உலகம்

பேசல் விமான நிலையத்தில் குண்டு அச்சுறுத்தல்

சுவிட்சர்லாந்தின் பேசல் நகரில் அமைந்துள்ள பேசல் முல்க்ஹவுஸ் சர்வதேச விமான நிலையத்தில் குண்டு தொடர்பாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தது. குண்டு அச்சுறுத்தல் காரணமாக விமான பயணிகள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம் நகர்த்தப்பட்டு இருந்தனர் என தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக விமான நிலையத்தின் பணிகளும் இடைநிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த குண்டு அச்சுறுத்தல் பொய்யானது என கண்டறியப்பட்டதன் பின்னர் விமான நிலையத்தின் வழமையான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன. இவ்வாறு போலியாக குண்டு பீதியை ஏற்படுத்தியவர்கள் கண்டிக்கப்பட வேண்டியவர்கள் என விமான நிலைய நிர்வாகம் […]

பொழுதுபோக்கு

ஆபாச பட சர்ச்சை! கணவனை பிரிகின்றார் ஷில்பா ஷெட்டி

  • October 20, 2023
  • 0 Comments

நடிகை ஷில்பா ஷெட்டியை பிரிவாதாக ராஜ் குந்த்ரா தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருக்கிறார். பாலிவுட்டில் பிரபல நடிகையாக இருப்பவர் ஷில்பா ஷெட்டி. 1993ஆம் ஆண்டு வெளியான பாஸிகர் என்ற படத்தின் மூலம் திரையுலகில் அடியெடுத்து வைத்தார். அந்தப் படம் நல்ல வரவேற்பை பெற்று ஷில்பா ஷெட்டிக்கும் நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது. அதனைத் தொடர்ந்து ஹிந்தியில் பட வாய்ப்புகள் கிடைக்க அதை கச்சிதமாக பயன்படுத்திக்கொண்டு சரசரவென்று வளர்ந்து லீடிங் ஹீரோயின் ஆனார். ஹிந்தியில் தொடர்ந்து நடித்துக்கொண்டிருந்தவர் பிரபுதேவா ஹீரோவாக […]

இந்தியா

பாஜக அமமுக கூட்டணி?- பதிலளித்த டிடிவி தினகரன்

கோவை சின்னியம்பாளையம் பகுதியில் அமமுக சார்பில் நாளை நடைபெற உள்ள ஒருங்கிணைந்த கோவை மாவட்ட செயல்வீரர் கூட்டத்தில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கலந்து கொள்கிறார். இதற்காக விமான மூலம் கோவை வந்தடைந்த அவர் கோவையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் செய்தியாளர்களின் சந்தித்து பேசிய டிடிவி தினகரன், ”ஒன்றிணைந்த கோவை மாவட்ட செயல்வீரர் கூட்டத்திற்காக கோவை வந்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில், வினாஷ காலே விபரீத புத்தி என்பது போல் அழிய போகிறவர்கள் தான் […]

பொழுதுபோக்கு

‘எனக்கு லோகேஷ் கனகராஜ் படத்தில் சாகவேண்டும்’ இறுதியில் நடந்தது என்ன?

  • October 20, 2023
  • 0 Comments

லியோ திரைப்படம் நேற்று உலகளவில் வெளிவந்து பட்டையை கிளப்பி வருகிறது. விஜய் – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவான இப்படத்தின் மீது மாபெரும் எதிர்பார்ப்பு இருந்தது. அத்தகைய எதிர்பார்ப்புடன் வெளிவந்த லியோ திரைப்படம் விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். சில விமர்சனங்கள் எழுந்தாலும் கூட மக்கள் மத்தியில் லியோ படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. லியோ படம் குறித்து வெளிவந்த விமர்சனங்களில் ஒன்று ஏன், எதற்காக அனுராக் கைஷப் இப்படத்தில் கேமியோ ரோலில் நடித்தார். 10 வினாடிகள் கூட […]

உலகம்

பிரான்சில் இதுவரை 299 பாடசாலைகளுக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல்:கல்வி அமைச்சர்

பிரான்சில் இந்த புதிய கல்வி ஆண்டு ஆரம்பித்ததில் இருந்து இதுவரை 299 பாடசாலைகளுக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் தகவல் வெளியிட்டுள்ளார். நேற்று வியாழக்கிழமை மட்டும் 75 பாடசாலைகளுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. “நாங்கள் இதுவரை பலரை கைது செய்துள்ளோம். அவர்களில் பலர் 11, 12 மற்றும் 14 வயதுடைய சிறுவர்கள்!” என கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார். அச்சுறுத்தல் விடுபவர்களுக்கு 3 வருட சிறையும், 50,000 யூரோக்கள் குற்றப்பணமும் அறவிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பா

லண்டனில் ஏலத்திற்கு விடப்படவுள்ள உலகின் மிகவும் பழமை வாய்த மது பாட்டில்!

  • October 20, 2023
  • 0 Comments

உலகின் மிகவும் பழமை வாய்ந்த மது பாட்டில் ஒன்று லண்டனில் ஏலம் விடப்பட உள்ள நிலையில், 12 கோடி ரூபாய் அளவிற்கு ஏலம் போகும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்த மெக்காலன் என்ற நிறுவனம் 1926ம் ஆண்டு முதல் ஸ்காட்ச் வகை விஸ்கி மதுபானங்களைத் தயாரித்து வருகிறது. 60 ஆண்டுகளில் சுமார் 40 பாட்டில்களை மட்டுமே இந்த நிறுவனம் தயாரித்து உள்ளதாக கூறப்படுவதால், இந்த மதுபாட்டில்களை, செல்வந்தர்கள் விலைக்கு வாங்கி, அவர்களின் தனிப்பட்ட சேகரிப்பில் […]

பொழுதுபோக்கு

விஜய்யுடன் நடித்தமை குறித்து இலங்கைப் பெண் ஜனனி ஓப்பன்

  • October 20, 2023
  • 0 Comments

லியோ படத்தில் முக்கியமான ரோலில் நடித்துள்ள பிக் பாஸ் ஜனனி, விஜய்யுடன் நடித்த அனுபவத்தை பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறுகையில், நான் விஜய் சார் உடன் சேர்ந்து நடித்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன். I am very happy & proud even Thalapathy Vijay is acting like a dream but it is true, this film is my first film and I am very thankful […]

இலங்கை

யாழ் சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் வசதிகளை குறிப்பிடத்தக்க வகையில் மேம்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க்கும் என்று துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். குறித்த நடவடிக்கைக்காக 200 மில்லியன் ரூபா வரையில் செலவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச மற்றும் உள்நாட்டு விமானப் பயணத்திற்கான தேவைகள் அதிகரித்து வரும் நிலையில் குறித்த மேம்பாட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன

இலங்கை

பதுளை- மொரஹெல பிரதான வீதியில் பஸ் விபத்து ; பெண் ஒருவர்பலி,18 பேர் காயம்

  • October 20, 2023
  • 0 Comments

பதுளை – மொரஹெல பிரதான வீதியில் உல்பாத ஹண்டி என்ற இடத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்து விபத்தில் வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 18 பேர் காயமடைந்துள்ளனர். சுமார் 40 அடி உயரத்தில் இருந்து பள்ளத்துக்குள் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளது. மீகஹகிவுலவில் இருந்து மொரஹெல நோக்கி பயணித்த பஸ்ஸே விபத்துக்குள்ளாகியுள்ளது. காயமடைந்தவர்கள் மீகஹகிவுல வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், ஆபத்தான நிலையில் உள்ள 8 பேர் பதுளை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர். மீகஹகிவுல […]

இலங்கை

கந்தளாய்- புத்தர் சிலைகளுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் கைது

  • October 20, 2023
  • 0 Comments

திருகோணமலை- கந்தளாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வெவ்வேறு இடங்களில் நிர்மாணிக்கப்பட்ட புத்தர் சிலைகளின் கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் இளைஞரொருவர் (19) கைது செய்யப்பட்டுள்ளார். உலகத்தில் எவரும் வாழக்கூடாது என கூறி குறித்த பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டபட்ட புத்தர் சிலைகளின் கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தியதாகவும், போட்டங்காடு சந்தி , அக்ரபோதி விகாரைக்கு முன்னாள் உள்ள சிலை போன்றவற்றுடன் நான்கு சிலைகளின் கண்ணாடிகளை சேதப்படுத்தியுள்ளதாகவும் தெரிய வருகின்றது. குறித்த கண்ணாடிகளை உடைத்த சந்தேகத்தின் பேரில் கந்தளாய்,பேராறு பகுதியைச் […]