுதிசெய்வதற்கான சோதனை தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக என அறிவதற்காக அதிகாரிகள் மக்களை விமானநிலையங்களில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்றியுள்ளனர்.

ஐரோப்பா

உடல் நல பிரச்சனையால் மருத்துவமனைக்கு சென்ற மூதாட்டி… மருத்துவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

  • October 18, 2023
  • 0 Comments

ரஷ்யாவைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர் பல ஆண்டுகளாக மூளையில் ஊசியுடனே வாழ்ந்து வந்த ஆச்சரிய விடயம் தெரிய வந்துள்ளது. இரண்டாம் உலகப்போரின்போது பல குடும்பங்கள் தங்கள் வாழ்க்கைக்காக போராடினர். இதனால் அவர்கள் தங்கள் குழந்தைகளை கொல்லும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.அவ்வாறு ஒரு குடும்பத்தில் 80 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்த பெண்ணொருவர் சமீபத்தில் உடல் நலப்பிரச்சனைக்காக மருத்துவனைக்கு சென்றுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், குறித்த பெண்ணின் தலையை ஸ்கேன் செய்து பார்த்தனர்.அப்போது மூளையில் 3 செ.மீ அளவிலான ஊசி […]

பொழுதுபோக்கு

சசிகுமாரின் புதிய த்ரில்லர் படம் : வெளியான சூப்பர் அப்டேட்

‘கழுகு’ புகழ் சத்யசிவா இயக்கும் புதிய த்ரில்லர் படத்தில் நடிகரும் இயக்குனருமான சசிகுமார் நடிக்கவுள்ளார். முக்கிய கதாபாத்திரங்களில் சசிகுமார் மற்றும் லிஜோ மோல் ஜோஸ் ஆகியோர் நடிக்கும் இந்த திட்டத்தை விஜயகணபதியின் பிக்சர்ஸ் சார்பில் பாண்டியன் பரசுராம் தயாரிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முன்னதாகவே துவங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்படம் 90களில் நடந்த ஒரு நிஜ வாழ்க்கை நிகழ்வை அடிப்படையாகக் கொண்ட ஒரு எட்ஜ் ஆஃப் சீட் த்ரில்லர் என்று கூறப்படுகிறது. படத்தின் பெயர் விரைவில் […]

இலங்கை

அந்தமான் கடல் பகுதியில் மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளது!

  • October 18, 2023
  • 0 Comments

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய அந்தமான் கடல் பகுதியில் மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறும் என்றும் பின்னர் வரும் 21 ஆம் திகதி மத்திய அரபிக் கடல் பகுதியில்  காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் எனவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இந்நிலையில், மழையுடனான வானிலை மேலும் சில நாட்களுக்கு நீடிக்கும் என முன்னுரைக்கப்பட்டுள்ளது.

பொழுதுபோக்கு

கார்த்தியின் ‘ஜப்பான்’ டீசர் வெளியானது… நீங்களும் பாருங்கள்

  • October 18, 2023
  • 0 Comments

பொன்னியின் செல்வன் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பின்னர், நடிகர் கார்த்தி நடித்து முடித்துள்ள திரைப்படம் தான் ‘ஜப்பான்’. இந்த படத்தை இயக்குனர் ராஜு முருகன் இயக்கியுள்ள நிலையில், கார்த்திக்கு ஜோடியாக அனு இமானுவேல் நடித்துள்ளார். ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கும் இந்த படத்தை ட்ரீம் வாரியர் பிச்சர்ஸ் சார்பில், SR பிரபு தயாரித்துள்ளார். இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாக உள்ள இந்த படத்தின் புரோமோஷன் பணிகள் விரைவில் துவங்க உள்ள நிலையில், தற்போது இந்த படத்தின் டீசர் […]

உலகம்

கடந்த 24 மணிநேரத்தில் இரு காவல்துறையினர் தற்கொலை

பிரான்சில் கடந்த 24 மணிநேரத்தில் இரு காவல்துறையினர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். Bar-le-Duc (Meuse) நகரில் கடமையாற்றும் காவல்துறை வீரர் ஒருவர் தனது சேவைத் துப்பாக்கியை பயன்படுத்தி தற்கொலை செய்துகொண்டுள்ளார். இச்சம்பவம் இடம்பெற்ற அடுத்த நான்கு மணிநேரத்தில் Dreux (Eure-et-Loir நகரைச் சேர்ந்த Rambouillet (Yvelines) காவல்நிலையத்தில் பயணிபுரியும் வீரர் ஒருவரும் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இவ்விரு சம்பவங்களும் தேசிய காவல்துறையினரை கவலையில் ஆழ்த்தியுள்ளது. இவ்வருடத்தில் இடம்பெறும் 20 மற்றும் 21 ஆவது காவல்துறையினரின் தற்கொலை சம்பவங்கள் இவையாகும்.