இலங்கை

தமிழீழ விடுதலைப்புலிகள் தரப்பிலிருந்து போரிட்டவர்களாக இரண்டு தரப்பு இருக்கின்றது! முன்னாள் போராளி

தமிழீழ விடுதலைப்புலிகள் தரப்பிலிருந்து போரிட்டவர்களாக இரண்டு தரப்பு இருக்கின்றது. ஒன்று அரசதரப்பு மற்றையது விடுதலைப்புலிகள் தரப்பு இருக்கின்றது  என முன்னாள் போராளி செல்வநாயகம் அரவிந்தன் தெரிவித்துள்ளார். போராளிகள் நலன்புரிச்சங்கத்தின் விசாரணை தொடர்பிலும், இராணுவத்தினர் தம்மை சந்தித்தது தொடர்பாகவும் போராளிகள் நலன்புரிச்சங்கத்தின் வவுனியா அலுவலகத்தில் இன்றையதினம் (12) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், ”போராளிகள் நலன்புரிச்சங்கத்தின் விசாரணை தொடர்பிலும் , இராணுவத்தினர் எங்களை சந்தித்தது தொடர்பாகவும் சில […]

பொழுதுபோக்கு

வியாபாரத்தில் மிரட்டும் லியோ… புதிய அப்டேட் இதோ….

  • July 12, 2023
  • 0 Comments

லியோ படத்தின் தெலுங்கு உரிமத்தின் வியாபாரம் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. பீஸ்ட், வாரிசு படங்களின் தோல்விக்கு பிறகு லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்துவருகிறார் விஜய். விக்ரம் படத்தின் மெகா ஹிட் லோகேஷ் கனகராஜ் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பை கொடுத்திருப்பதால் இந்தப் படத்தை ஒட்டுமொத்த கோலிவுட்டுமே எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறது. அதற்கு தகுந்தாற்போல் படத்தில் ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்துவருகின்றனர். படம் அக்டோபர் 19ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. ஒரு படத்தில் மூன்று நட்சத்திரங்களை வைத்து சமாளிப்பதே பெரிய வேலை என்று […]

ஆசியா

ஒரேபாலின திருமணத்தை அங்கீகரித்துள்ள நேபாளம்!

  • July 12, 2023
  • 0 Comments

தெற்காசியாவில் LGBTQ+ மக்களுக்கான திருமண சமத்துவத்திற்கான முதல் படியாக, ஒரே பாலின திருமணங்களை சட்டப்பூர்வமாக பதிவு செய்ய நேபாள உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதிய சட்ட கட்டமைப்பை உருவாக்கும் வரை ஒரே பாலின மற்றும் பாரம்பரியமற்ற தம்பதிகள் தற்காலிகமாக பதிவு செய்யப்பட வேண்டும் என நீதிபதி டில் பிரசாத் ஷ்ரேஸ்தா தீர்ப்பளித்தார். அதேவேளை பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் மாலைத்தீவு ஆகிய நாடுகள் ஒருபாலின திருமணத்திற்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ளன. இந்நிலையில் தெற்காசியாவில் ஓரினச்சேர்க்கை திருமணங்களை […]

இலங்கை

நிதி இராஜாங்க அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

மேலும் 300 அத்தியாவசிய பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இன்று அறிவித்துள்ளார். அடுத்த வாரத்திற்குள் இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக ராஜாங்க அமைச்சர் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். ஜூன் 2023 இல் 240 க்கும் மேற்பட்ட பொருட்களின் இறக்குமதி தடையை நீக்கி அரசாங்கம் கடைசியாக வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டது. கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக மார்ச் 2020 முதல் அதன் நீடித்த கடுமையான […]

இலங்கை

பிரதமர் மோடிக்கு கடிதம் ;நாளை இந்திய தூதரிடம் கையளிப்பு

  • July 12, 2023
  • 0 Comments

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியும் தமிழ் மக்கள் கூட்டணியும் இணைந்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்புவதற்காக தயாரித்த கடிதத்தில் சில கட்சிகளின் தலைவர்கள் கையொப்பமிட்ட நிலையில் கடிதம் நாளைய தினம் இந்திய தூதரிடம் கையளிக்கப்படவுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விரைவில் இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ள நிலையில் இந்திய அரசாங்கம் தமிழர் தரப்பு விடயங்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி குறித்த கடிதம் தயாரிக்கப்பட்டுள்ளது. நான்கு கட்சிகளின் தலைவர்கள் யாழ்ப்பாணத்தில் ஈ.பி.ஆர்.எல்.எப். […]

இலங்கை

யாழ். பல்கலைக்கழகத்திற்கு புதிய துணைவேந்தர் தெரிவு! கூடியது பல்கலைக்கழகப் பேரவை

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் அடுத்த துணைவேந்தர் பதவிக்காக விண்ணப்பித்திருந்த நான்கு பேரில், திறமைப் புள்ளி அடிப்படையில் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா, சிரேஷ்ட பேராசிரியர் ரி..வேல்நம்பி, பேராசிரியர் செ. கண்ணதாசன் ஆகியோர் பேரவையினால் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். பல்கலைக் கழகங்களில் துணைவேந்தரை நியமிப்பதற்கான சுற்றுநிருபத்துக்கு அமைவாகத் துணைவேந்தர் பதவிக்காக விண்ணப்பித்திருந்தவர்களின் தகுதி, தராதரங்களின் அடிப்படையில் திறமைப் புள்ளியிடலுக்காகப் பல்கலைக்கழகப் பேரவை இன்று கூடியது. இதன்போது, துணைவேந்தர் பதவிக்காக விண்ணப்பித்திருந்த தற்போதைய துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா, உயர் பட்டப்படிப்புகள் பீடாதிபதி பேராசியர் செ. […]

பொழுதுபோக்கு

பணத்தை தூக்கி முகத்தில் வீசிய பாக்கியா… கோபி-ராதிகாவை வெளியேற்றி அதிரடி

  • July 12, 2023
  • 0 Comments

விஜய் டிவியின் முதன்மை மற்றும் முன்னணி தொடராக பாக்கியலட்சுமி தொடர் தொடர்ந்து இருந்து வருகிறது. Urban categoryயிலும் கடந்த சில வாரங்களாக இந்தத் தொடர் தொடர்ந்து சன் டிவியின் எதிர்நீச்சல் தொடரை பின்னுக்குத் தள்ளிவிட்டு முதலிடத்தை விடாமல் பிடித்துக் கொண்டுள்ளது. இந்நிலையில் அடுத்தடுத்த பரபரப்பான திருப்பங்களுடன் ரசிகர்களை கவர்ந்துவரும் இந்தத் தொடரின் இந்த வார ப்ரமோ வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. தொடர்ந்து சேனலின் முதன்மை இடத்தில் நிலை கொண்டுள்ள இந்தத் தொடர், கடந்த சில வாரங்களாக Urban […]

இலங்கை

மண்டைதீவில் காணி சுவீகரிப்பு நடவடிக்கை ;போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்

  • July 12, 2023
  • 0 Comments

யாழ்ப்பாணம் மண்டைதீவு பகுதியில் கடற்படையினருக்கு காணி சுவீகரிப்பதற்கான நடவடிக்கைக்கு எதிராக பொதுமக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். வேலணைப் பிரதேச செயலாளர் பிரிவின், மண்டைதீவு கிழக்கில் ஜே/07 கிராம சேவகர் பிரிவில் உள்ள, 29 பேருக்குச் சொந்தமான 18 ஏக்கருக்கும் அதிகமான தனியார் காணிகளை, வெலிசுமன கடற்படை முகாம் அமைப்பதற்காக சுவீகரிக்கும் நோக்கில், இன்று புதன்கிழமை (12) அளவீட்டுப் பணிகளை ஆரம்பிக்கப்போவதாக நில அளவைத் திணைக்களத்தினரால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது இவ் அளவீட்டுப் பணிகளை தடுத்து நிறுத்துவதற்காக, […]

வட அமெரிக்கா

மெக்சிகோவில் நகர காவல் அலுவலகத்தில் வெடிகுண்டு தாக்குதல்; காவல் உயரதிகாரிகள் 3 பேர் பலி

  • July 12, 2023
  • 0 Comments

மெக்சிகோவின் மேற்கே ஜலிஸ்கோ மாகாணத்தில் உள்ள நகர காவல் மற்றும் வழக்கறிஞர்கள் அலுவலகம் மீது திடீரென வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. இந்த சம்பவத்தில் காவல் துறையை சேர்ந்த அதிகாரிகள் 3 பேர் பலியாகி உள்ளனர். 10 பேர் காயமடைந்து உள்ளனர். நேற்றிரவு நடந்த இந்த தாக்குதல் சம்பவம் பற்றி கவர்னர் என்ரிக் அல்பேரா தனது ட்விட்டரில் உறுதிப்படுத்தி உள்ளார். இது ஒரு கோழைத்தனம் வாய்ந்த தாக்குதல் என குறிப்பிட்ட அவர், மெக்சிகன் மாகாணம் முழுமைக்கும் ஒரு […]

இலங்கை

காலி கடற்பகுதியில் இலங்கை மீனவர் மீது பெட்ரோல் குண்டு வீச்சு

  • July 12, 2023
  • 0 Comments

இலங்கையின் காலி கடற்பகுதியில் இந்தோனேசிய மீன்பிடிக்கப்பல் மேற்கொண்டதாக சந்தேகப்படும் பெட்ரோல் குண்டுத் தாக்குதலில் இலங்கை மீனவர் ஒருவர் காயமடைந்துள்ளார். நீர்கொழும்பு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து பெயர் வெளியிடப்படாத இந்த மீனவர், ஐவர் கொண்ட தனது குழுவுடன், ஜூன் 22ஆம் திகதி பல நாள் மீன்பிடி இழுவை படகில் கடலுக்கு சென்றுள்ளார். இந்த நிலையில், அவர்கள் பயணித்த படகு வெளிநாட்டுக் கப்பலுடன் மோதியுள்ளது. இதனை தொடர்ந்து, வெளிநாட்டுக் கப்பலில் இருந்தவர்கள், இலங்கை இழுவை படகு மீது பெற்றோல் குண்டால் […]

You cannot copy content of this page

Skip to content