போருக்கு மத்தியில் இஸ்ரேல் செல்ல தயாராகி வரும் 20,000 இலங்கையர்கள்!
இஸ்ரேல் – ஹமாஸ் போருக்கு மத்தியில் ஏறக்குறைய 20,000 தொழிலாளர்கள் வேலைத் தேடி அங்கு செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி நிலைமை போரையும் மீறி அங்கு செல்லவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளியுள்ளதாக தொழிலாளர்களில் ஒருவரான லக்நாத் டயஸ் என்பவர் தெரிவித்துள்ளார். கிட்டத்தட்ட 10 மடங்கு சம்பளத்திற்காக அவர்கள் அங்கு பண்ணையாட்களாக செல்ல தயாராகி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.