உலகம்

வுஹான் ஆய்வகத்தில் இருந்தே கொவிட் -19 பரவியிருக்க கூடும் : நியூயார்க் மாநாட்டில் கருத்து!

  • December 10, 2023
  • 0 Comments

நியூயார்க் நகரில் சமீபத்தில் நடந்த சுகாதார மாநாட்டில், ஜனாதிபதி ஜோ பிடனின் முன்னாள் சிறப்பு உதவியாளர் டாக்டர் ராஜ் பஞ்சாபி, வுஹானில் உள்ள ஆய்வக கசிவிலிருந்து தொற்றுநோய் தோன்றுவதற்கான சாத்தியத்தை ஒப்புக்கொண்டார். ஆய்வகக் கசிவுக் கோட்பாட்டை “நம்பத்தகுந்தவை” என்று விவரித்த அவர், ஆய்வகங்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, ” உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்களை வலியுறுத்தினார். FBI, எரிசக்தித் துறை மற்றும் அமெரிக்க அரசாங்கத்தில் உள்ள பல்வேறு விஞ்ஞானிகள் மற்றும் அதிகாரிகளின் சமீபத்திய மதிப்பீடுகள், […]

இலங்கை

யாழ் – உடும்பிடி பகுதியில் எதிர்ப்பையும் மீறி மதுபானசாலைகளுக்கு அனுமதி

  • December 10, 2023
  • 0 Comments

யாழ்ப்பாணம் – உடுப்பிட்டி பகுதியில் மக்களின் எதிர்ப்பை மீறி மீளவும் மதுபானசாலைக்கு அனுமதி வழங்கப்பட்டதை தொடர்ந்து அதற்கு எதிராக சமூக மட்ட அமைப்புகள் தொடர் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று சனிக்கிழமை உடுப்பிட்டி விநாயகர் சனசமூக நிலையத்தில் உடுப்பிட்டி சமூகமட்ட அமைப்புக்கள் குறித்த விடயம் தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டனர். கரவெட்டி பிரதேச செயலாளர் நேரடியாகவும் வாய் மொழி மூலமாகவும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் தனக்கு அறிவுறுத்தியதனால் தான் இடத்திற்கான […]

இலங்கை

அஸ்வெசும இரண்டாம் கட்ட விண்ணப்பம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

அஸ்வெசும இரண்டாம் கட்டத்திற்காக எதிர்வரும் ஜனவரி மாதம் விண்ணப்பங்கள் கோரப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். இரண்டாம் கட்டத்தை ஆரம்பிப்பதற்கு முன்னர் முதல் கட்டம் பற்றிய விரிவான மீளாய்வை மேற்கொள்ள அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். முதற்கட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் மற்றும் பல்வேறு தரப்பினரால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகள் குறித்தும் கவனத்தில் கொள்ளப்படும் என இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். கடந்த ஒக்டோபர் மாதம் பதினாலு இலட்சத்து ஆறாயிரத்து […]

இந்தியா

இந்தியாவில் புதுமணத் தம்பதிகளுக்கு நேர்ந்த சோகம்!

  • December 10, 2023
  • 0 Comments

இந்தியாவின் சத்தீஸ்கரில் இடம்பெற்ற கார் விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். புதுமணத் தம்பதிகள் பயணித்த கார் ஒன்று ட்ரக் வண்டியுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. விபத்தின் போது, ​​மணமக்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் மூவர் காரில் இருந்துள்ளனர், மேலும் அவர்கள் ஐந்து பேரும் விபத்தில் இறந்தனர். திருமண வைபவம் முடிந்து வரும் வேளையில் அவர்கள் இந்த விபத்தில் சிக்கியதாக கூறப்படுகிறது.

இலங்கை

மின்சாரத் தடை தொடர்பில் இருவேறு விசாரணைகள்: இலங்கை மின்சார சபை வெளியிட்ட அறிவிப்பு

நாடளாவிய ரீதியில் நேற்று ஏற்பட்ட திடீர் மின்வெட்டுக்கான காரணத்தை கண்டறிய இலங்கை மின்சார சபை மற்றும் மின்சக்தி அமைச்சு ஆகிய இரண்டும் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த தெரிவித்துள்ளார். இன்று (10) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே இராஜாங்க அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலும் நேற்று (09) ஏற்பட்ட திடீர் மின் தடை தொடர்பில் இலங்கை மின்சார சபை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. கொத்மலை முதல் பியகம வரையிலான மின் விநியோக கட்மைப்பில் மின்னல் […]

புகைப்பட தொகுப்பு பொழுதுபோக்கு

பிரபல காமெடி நடிகருக்கு டும் டும் டும்… மணக்கோலத்தில் மனைவியுடன் புதுமாப்பிள்ளை… அரிய புகைப்படங்கள்

  • December 10, 2023
  • 0 Comments

டாக்டர் படம் மூலம் பிரபலமான ரெடின் கிங்ஸ்லி, இப்போது முன்னணி காமெடி நடிகராக கலக்கி வருகிறார். இந்நிலையில், இன்று திருமணம் செய்துகொண்ட ரெடின் கிங்ஸ்லியின் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. முன்னதாக கோலமாவு கோகிலா, எல்கேஜி, கூர்கா போன்ற படங்களில் நடித்திருந்தாலும், டாக்டர் தான் ரெடின் கிங்ஸ்லியை உச்சத்துக்கு கொண்டுச் சென்றது. இவர் இயக்குநர் நெல்சனின் நெருங்கிய நண்பர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து ரஜினியுடன் அண்ணாத்த, விஜய்யுடன் பீஸ்ட், விஜய் சேதுபதியுடன் காத்துவாக்குல ரெண்டு காதல், சிம்புவுடன் […]

இலங்கை

இலங்கை – புத்தளத்தில் மீட்கப்பட்ட பெருமளவிலான தங்கம்!

  • December 10, 2023
  • 0 Comments

புத்தளம் தடாகத்தில் மூழ்கியிருந்த 04 கிலோவுக்கும் அதிகமான தங்கம் கடற்படையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புத்தளம் தடாகத்தில் பட்டலங்குண்டுவ தீவுக்கு அருகில் உள்ள கடலில் இலங்கை கடற்படையினர்  மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போதே குறித்த தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இருவர்,  மற்றும் ஒரு டிங்கி படகு ஒன்றும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பா

ஸ்பெயினில் டூத் பிரஷை விழுங்கிய இளம் பெண்ணுக்கு நேர்ந்த நிலை…!

  • December 10, 2023
  • 0 Comments

ஸ்பெயினில் தொண்டையில் சிக்கி கொண்ட இறைச்சி துண்டை எடுப்பதற்காக இளம்பெண் ஒருவர் டூத் பிரஷை பயன்படுத்திய போது தவறுதலாக அதனை விழுங்கிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,ஸ்பெயின் – கால்டாகாவோ பகுதியை சேர்ந்த ஹீசியா என்ற இளம் பெண், தனது வீட்டில் வான்கோழியை சமைத்து உட்கொண்டுள்ளார். அப்போது இறைச்சி துண்டு ஒன்று அவரது தொண்டையில் சிக்கிக் கொண்டதை அடுத்து அதை எடுக்க அருகில் இருந்த டூத் பிரஷ் கருவியை பயன்படுத்தியுள்ளார்.இருப்பினும், துரதிஷ்டவசமாக ஹீசியா […]

இலங்கை

இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டு!

  • December 10, 2023
  • 0 Comments

கடந்த பாராளுமுன்ற தேர்தலின்போது 30வருட அபிவிருத்தி திட்ட முன்மொழிவினை கொண்டுவந்த பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனால் ஒரு செங்கல்லை கூட களுவாஞ்சிகுடி பகுதியில் நடமாடமுடியாத நிலையில் தாங்கள் முன்னெடுக்கும் அபிவிருத்தி திட்டங்களை குழப்ப முனைவதாக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் களுவாஞ்சிகுடி பிரதேச அமைப்பாளர் யோகநாதன் லிபியன் தெரிவித்தார். மட்டு.ஊடக அமையத்தில் இன்று (10.12)  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார். அண்மையில் களுவாஞ்சிகுடி பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட வீதி புனரமைப்பு பணியின்போது முன்னாள் பிரதேசசபை உறுப்பினரும் சாணக்கியனின் […]

இலங்கை

இலங்கை தபால் ஊழியர்களின் விசேட அறிவிப்பு!

  • December 10, 2023
  • 0 Comments

ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணி இன்று (10.12) மாலை 04.00 மணி முதல் 48 மணித்தியால பணிப்பகிஷ்கரிப்பை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது. 27,000க்கும் மேற்பட்ட தபால் ஊழியர்கள் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக அதன் இணை அழைப்பாளர்  சிந்தக பண்டார குறிப்பிட்டுள்ளார்.