உலகம்

அல்லாஹ்’ என்று எழுதப்பட்ட நெக்லஸ் அணிந்த மாணவி மீது சக மாணவர்கள் கொடூர தாக்குதல்

‘அல்லாஹ்’ என்று எழுதப்பட்ட நெக்லஸ் அணிந்து; ஜேர்மனியில் முஸ்லிம் மாணவி ஒருவர் சக மாணவர்களால் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் பெர்லினில் உள்ள வில்ஹெல்ம்ஸ்டாட்டில் உள்ள ஒரு பள்ளியில் வெள்ளிக்கிழமை இந்த சம்பவம் நடந்துள்ளது. 15 வயது மாணவியை குளியலறைக்கு அழைத்துச் சென்று கொடூரமாக தாக்கி, அவரது கழுத்தில் இருந்த நகையை கழட்டியதாக துருக்கிய செய்தி நிறுவனம் அனடோலு தெரிவித்துள்ளது. சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்தனர். பள்ளியின் குளியலறையில் 5 வகுப்பு மாணவர்கள் மாணவியை […]

மத்திய கிழக்கு

‘ஹமாஸ் தீவிரவாதிகளை ஒழிப்பதே எங்கள் இலக்கு’ – பிரதமர் நெதன்யாகு

  • November 27, 2023
  • 0 Comments

ஹமாஸ் தீவிரவாதிகளை ஒழிப்பதே தங்களது முழுமையான இலக்கு” என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ளார். இஸ்ரேல் பகுதிக்குள் கடந்த அக்டோபர் 7ம் திகதி அத்துமீறி நுழைந்த பாலஸ்தீன ஹமாஸ் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இஸ்ரேலியர்கள் 1,400 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து, ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக இஸ்ரேல் பதில் தாக்குதலைத் தொடங்கியது. அதன் தொடர் தாக்குதலில் ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள காஸா நகரம் முற்றிலுமாக உருக்குலைந்து வருகிறது. அதனால் காயமடைந்தவர்களை அப்புறப்படுத்தவும் பிணைக்கைதிகளை விடுவிக்கவும் நடந்த பேச்சு வார்த்தையின் […]

இலங்கை

இலங்கையில் புதிய தலைமைத்துவத்தை நோக்கி அனைவரும் செயற்பட வேண்டும்

  • November 27, 2023
  • 0 Comments

பாரம்பரிய அரசியல் கட்சிகளை நிராகரித்து நாட்டை நேசிக்கும் புதிய தலைமைத்துவத்தை நோக்கி அனைவரும் செயற்பட வேண்டும் என பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் அவர்கள் தெரிவித்துள்ளார். சர்வதேச கத்தோலிக்க ஊடகவியலாளர் சேவையின் ஏற்பாட்டில் சிக்னிஸ் சினிமா விருதுகள் வழங்கும் நிகழ்வு நேற்று (26.11) இரவு கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,  “சமூக ஊடகங்களை ஒழுங்குபடுத்துவதாகக் […]

இந்தியா

குஜராத் மாநிலத்தில் நிலவிவரும் சீரற்ற காலநிலை: மின்னல் தாக்கி 20 பேர் பலி

இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் நிலவிவரும் மழையுடனான காலநிலையினால் மின்னல் தாக்கத்திற்கு உள்ளாகி 20 பேர் உயிரிழந்துள்ளனர். இதனை அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தநிலையில், மின்னல் தாக்கத்தினால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மாநிலத்தின் உள்துறை அமைச்சகத்தினால் நிவாரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் சீரற்ற காலநிலையினால், விவசாயிகளின் பல ஏக்கர் பயிர்ச்செய்கை நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை

நான் ஒரு துரோகியா?- முத்தையா முரளிதரன் கேள்வி

  • November 27, 2023
  • 0 Comments

இலங்கையின் பிரச்சனையை தமிழக அரசு சரியாக புரிந்து கொள்ள தவறிவிட்டது என்று முத்தையா முரளிதரன் கூறியுள்ளார். இந்தியாவின் கோவாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவிலேயே முத்தையா முரளிதரன் இதனை கூறியுள்ளார். இலங்கையில் போர் நடைபெற்ற போது, ​​சில அரசியல்வாதிகள் பிரச்சினையை சரியாக புரிந்து கொள்ளாது என்னை துரோகி என்றும் கூறினார்கள் என முத்தையா முரளிதரன் அங்கு கருத்து தெரிவிக்கையில் கூறிப்பிட்டார். முரளியின் வாழ்க்கை வரலாறு தொடர்பாக உருவாக்கப்பட்ட ‘A Legendary 800 – Against All Odds’ […]

உலகம்

கிரீஸ் நாட்டில் புயலில் சிக்கி சரக்கு கப்பல் கவிழ்ந்தது விபத்து

கிரீஸ் நாட்டில் அலெக்சாண்ட்ரியா துறைமுகத்தில் இருந்து இஸ்தான் புல்லுக்கு 6 ஆயிரம் டன் உப்புகளை ஏற்றிக்கொண்டு சென்ற சரக்கு கப்பல் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த கப்பல் லெஸ்போஸ் தீவு அருகே கடும் புயலில் சிக்கி கப்பல் கடலில் கவிழ்ந்தாக தெரியவந்துள்ளது. விபத்து நடந்த கப்பலில் 8 எகிப்தியர்கள், 4 இந்தியர்கள், 2 சீரியாவைச் சேர்ந்தவர் என 14 பேர் இருந்துள்ளனர். இதில் எகிப்து நாட்டை சேர்ந்த ஒருவர் மட்டும் உயிர் தப்பியதுடன் ஒருவர் உயிரிழந்துள்ளார். […]

இலங்கை

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இலங்கை விளையாட்டு அமைச்சரின் பதவி பறிக்கப்பட்டுள்ளது!

  • November 27, 2023
  • 0 Comments

விளையாட்டு, இளைஞர் விவகார மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் திரு.ரொஷான் ரணசிங்க உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அந்தப் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி சற்று முன்னர் ரொஷான் ரணசிங்கவிடம் கடிதம் வழங்கியதாக ரொஷான் ரணசிங்க இன்று (27.11) தெரிவித்தார்.

இலங்கை

உலக சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்ட மாற்றம்!

  • November 27, 2023
  • 0 Comments

உலக சந்தையில் தங்கத்தின் விலை தற்போது மீண்டும் 2,000 அமெரிக்க டாலர்களை தாண்டியுள்ளது. ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இன்று (27.11) $2015.09 ஆக பதிவாகியுள்ளது, இது கடந்த வார இறுதியுடன் ஒப்பிடுகையில் சுமார் $11 அதிகமாகும். கடந்த 06 மாதங்களைக் கருத்தில் கொண்டால், இது சுமார் 60 டாலர்கள் அதிகரிப்பாகவும், ஒரு வருடத்தில் சுமார் 261 டாலர்கள் அல்லது 15% அதிகரிப்பாகவும் கருதலாம். இந்நிலையில் இலங்கையிலும் தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கமாக பதிவாகியுள்ளது. இதன்படி 24 […]

வட அமெரிக்கா

ரொறன்ரோவில் இடம் பெற்ற கோர விபத்து; ஐவர் பலி!

  • November 27, 2023
  • 0 Comments

கனடாவின் ரொறன்ரோ பெரும்பாக பகுதியில் இடம்பெற்ற கோர விபத்து சம்பவம் ஒன்றில் ஐந்து பேர் கொல்லப்பட்டுள்ளனர்.நான்கு பதின்ம வயது உடையவர்களும் ஒரு பெண்ணும் இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர். இரண்டு வாகனங்கள் மோதி கொண்டதில் இந்த விபத்து இடம் பெற்றுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.ஹிடன்வெளி பகுதியின் 60-ஆம் இலக்க அதிவேக நெடுஞ்சாலையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. 15 முதல் 17 வயது மதிக்கத்தக்க இளைஞர்களே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர்.இவர்கள் நோர்த் யோர்க் மற்றும் ரிச்மண்டில் பகுதியைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் […]

பொழுதுபோக்கு

வெள்ளித்திரையிலிருந்து சினிமாவில் நாயகியாக கால் பதித்தார் நம்ம “வெண்ணிலா”(பிரியங்கா குமார்)

  • November 27, 2023
  • 0 Comments

காற்றுக்கென்ன வேலி தொடரில் நடித்துவந்த நடிகை பிரியங்கா குமார், கன்னட மொழி திரைப்படத்தில் நாயகியாக நடித்துள்ளார். பிரபல கன்னட இயக்குநர் துனியா சூரி இயக்கத்தில் பிரியங்கா நடித்துள்ள திரைப்படம் கடந்த 24ஆம் தேதி வெளியானது. அதில், பிரியங்காவின் நடிப்பு குறித்து பலர் பாராட்டி வருகின்றனர். காற்றுக்கென்ன வேலி தொடரில் வெண்ணிலா பாத்திரத்தில் பிரியங்கா நடித்து வந்தார். வெண்ணிலாவை நாங்கள் அதிகம் விரும்புவதாகவும், ஆனால், வெள்ளித்திரையில் தங்களின் நடிப்புக்கு நீங்கள் மேலும் பல உயரங்களுக்குச் செல்ல வேண்டும் என்றும் […]