பொழுதுபோக்கு

நயன்தாராவின் அன்னபூரணி விருந்து அறுசுவையா? அறுவையா.?

  • December 1, 2023
  • 0 Comments

லேடி சூப்பர் ஸ்டாராக மாஸ் காட்டிக் கொண்டிருக்கும் நயன்தாராவின் 75வது படமான அன்னபூரணி இன்று வெளியாகி உள்ளது. ஜெய், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்து இருக்கும் இப்படத்தை நிலேஷ் கிருஷ்ணா இயக்கியுள்ளார். அன்னபூரணி கதை.. பிராமண குடும்பத்து பெண்ணான அன்னபூரணிக்கு சிறந்த செஃப்பாக வேண்டும் என்ற ஒரு லட்சியம் இருக்கிறது. அதற்கு தன்னுடைய குடும்ப கலாச்சாரமும், ஆச்சாரமும் தடையாக இருக்கும் நிலையில் வீட்டை விட்டு செல்கிறார் நயன்தாரா. இலட்சியத்தை தேடி செல்லும் அவர் சந்திக்கும் தடைகள் என்ன? […]

இலங்கை

குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் போதகர் ஜெரோம் கைது!

  • December 1, 2023
  • 0 Comments

போதகர் ஜெரோம் பெர்னாண்டோ கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார். இன்று (01) இரண்டாவது நாளாக வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகியிருந்த நிலையில் குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். நாளையும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஆஜராகுமாறு நேற்று (30) அவருக்கு விடுக்கப்பட்ட அழைப்பின் படி அவர் இன்று காலை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகியிருந்தார். பௌத்தம் உள்ளிட்ட மதங்களை இழிவுபடுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டு […]

பொழுதுபோக்கு

ரன்பீர் கபூரின் Animal எப்படி இருக்கு?

  • December 1, 2023
  • 0 Comments

சந்தீப் வங்கா ரெட்டி இயக்கத்தில் ரிலீஸ் ஆகி இருக்கும் படம் அனிமல். இந்த படத்தில் ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா, அணில் கபூர், பாபி தியோல் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தின் மொத்த பட்ஜெட் 100 கோடி ஆகும். ஆகஸ்ட் மாதத்தில் ரிலீஸ் ஆக வேண்டிய இந்த படம், இன்று ரிலீஸ் செய்யப்பட்டு இருக்கிறது. ரசிகர்களின் பார்வையில்…. ரன்பீர் கபூர் இந்த படத்தில் முழுக்க முழுக்க ஆக்சன் ஹீரோவாக களம் இறங்கி இருக்கிறார். அவருடைய சினிமா கேரியரில் […]

ஆசியா

ஈராக்-அம்ரான்யா நகரில் வெடிகுண்டு தாக்குதலில் 10 பேர் பலி! (வீடியோ)

  • December 1, 2023
  • 0 Comments

ஈராக்கில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதல் மற்றும் துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். 14க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். ஈராக்கின் கிழக்கு தியாலா மாகாணத்தில் அம்ரான்யா நகரில் உள்ளூர் MP-யின் உறவினர்களை குறி வைத்து நேற்று மாலை இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. சாலையோரத்தில் வைக்கப்பட்டிருந்த இரண்டு வெடிகுண்டுகள் வெடித்ததில் அந்த வழியாக கடந்து சென்ற பயணிகள் வாகனம் இதில் சிக்கி நாசமானது. இந்த கோரத் தாக்குதலில் 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 14-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெடிகுண்டுகள் வெடித்ததும், காயமடைந்தவர்களை […]

இலங்கை

இலங்கையில் கடந்த வருடம் (2022) உயர்தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கான அறிவிப்பு!

  • December 1, 2023
  • 0 Comments

கடந்த ஆண்டு (2022) நடைபெற்ற உயர்தரப் பெறுபேறுகள் தொடர்பான வெட்டுப்புள்ளிகள் இன்று (01.12) வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை விடுத்துள்ள அவர், பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பித்த பரீட்சார்த்திகளுக்கு 6 வாரங்கள் என்ற குறுகிய காலப்பகுதியில் தமது கற்கை பீடங்கள் தொடர்பான தகவல்களை அதிகாரிகள் வெளியிட முடிந்துள்ளதாக தெரிவித்தார். பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் இணையத்தளத்தின் ஊடாக இந்த தகவல்கள் வெளியிடப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

இந்தியா

பெங்களூருவில் உள்ள 15 பாடசாலைகளுக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல்!

  • December 1, 2023
  • 0 Comments

கர்நாடக தலைநகர் பெங்களூருவில் உள்ள 15 பள்ளிகளுக்கு இன்று (01.12) காலை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மின்னஞ்சல் மூலம் வந்த குறித்த அச்சுறுத்தலால் மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் பதற்றம் நிலவியது. இந்நிலையில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு உள்ளிட்ட அதிகாரிகள், பள்ளி வளாகத்தில் சந்தேகப்படும்படியான பொருட்களை கண்டறிந்து மீட்டு வருகின்றனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகளில் இருந்து மாணவர்கள் மற்றும் ஊழியர்களை போலீசார் வெளியேற்றியுள்ளனர் மற்றும் பள்ளி அதிகாரிகள் தங்கள் குழந்தைகளை முன்கூட்டியே வந்து அழைத்துச் செல்லும்படி பெற்றோருக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

செய்தி

இந்தியாவில் முடி வளர்ப்பில் கின்னஸ் சாதனை படைத்த பெண்!

  • December 1, 2023
  • 0 Comments

உத்தர பிரதேச மாநிலத்தில் பெண் ஒருவர் முடி வளர்ப்பில் கின்னஸ் சாதனை படைத்துள்ளார். உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா என்ற பெண்ணே இந்த சாதனையை படைத்துள்ளார். இவர் சிறுவயது முதலே தலைமுடி வளர்ப்பதில் ஆர்வம் கொண்டவர். குறித்த பெண்மணி முடியை பராமரிப்பதற்கு கவனம் செலுத்தியுள்ளார். ஸ்மிதாவுக்கு சிறு வயதில் முடியை வெட்டிவிட்டனர். 14 வயதுக்கு பிறகு தனது தலைமுடியை வெட்டுவதை அவர் தவிர்த்தார். இதனால் அவரது முடி தொடர்ந்து வளர்ந்து தற்போது 7 அடி […]

பொழுதுபோக்கு

விஜய்யும் ஷாருக்கானும் இணையும் படம் கன்ஃபார்ம் ஆகிடுச்சு…. “கதை எழுதுறேன்”

  • December 1, 2023
  • 0 Comments

விஜய்யும், ஷாருக்கானும் இணையும் படம் குறித்து அட்லீ பேசியிருப்பது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான அட்லீ விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் ஆகிய படங்களை இயக்கினார். இவற்றில் பிகிலை தவிர்த்து மற்ற படங்கள் அனைத்துமே சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தன். சூழல் இப்படி இருக்க ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கி பாலிவுட்டிலும் எண்ட்ரி கொடுத்திருக்கிறார் அட்லீ. ஷாருக்கானுடன் நயன் தாரா, விஜய் சேதுபதி, ப்ரியாமணி உள்ளிட்ட பலர் நடித்திருந்த […]

மத்திய கிழக்கு

மீண்டும் தொடங்கும் இஸ்ரேல் – ஹமாஸ் போர்!

  • December 1, 2023
  • 0 Comments

7 நாள் போர் நிறுத்தம் முடிவுக்கு வந்ததையடுத்து, இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே மீண்டும் மோதல்கள் தொடங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. காசாவில் இருந்து இஸ்ரேலை நோக்கி ராக்கெட்டுகள் ஏவப்பட்டதாகவும், அந்த ராக்கெட்டுகளை இஸ்ரேல் ராணுவம் சுட்டு வீழ்த்தியதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. நேற்று (30.11) வரை இஸ்ரேலால் கடத்தப்பட்ட 110 பணயக்கைதிகளும், இஸ்ரேல் சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த 240 பாலஸ்தீனியர்களும் விடுவிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையில், காசா பகுதியில் உள்ள இலக்குகள் மீது வான்வழித் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.

ஆஸ்திரேலியா

நியூசிலாந்து முழுவதும் அமலுக்கு வரும் தடை!

  • December 1, 2023
  • 0 Comments

நியூசிலாந்து முழுவதும் பாடசாலைகளில் கையடக்க தொலைபேசிகள் பயன்படுத்த தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டுப் பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் (Christopher Luxon) இதனை தெரிவித்துள்ளார். மாணவர்களின் கவனம் சிதறாமல் இருக்க அது உதவும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். நியூஸிலந்தில் சரிந்து வரும் கல்வியறிவு விகிதத்தைக் கையாள லக்சனின் அரசாங்கம் முயற்சி செய்கிறது. ஒரு காலத்தில் உலகின் சிறந்த கல்வியறிவு கொண்ட நாடுகளில் ஒன்றாக நியூஸிலந்து திகழ்ந்தது. ஆனால் அங்கு தற்போது படிப்புத் திறனும் எழுத்துத் திறனும் பெரியளவு […]