ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம் – 3 இளைஞர்கள் அதிரடியாக கைது

  • July 10, 2023
  • 0 Comments

ஆஸ்திரேலியா – மெல்பேர்னின் வடமேற்கு பகுதியில் 14 வயது சிறுவன் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த படுகொலை செய்ததாக 03 இளைஞர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஜூன் 26 ஆம் திகதி, செயின்ட் ஆல்பன்ஸில் இரண்டு நண்பர்களுடன் அவர் பயணம் செய்தபோது, ​​​​ஒரு கார் அவர் மீது மோதியது. அப்போது, ​​முகக் கவசம் அணிந்த இருவர் வெளியே வந்து குழந்தையை கூரிய ஆயுதங்களால் தாக்கியது தெரியவந்தது. இச்சம்பவம் தொடர்பில் 17 வயதுடைய இருவர் மற்றும் 18 வயதுடைய […]

அறிவியல் & தொழில்நுட்பம்

WhatsApp பயனர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்!

  • July 10, 2023
  • 0 Comments

WhatsApp செயலிக்கு அடிக்கடி புதிய அப்டேட்டுகளை வெளியிட்டு வருகிறது. இந்த நிலையில், வாட்ஸ்அப் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட ஸ்டிக்கர் மற்றும் GIF பிக்கரை வெளியிடுவதாகக் கூறப்படுகிறது. “விரிவாக்கப்பட்ட பிக்கர் பார்வையுடன், பயனர்கள் GIFகள் மற்றும் ஸ்டிக்கர்களை சிறப்பாகத் தேடுவதன் மூலம் மேம்பட்ட அனுபவத்தைப் பெறலாம்” என்று WABetaInfo தெரிவித்துள்ளது. மறுவடிவமைப்பு செய்யப்பட்ட ஸ்டிக்கர்கள் மற்றும் GIF பிக்கர்கள், மெட்டாவிற்குச் சொந்தமான நன்கு அறியப்பட்ட உடனடி செய்தியிடல் திட்டமான WhatsApp-க்கு வெளிப்படையாக வருகின்றன. WABetaInfo இன் படி, விரிவாக்கப்பட்ட பிக்கர் […]

இலங்கை

குறைந்த செலவில் தாய்லாந்திற்கும் இலங்கைக்கும் இடையில் நேரடி விமான சேவை!

  • July 10, 2023
  • 0 Comments

தாய்லாந்துக்கும் இலங்கைக்கும் இடையே குறைந்த கட்டணத்தில் நேரடி விமான சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி  எயார் ஏசியா விமானமான AIQ-140  தனது முதலாவது பயணத்தை Don Mueang சர்வதேச விமான நிலையத்தில் ஆரம்பித்து இன்று இலங்கை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது. இது ஏ-320 ஏர்பஸ் வகை விமானமாகும். அந்த விமானத்தில் 134 பயணிகளும் 07 பணியாளர்களும் இலங்கைக்கு வந்திருந்ததுடன், 174 பயணிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து தாய்லாந்துக்கு செல்லவுள்ளனர். தாய்லாந்துக்கும் இலங்கைக்கும் இடையில் வாரத்திற்கு 04 விமானங்கள் இயக்கப்பட உள்ளன. அதன்படி, திங்கள், புதன், […]

இலங்கை

இலங்கையில் இடம்பெற்ற கோர விபத்தில் உயிர் தப்பிய இளைஞன் வெளியிட்ட தகவல்

  • July 10, 2023
  • 0 Comments

பொலனறுவை – மன்னம்பிட்டிய கொத்தலிய பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் ஜன்னல் அருகில் இருந்ததால் உயிர் பிழைத்த இளைஞர் ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளர். சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து கவிழ்ந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் உயிரிழந்தவர்களில் பெண்ணொருவரும் அடங்குவதுடன், காயமடைந்த 41 பேர் பொலனறுவை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, பேருந்து விபத்தில் இருந்து உயிர் தப்பிய இளைஞர் ஒருவர் சம்பவம் தொடர்பில் விளக்கமளித்துள்ளார். “கதுருவெலயிலிருந்து கல்முனைக்கு பேருந்து வந்தது. சுமார் 50 பேர் இருந்தனர். பத்து […]

ஐரோப்பா

பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் புட்டின் கலந்துகொள்வாரா?

  • July 10, 2023
  • 0 Comments

பிரிக்ஸ் உச்சிமாநாடு தென்னாப்பிரிக்காவில் நடைபெறவுள்ள நிலையில் இந்த மாநாட்டில் புட்டின் கலந்துகொள்வாரா என்பது குறித்த விவாதங்கள் எழுந்துள்ளன. இம்முறை நடைபெறும் பிரிக்ஸ் மாநாடானது இயற்பியல் ரீதியாக இடம்பெறவுள்ளதாக தென்னாப்பிரிக்க தலைவர் சிரில் ரமபோசா தெரிவித்துள்ளார். ஏறக்குறைய மூன்று ஆண்டுகளாக இந்த மாநாடு நடைபெறாத நிலையில், மெய்நிகர் வழியில் நடத்துவதற்கான சாத்தியப்பாடுகள் குறைவு என்றே அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையில் இந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்கு புட்டினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஐ.சி.சி நீதிமன்றத்தின் பிடியானை உத்தரவை எதிர்கொண்டுள்ள புட்டின் இந்த […]

கருத்து & பகுப்பாய்வு

ஆஸ்திரேலியாவில் இந்தியர்கள் 8 வருடம் விசா இல்லாமல் வேலை செய்யலாம்!

  • July 10, 2023
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் கடந்த ஜூலை 1ம் திகதி முதல் படிக்கும் இந்திய பட்டதாரிகளுக்கான குடியேற்ற விதிமுறைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி இந்தியர்களுக்கு விசா வழங்குவதில் புதிய மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த புதிய விதிமுறை மாற்றத்தின் படி இனி இந்திய மாணவர்கள் 8 ஆண்டுகள் வரை விசா இல்லாமல் ஆஸ்திரேலியாவில் பணிபுரியும் சலுகையை பெறுகின்றனர். 2023 மே மாதத்தில் ஆஸ்திரேலியாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே கையெழுத்தான ஒப்பந்தத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியப் பட்டதாரிகள் ‘மேட்ஸ்’ என்ன […]

ஆசியா

பாகிஸ்தானில் தீபிடித்து எரிந்த வேன் – 07 பேர் பலி!

  • July 10, 2023
  • 0 Comments

பாகிஸ்தானில் வேன் ஒன்று தீப்பிடித்து எரிந்ததில் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். பஞ்சாப் சர்கோதா பகுதியில்  இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது. இதன்போது வேனில் 20 பேர் பயணம் செய்ததாகவும், அவர்களில் 07 பேர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் தீயை கட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணை செய்து வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இலங்கை

இலங்கையில் இன்று அதிகாலை மற்றுமொரு கோர விபத்து! இருவர் பலி 29 பேர் காயம்

  • July 10, 2023
  • 0 Comments

அம்பன்பொல பிரதேசத்தில் இடம்பெற்ற மற்றுமொரு பேருந்து விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் 29 பேர் காயமடைந்துள்ளனர். இன்று காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கூரகலவிற்கு யாத்திரைச் சென்று மீண்டும் வீடு திரும்பிக்கொண்டிருந்த யாத்திரைகள் பயணித்த பேருந்து ஒன்று அம்பன்பொல பிரதேசத்தில் வீதியோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கொள்கலனுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் தலாவ பகுதியைச் சேர்ந்த 32 வயது மற்றும் 71 வயதுடைய இருவரே உயிரிழந்துள்ளனர். காயமடைந்தவர்களில் 6 பெண்களும் ஒரு […]

ஆப்பிரிக்கா

முழு அளவிலான உள்நாட்டு போரை எதிர்கொள்ளும் சூடான் – ஐ.நா எச்சரிக்கை!

  • July 10, 2023
  • 0 Comments

உள்நாட்டு கலவரங்களால் பாதிக்கப்பட்டுள்ள சூடான் தற்போது முழு அளவிலான போரை எதிர்கொண்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை விடுத்துள்ளது. குடியிருப்பு பகுதியில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 22 பேர் கொல்லப்பட்டுள்ள நிலையில், ஐ.நா மேற்படி குறிப்பிட்டுள்ளது. சூடானின் இராணுவ படையினருக்கும், துணை இராணுவ படையினருக்கும் இடையில் நடத்து வருகின்ற மோதலானது மூன்று மாதங்களை கடந்துள்ளது. இருப்பினும் சீற்றம் தீர்ந்தபாடில்லை. இந்த மோதல் காரணமாக 3000 பேர் கொல்லப்பட்டுள்ளனர். தப்பிப்பிழைத்தவர்கள் பாலியல் துஷ்பிரயோகங்கள் குறித்து பல முறைப்பாடுகளை அளித்துள்ளனர். […]

ஐரோப்பா

ஜெர்மனியில் அமுலுக்கு வந்துள்ள சட்டம்

  • July 10, 2023
  • 0 Comments

ஜெர்மனி நாட்டில் கருணை கொலை மேற்கொள்ள புதிய சட்டம் ஒன்று நாடாளு மன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஜெர்மனியில் கருணை கொலை செய்வது என்பது தடை செய்யப்பட்ட விடயமாகும். ஜெர்மனியின் குற்றவியல் சட்டத்தின் படி குற்றவியல் சட்டம் 216 இவ்வாறு கருணை கொலை செய்வது அல்லது கருணை கொலை செய்ய உதவி செய்வது குற்றமாகும். இந்நிலையில் ஜெர்மன் பாராளுமன்றத்தில் குற்றவியல் கோவையை மாற்றி அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதில் சில கடுமையான நோயாளிகளுக்கு கருணை கொலை செய்வதற்கு அனுமதி வழங்குவதற்கு ஜெர்மன் […]

You cannot copy content of this page

Skip to content