உலகம்

இஸ்ரேல் -ஹமாஸ் போரை முடிவுக்கு கொண்டு வரும் ஐ.நாவின் தீர்மானம் ; நிராகரித்த அமெரிக்கா

  • December 9, 2023
  • 0 Comments

இஸ்ரேல்-ஹமாஸ் போரை முடிவுக்கு கொண்டு வர ஐ.நா. கொண்டு வந்த தீர்மானத்தை அமெரிக்கா நிராகரித்தது. ஐ.நா. கொண்டு வந்த தீர்மானத்தை தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி அமெரிக்கா நிராகரித்தது. தீர்மானத்திற்கு ஆதரவாக 13 நாடுகள் வாக்களித்த நிலையில் வாக்கெடுப்பில் இங்கிலாந்து பங்கேற்கவில்லை. பாலஸ்தீனம் காசாவில் உள்ள ஹமாஸ் இயக்கத்திற்கும் இஸ்ரேல் படையினருக்கும் இடையே போரால் இஸ்ரேல் தீவிர தாக்குதலை முன்னெடுத்து வருகிறது. 2 மாதமாக நடைபெற்று வரும் இந்த போர் காரணமாக காசாவில் மக்கள் கடும் அவதிக்கு […]

இந்தியா

மின் நிலுவையை வசூலிக்க சென்ற அதிகாரிகளை நாய்களை ஏவி விட்டு கடிக்க செய்த குடும்பம் !

  • December 9, 2023
  • 0 Comments

3.5 லட்ச ரூபாய்க்கு மேல் நிலுவையில் உள்ள தொகையை வசூல் செய்ய சென்ற மின்துறை அதிகாரிகளை ஒரு குடும்பத்தினர் இரும்புக் கம்பியால் தாக்கியதுடன் நாய்களை அவிழ்த்து விட்டு கடிக்க விட்டு துப்பாக்கியைக் காட்டி விரட்டிய சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேசம், புலந்த்சாகரில் உள்ள கியான் லோக் காலனியைச் சேர்ந்தவர் ராஜேந்திர சவுத்ரி. இவரது மனைவி கவிதா. இவர்களது மகன் விஷால். இவர்கள் 3.5 லட்ச ரூபாய்க்கு மேல் மின் கட்டணம் கட்டாமல் பாக்கி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.இதையடுத்து […]

இலங்கை

புதுக்குடியிருப்பில் சிறப்பாக இடம்பெற்ற மாற்றுத்திறனாளிகள் தின நிகழ்வு

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு ஆற்றல் கொண்டு மாற்றம் காண்போம் எனும் தொனிப்பொருளில் மாற்றுத்திறனாளிகள் தின நிகழ்வு இன்று (09) புதுக்குடியிருப்பில் சிறப்பாக இடம்பெற்றிருந்தது. புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் இயங்குகின்ற மாற்றுத்திறனாளிகள் அமைப்புக்கள் பல ஒன்றிணைந்து மாற்றுத்திறனாளிகளை கௌரவிக்கும்வகையில் குறித்த நிகழ்வு இன்று (09.12.2023) காலை 10 மணியளவில் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி பொன்விழா மண்டபத்தில் இடம்பெற்றிருந்தது. புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தின் சமூக சேவைகள் உத்தியோகத்தர் ச.சதாகரன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் விருந்தினர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் புதுக்குடியிருப்பு […]

வட அமெரிக்கா

நெவாடா பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தம்!

  • December 9, 2023
  • 0 Comments

லாஸ் வேகாஸில் உள்ள நெவாடா பல்கலைக்கழகத்தில் அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் மூவர் உயிரிழந்த நிலையில், அந்த பல்கலைக்கழகத்தின் செயற்பாடுகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இதன்படி குறித்த பல்கலைக்கழகத்தின் இறுதி தேர்வுகள் அடுத்த வாரம் நடைபெற இருந்த நிலையில் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. “பல்கலைக்கழக சமூகம் அனுபவித்த உடல் மற்றும் உணர்ச்சிகரமான அதிர்ச்சி மற்றும் வளாக வசதிகளின் தாக்கம் காரணமாக, காலண்டர் ஆண்டின் இறுதியில் ஆசிரியர்களும் ஊழியர்களும் தொலைதூரத்தில் பணிபுரிய வேண்டும் என்று நாங்கள் முடிவு செய்துள்ளோம்” என்று ஜனாதிபதி […]

இலங்கை

தேசிய தலைவரை பல தடவை சந்திக்க முயன்ற மல்வத்து பீட மகாநாயக்க தேரர் – உலக தமிழர் பேரவையின் தலைவர் சுரேந்திரன்

  • December 9, 2023
  • 0 Comments

யுத்த காலத்தில் மல்வத்து பீட மகாநாயக்க தேரர் ஆறு தடவைக்கு மேலாக தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனை சந்திக்க இலங்கை அரசாங்கம் ஊடாக முயன்றதாகவும் ஆனால் அந்த விடயம் கைகூடவில்லை என தெரிவித்ததாக உலக தமிழர் பேரவையின் தலைவர் சுரேந்திரன் யாழ்ப்பாணத்தில் தெரிவித்தார்.ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது இதனை தெரிவித்தார். இலங்கைக்கு வருகை தந்து பல்வேறுபட்ட தரப்பினரையும் சந்தித்து கலந்துரையாடியிருந்தோம் அதேபோல சர்வமத தலைவர்களையும் சந்தித்து கலந்துரையாடி இருந்தோம்.அவர்களை சந்தித்து ஒரு அரசியல் தீர்வு அதாவது […]

ஆசியா

வடகொரியாவிற்கு எதிராக கூட்டிணைந்த மூன்று நாடுகள் : உலக நாடுகளுக்கும் அழைப்பு!

  • December 9, 2023
  • 0 Comments

அமெரிக்கா, தென் கொரியா மற்றும் ஜப்பானின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் சனிக்கிழமையன்று வட கொரியாவின் அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகளின் வளர்ச்சியை நசுக்குவதற்கு வலுவான சர்வதேச உந்துதலையும், ஒப்புதலையும் கோரியுள்ளனர். வடகொரியா- ரஷ்யாவிற்கு ஆயுதங்கள் பரிமாற்றம் செய்ததாகக் கூறப்படும் கவலைகளுக்கு மத்தியில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன் அணுசக்தி மற்றும் ஏவுகணைத் திட்டத்தை விரிவுபடுத்துவதை முடுக்கிவிட்டு, அணு ஆயுதங்களை முன்கூட்டியே பயன்படுத்துவதற்கு அங்கீகாரம் அளிக்கும் அணுசக்திக் கோட்பாட்டைப் பறைசாற்றியதன் மூலம், […]

உலகம்

டெக்சாஸில் கருகலைப்பு செய்ய உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த பெண்!

  • December 9, 2023
  • 0 Comments

டெக்சாஸின் உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை பிற்பகுதியில் ஒரு பெண்ணின் அவசர கருக்கலைப்பை தற்காலிகமாக தடைசெய்துள்ளது. குறித்த பெண்ணின் கரு சாத்தியமானதாக இல்லை என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது  மருத்துவர்கள் மற்றும் நோயாளிகள் இருவரும் எதிர்கொள்ளும் சட்டரீதியான ஆபத்துகளை அடிக்கோடிட்டுக் காட்டியது. 31 வயதான இரண்டு பிள்ளைகளின் தாயான கேட் காக்ஸ், உயிருக்கு ஆபத்தானநிலையில் தற்போது உள்ள கருவை கலைக்கலாம் என மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்நிலையில் மாவட்ட நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து அவருடைய கர்ப்பத்தை கலைப்பதை தடுக்கும் வகையில் […]

இலங்கை

யாழில் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை!

  • December 9, 2023
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் வாள் மற்றும் நீளமான கத்திகளை தயாரிக்கும் இடங்களை தேடும் விசேட சுற்றிவளைப்புகள் தீவிரமாக நடத்தப்படும் என யாழ்ப்பாண பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜகத் விஷாந்த தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலத்தில் இடம்பெற்றுவரும் வாள்வெட்டு சம்பவங்கள் தொடர்பில் கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார். இதேவேளை யாழ்ப்பாண மாவட்டத்தில் கூலிக்கு வன்முறையில் ஈடுபடும் கும்பல்களுக்கு இடமளிக்க முடியாது என யாழ்ப்பாண மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் மஞ்சுள செனரத் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

பொழுதுபோக்கு

பவர் ஸ்டாருக்கு பிடிவாரண்ட்.. அப்படி என்ன பண்ணிட்டார்?

  • December 9, 2023
  • 0 Comments

அக்குபஞ்சர் வைத்தியரான சீனிவாசன் சினிமாவில் நடிகராக அறிமுகமானார். பல படங்களில் காமெடியனாக நடித்தார். சொந்தமாக படம் எடுத்து அதில் ஹீரோவாக நடித்தார். பல்வேறு மோசடி வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்று வந்தார். இந்த நிலையில் மீண்டும் ஒரு மோசடி வழக்கில் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் தேவிபட்டினத்தை சேர்ந்த முனியசாமி என்பவர் இறால் பண்ணை வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு15 கோடி கடன் வாங்கித் தருவதாகவும் அதற்கான ஆவண செலவுக்காக 14 லட்சம் தர வேண்டும் […]

இந்தியா

பாஸ்போர்ட் விசாரணைக்காக வந்த பெண்ணின் தலையில் துப்பாக்கியால் சுட்ட சப்-இன்ஸ்பெக்டர்!(வீடியோ)

  • December 9, 2023
  • 0 Comments

உத்தரபிரதேசம் மாநிலத்தில் காவல்நிலையத்தில் காத்திருந்த பெண் மீது பொலிஸ் அதிகாரி ஒருவர் ’தற்செயலாக’ சுட்டதில், கவலைக்கிடமான நிலையில் அப்பெண் சிகிச்சை பெற்று வருகிறார். உத்தரபிரதேச மாநிலம் அலிகார் அருகே இந்த சம்பவம் நடந்திருக்கிறது. கோட்வாலி காவல் நிலையத்தில் கைப்பற்றப்பட்ட CCTV காட்சிகள் பொதுவெளியில் வெளியாகி காண்போரை பதறச் செய்துள்ளன. தற்செயலாக நடந்த சம்பவம் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டாலும், அப்பாவி பெண் மீது காவல்துறை அதிகாரி அலட்சியமாக துப்பாக்கியை பிரயேகித்து இருப்பதாக பொதுமக்கள் குமுறி வருகின்றனர். மேற்படி […]