இலங்கை

புதுக்குடியிருப்பு பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் க.விஜயகுமாருக்கு அஞ்சலி

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் முல்லைத்தீவு மாவட்ட அமைப்பாளரும் புதுக்குடியிருப்பு பிரதேச சபை முன்னாள் உறுப்பினருமான க.விஜயகுமார் அவர்கள் நேற்று (14) சுகயீனம் காரணமாக காலமாகியுள்ளார். சுகயீனம் காரணமாக நேற்று (14) யாழ்ப்பாணம் தெல்லிப்பளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார். இவருடைய உடலம் முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு உடையார் கட்டுப் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் […]

ஐரோப்பா

வைர இறக்குமதியை குறிவைத்து ரஷ்யாவிற்கு எதிரான பொருளாதாரத் தடை: ஐரோப்பிய ஆணையம் அதிரடி நடவடிக்கை

வைரங்களின் இறக்குமதியை இலக்காகக் கொண்டு ரஷ்யாவிற்கு எதிரான புதிய சுற்று பொருளாதாரத் தடைகளுக்கான அதிகாரப்பூர்வ முன்மொழிவை ஐரோப்பிய ஆணையம் உறுப்பு நாடுகளுக்கு அனுப்பியுள்ளது. உயர் பிரதிநிதி ஜோசப் பொரெல் கையெழுத்திட்ட இந்த முன்மொழிவு, ஆலோசனைகளைத் தொடர்ந்து விநியோகிக்கப்பட்டது. அதில் “புதிய இறக்குமதி மற்றும் ஏற்றுமதி தடைகள், எண்ணெய் விலை வரம்பை இறுக்குவதற்கான நடவடிக்கைகள் மற்றும் பொருளாதாரத் தடைகளைத் தவிர்க்கும் மூன்றாம் நாட்டு நிறுவனங்கள் மீதான கடுமையான நடவடிக்கைகள்” ஆகியவை அடங்கும் என்று ஐரோப்பிய ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் […]

இலங்கை

மத்திய வங்கக் கடல் பகுதியில் உருவாகியுள்ள ஆழந்த காற்றழுத்த தாழ்வு நிலை குறித்து எச்சரிக்கை!

  • November 15, 2023
  • 0 Comments

மேற்கு மத்திய வங்கக் கடல் பகுதியில் நாளைய (16.11) தினம் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, மத்திய வங்கக் கடலில் பயணிக்கும் பல நாள் மீன்பிடி படகுகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பகுதியை சுற்றி அந்தமான் நிக்கோபாரை ஒட்டியுள்ள பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று (15.11) காலை தோன்றியது. இது நாளையதினம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வ […]

இலங்கை

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு பாதீட்டில் நிதி ஒதுக்கீடு : வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கடும் கண்டணம்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு பாதீட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட விடயத்துக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கடும் கண்டணம் வெளியிட்டுள்ளனர். நீதியே எமக்கு தேவை எனவும் நிதி கோரி நாம் போராடவில்லை எனவும் நிதி எமக்கு தேவையில்லை எனவும் நீதியே வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்க தலைவி சிவபாதம் இளங்கோதை இதனை தெரிவித்தார். யாழ் ஊடக அமையத்தில் நேற்று (14) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தார் இங்கு […]

ஐரோப்பா

புகலிடக்கோரிக்கையாளர்களை ருவாண்டாவிற்கு அனுப்பும் திட்டத்திற்கு எதிராக நீதிமன்றம் தீர்ப்பளித்தது!

  • November 15, 2023
  • 0 Comments

ருவாண்டாவிற்கு புகலிடக் கோரிக்கையாளர்களை அனுப்பும் இங்கிலாந்து அரசின் திட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இது சட்டவிரோதமானது என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. பிரித்தானியாவில் அண்மைக்காலமாக சட்டவிரோதமாக குடியேறியுள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்ற நிலையில், கால்வாய் மூலம் ஆபத்தான பயணங்களை மேற்கொண்டு புகலிடக்கோரிக்கையாளர்கள் அடைக்கலம் கோருகின்றனர். இந்நிலையில் இவ்வாறு வருபவர்களை ரூவாண்டாவிற்கு அனுப்பும் திட்டத்தை பிரித்தானிய அரசாங்கம் முன்வைத்தது. இது குறித்து நீதிமன்ற விசாரணைகள் நடைபெற்றன. இந்நிலையில்,  நீதிமன்றத்தின் தலைவர் லார்ட் ரீட் கூறுகையில், “புகலிடக்கோரிக்கையாளர்களை ரூவாண்டாவிற்கு அனுப்புவது உண்மையான […]

இலங்கை

இலங்கையில் பாடசாலை சுவரொன்று இடிந்து விழுந்ததில் மாணவர் ஒருவர் உயிரிழப்பு!

  • November 15, 2023
  • 0 Comments

வெல்லம்பிட்டியவில் பாடசாலை ஒன்றில் சுவர் இடிந்து விழுந்ததில் மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 6 மாணவர்கள் காயமடைந்துள்ளனர். வெல்லம்பிட்டிய, வேரகொடெல்ல கனிஷ்ட கல்லூரி மாணவர்கள் குழுவொன்று விபத்தில் சிக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அந்த பாடசாலையில் தரம் 01 இல் கல்வி கற்கும் மாணவர்களே இவ்வாறு விபத்தில் சிக்கியுள்ளனர். விபத்தில் காயமடைந்த 6 மாணவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும் ஒரு மாணவர் லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளார். தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 06 மாணவர்களில் ஒரு மாணவர் […]

இலங்கை

யாழில் தொடரும் கனமழை:வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்ட தகவல்

யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 100 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக யாழ்ப்பாண பிராந்திய வளிமண்டலவியல் திணைக்கள பொறுப்பதிகாரி த.பிரதீபன் தெரிவித்துள்ளார். நேற்று(14) காலை 8.30 மணி முதல் இன்று (15) காலை 8.30 மணி வரையான மழைவீழ்ச்சி பதிவை அடிப்படையாகக் கொண்டே யாழ்ப்பாணத்தில் 100 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தெரிவித்தார். அச்சுவேலியில் 175.4 மில்லிமீட்டர் மழை வீழ்ச்சியும், பருத்தித்துறையில் 170.8 மில்லிமீட்டர் மழை வீழ்ச்சியும், தெல்லிப்பழையில் 139.2 மில்லிமீட்டர் […]

பொழுதுபோக்கு

“நீண்ட நாட்களாக எதிர்பார்த்தது நடந்துவிட்டது” மியா ஜார்ஜ்….

  • November 15, 2023
  • 0 Comments

தமிழில் அமரகாவியம் படம் மூலம் அறிமுகமானவர் மலையாள நடிகை மியா ஜார்ஜ். தொடர்ந்து ஒருநாள் கூத்து, இன்று நேற்று நாளை, வெற்றிவேல் உள்ளிட்ட பல படங்களில் கதாநாயகியாக நடித்த மியா ஜார்ஜ், கடந்த சில மாதங்களுக்கு முன்பு விக்ரம் நடிப்பில் வெளியான கோப்ரா படத்தில் கூட முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். மலையாள திரையுலகில் சக நடிகைகளை தனது நட்பு வட்டாரத்தில் அதிக அளவில் வைத்திருக்கும் மியா ஜார்ஜ் தொடர்ந்து அவர்களுடன் விழாக்களிலும் பொது நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு நட்பை […]

இலங்கை

யாழில் மூளைக் காய்ச்சலால் உயிரிழந்த ஒரு பிள்ளையின் தந்தை!

மூளைக் காய்ச்சல் காரணமாக யாழ்ப்பாணத்தில் கிராம சேவகர் ஒருவர் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார். புத்தூர் கிழக்கு பகுதியைச் சேர்ந்த குமாரன் குகதாசன் (வயது 48) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபர் தீபாவளி தினத்தன்று மயங்கி விழுந்துள்ளார். இந்நிலையில், அவர் அச்சுவேலி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் நேற்றைய தினம் […]

மத்திய கிழக்கு

காசாவில் மருத்துவமனைக்குள் புதைக்கப்பட்ட 200 உடல்கள்!வெளியான அதிர்ச்சி தகவல்

  • November 15, 2023
  • 0 Comments

காசாவின் அல்ஷிபா மருத்துவமனைக்குள் உயிரிழந்த 200 பேரின் உடல்களை மருத்துவமனைக்குள்ளேயே புதைகுழியொன்றிற்குள் புதைத்துள்ளதாக மருத்துவர்கள் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளனர். மருத்துவமனைக்குள் 200 உடல்களை புதைத்துள்ளதாக மருத்துவர் அட்னான் அல் பேர்ஸ் பிபிசிக்கு தெரிவித்துள்ளார்.100க்கும் மேற்பட்ட மருத்துவமனை பணியாளர்கள் அந்த உடல்களை புதைத்ததாக கூறிய அவர், சுமார் ஆறுமணித்தியாலங்கள் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டோம் என அவர் தெரிவித்துள்ளார். உடல்கள் பல நாட்களாக சிதைவடையும் நிலையில் கைவிடப்பட்டிருந்ததன் காரணமாக பாரியமனித புதைகுழியொன்றை தவிர மருத்துவர்களுக்கு வேறு வழியிருக்கவில்லை என எலும்பியல் […]