உலகம்

உலகளாவிய காலநிலை நிதியத்திற்கு 03 பில்லியன் டொலர்களை வழங்கும் அமெரிக்கா!

  • December 2, 2023
  • 0 Comments

உலகளாவிய காலநிலை நிதியத்திற்கு அமெரிக்கா 3 பில்லியன் டொலர்களை வழங்குவதாக அறிவித்துள்ளது. துபாயில் நடைபெறும் காலநிலை உச்சமாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையில் மேற்படி தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் பேசிய அவர்,  “இந்த நெருக்கடியை உலகம் எவ்வாறு எதிர்கொள்ள முடியும் மற்றும் எதிர்கொள்ள வேண்டும் என்பதை இன்று நாங்கள் செயல்பாட்டின் மூலம் நிரூபிக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

இலங்கை

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள இளைஞனின் விடுதலையில் டக்ளஸ் கரிசனை

தடைசெய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்புடன் சம்மந்தப்பட்ட ரீசேர்ட் அணிந்திருந்தமையினால் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள இளைஞனின் விடுதலை தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டுள்ள இளைஞனின் பெற்றோர் இன்று(01.12.2023) அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து தங்களின் குடும்ப நிலையை எடுத்துக்கூறியதுடன், மகனின் விடுதலைக்கு உதவுமாறும் கேட்டனர். இந்நிலையில் உரிய தரப்புக்களுடன் கலந்துரையாடிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அவர்களுக்கு நிலமைகளை எடுத்துக்கூறினார். இதனையடுத்து, குறித்த இளைஞனின் பெற்றோருக்கு நம்பிக்கையளித்த அமைச்சர், சஞ்சலமடைந்து […]

இலங்கை

யாழ் – கல்லுண்டாய் பகுதி விபத்து தொடர்பில் வெளியான தகவல்!

  • December 2, 2023
  • 0 Comments

யாழ்ப்பாணம் கல்லுண்டாய் பகுதியில் நடைபெற்ற விபத்தில் வைத்தியர் ஒருவர் உள்ளிட்ட இருவர் உயிரிழந்துள்ளதாக வெளியான செய்திகள் உண்மைக்கு புறம்பான செய்திகள் என தெரியவந்துள்ளது. “யாழ்ப்பாணம் கல்லூண்டாய் பகுதியில் இரு மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் வைத்தியரும் மற்றுமொருவரும் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சில இணையத்தள ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. இந்நிலையில்,  குறித்த செய்தி தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் , யாழ்.போதனா வைத்தியசாலை உள்ளிட்ட தரப்பினரிடம் கேட்ட போது , அவ்வாறான விபத்து சம்பவம் எதுவும் நடைபெறவில்லை என […]

உலகம்

12 பேருடன் காணாமல் போன சரக்கு கப்பல்: தேடும் பணியை நிறுத்திய கிரீஸ்

கடந்த வார இறுதியில் ஏஜியன் கடலில் மூழ்கிய சரக்குக் கப்பலில் காணாமல் போன 12 மாலுமிகளைத் தேடும் பணியை முடிவுக்குக் கொண்டு வருவதாக கிரீஸின் கடலோர காவல்படை அறிவித்துள்ளது. ஐந்து சரக்கு கப்பல்கள், மூன்று கடலோர காவல்படை கப்பல்கள், விமானப்படை மற்றும் கடற்படை ஹெலிகாப்டர்கள் மற்றும் ஒரு கடற்படை போர் கப்பல் ஆகியவை மீட்பு பணியில் ஈடுபட்டன. கப்பலில் 11 எகிப்தியர்கள், இரண்டு சிரியர்கள் மற்றும் ஒரு இந்தியர் இருந்ததாக தெரிவிக்கப்பட்டது. 14 பணியாளர்களை ஏற்றிக்கொண்டு உப்பு […]

மத்திய கிழக்கு

ஹமாஸ் பிடியில் இருக்கும் பிணைக்கைதிகளின் எண்ணிக்கை தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்!

  • December 2, 2023
  • 0 Comments

இஸ்ரேல், ஹமாஸ் இடையிலான போர் நிறுத்தம் இரண்டாவது முறையாக 2 நாட்கள் நீட்டிக்கப்பட்டது. இந்த நிலையில், காஸாவில் மீண்டும் ராணுவ தாக்குதலை நேற்று காலை முதல் தொடங்கி இருப்பதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. ஹமாஸ் படையினர் போர்நிறுத்தத்தை மீறி விட்டதாகவும், போர் நிறுத்தத்தை மதிக்காமல் 2 ராக்கெட் தாக்குதலை நடத்தியதாகவும் இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது. ஹமாஸ் பிடியிலிருந்து பிணைக் கைதிகள் விடுவிக்கப்பட்ட நிலையில் இஸ்ரேல் தன்வசம் சிறையில் இருந்த பாலஸ்தீனர்களைப் பதிலுக்கு விடுதலை செய்துள்ளது. இந்த நிலையில் ஹமாஸ் […]

இலங்கை

வவுனியா – செட்டிக்குளம் இரட்டை கொலை சம்பவம் தொடர்பில் 19 வயது இளைஞன் கைது!

  • December 2, 2023
  • 0 Comments

வவுனியா – செட்டிக்குளம் பகுதியில் இடம்பெற்ற இரட்டை கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். செட்டிக்குளம் பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் கடந்த 30ஆம் திகதி கணவனும் மனைவியும் வெட்டிக் கொலை செய்யப்பட்டிருந்தனர். குறித்த கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் கிளிநொச்சி – உருத்திரபுரம் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். செட்டிக்குளம் பகுதியைச் சேர்ந்த 19 வயதான இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவரிடம் மேற்கொள்ளப்பட் […]

இலங்கை

திருமலை ஶ்ரீ சண்முக இந்து மகளிர் கல்லூரி மாணவி அகில இலங்கை ரீதியில் 6ம் இடம் – ஆளுநர் செந்தில் தொண்டமான் பாராட்டு

  • December 2, 2023
  • 0 Comments

திருகோணமலை ஶ்ரீ சண்முக இந்து மகளிர் கல்லூரி மாணவி தர்சனா கோணேஸ் க.பொ.த சாதரண தர பரீட்சையில் தேசிய ரீதியில் 6 ஆம் இடத்தையும் தமிழ் மொழி மூலமாக இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளார். இம்மாணவியை நேரில் அழைத்து கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். மாணவியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்து அவர்களின் கல்வி நடவடிக்கையில் அக்கறை செலுத்திய அதிபர், ஆசிரியர்கள் பெற்றோர் மற்றும் வலய கல்வி பணிப்பாளர் ஆகியோரை சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடியதுடன் அவர்களுக்கு […]

ஐரோப்பா

இங்கிலாந்தின் தேம்ஸ் நதியில் இந்திய மாணவரின் சடலம் மீட்பு!

  • December 2, 2023
  • 0 Comments

கடந்த மாதம் இங்கிலாந்தில் காணாமல் போன 23 வயதான இந்திய மாணவர் அங்குள்ள தேம்ஸ் நதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. செப்டம்பர் மாதம் மேற்படிப்புக்காக இங்கிலாந்து வந்த மித்குமார் படேல், நவம்பர் 17ஆம் திகதி காணாமல் போனார். நவம்பர் 21 அன்று கிழக்கு லண்டனில் உள்ள கேனரி வார்ஃப் பகுதிக்கு அருகே தேம்ஸ் நதியில் அவரது உடலை பெருநகர காவல்துறையினர் கண்டுப்பிடித்தனர்.  இந்த மரணம் சந்தேகத்திற்குரியதாக இல்லை என மெட் போலீஸ் தெரிவித்துள்ளது. இதற்கிடையில் மித்குமார் […]

இலங்கை

திருகோணமலையில் ஐஸ் போதை பொருளுடன் இளைஞரொருவர் கைது

திருகோணமலை -கிண்ணியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் ஐஸ் போதை பொருளை தம் வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் இன்று (02) இளைஞரொருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பிரிவின் திருகோணமலை பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக குறித்த இளைஞரை பைசல்நகர் பிரதான வீதியில் வைத்து சோதனையிட்ட போது அவரிடமிருந்து 05 கிரேம் 400 மில்லிகிரேம் ஐஸ் போதை பொருள் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர் கிண்ணியா- மாஞ்சோலை […]

இலங்கை

இலங்கை ஜனாதிபதி ரணிலுக்கும், பிரானஸ் ஜனாதிபதி மக்ரோனுக்கும் இடையில் சந்திப்பு!

  • December 2, 2023
  • 0 Comments

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனுக்கும் இடையில் இருதரப்பு கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது இலங்கையின் பொருளாதாரத்தில் பசுமையான மாற்றத்திற்கான யோசனைகள் பரிமாறப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. மேலும் இந்தியப் பெருங்கடல் ரிம் சங்கத்துடன் (IORA) பிரான்சின் உறவை வலுப்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது. சர்வதேச காலநிலை மாற்ற பல்கலைக்கழக திட்டத்தில் இணைந்து கொள்ளுமாறு பிரான்ஸ் ஜனாதிபதிக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் துபாயில் நடைபெறும் 28வது ஐக்கிய […]