மத்திய கிழக்கு

தீவிரமடையும் இஸ்ரேல் போர்; பிறந்த 17 நாட்களில் பலியான பெண் குழந்தை!

  • December 20, 2023
  • 0 Comments

காசா மீதான இஸ்ரேல் தாக்குதலில் பிறந்து 17 நாளேயான பெண் குழந்தை ஒன்று, தனக்கான பெயரைச் சூடுவதற்கு முன்னரே போருக்கு பலியாகி இருக்கிறது. இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய ஹமாஸ் போராளிகளை வேட்டையாடும் பெயரில், அப்பாவி பாலஸ்தீனியர்கள் கொன்று குவிக்கப்பட்டு வருகின்றனர்.ஹமாஸ் அமைப்பினர் மறைந்திருப்பதாக கூறி, அகதிகள் முகாம், மருத்துவமனைகள் மற்றும் பள்ளிக்கூடங்களை எல்லாம் இஸ்ரேல் தகர்த்து வருகிறது. மின்சாரம், குடிநீர் சேவைகள் துண்டிக்கப்பட்டு உயிர் தப்பிய காசா மக்களும் நடை பிணமாக வாழ்ந்து வருகிறார்கள். அவர்களின் […]

ஐரோப்பா

கூகுள் நிறுவனத்திற்கு 421 கோடி ரூபாய் அபராதம் விதித்த ரஷ்ய நீதிமன்றம்!

  • December 20, 2023
  • 0 Comments

உக்ரைன் உள்ளிட்ட அரசியல் விவகாரங்களில் தவறான தகவல்களை நீக்காமல் வைத்திருந்ததாக கூகுள் நிறுவனத்திற்கு 421 கோடி ரூபாய் அபராதம் விதித்து ரஷ்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உக்ரைன் மீது கடந்த ஓராண்டுக்கும் மேலாக போர் தொடுத்து வரும் ரஷ்யா, இதற்கு சிறப்பு ராணுவ நடவடிக்கை என பெயரிட்டுள்ளது. ரஷ்யாவின் உக்ரைன் படையெடுப்புக்கு நேட்டோ நாடுகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. உக்ரைனுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் தொடர்ந்து பொருள் உதவியும், ராணுவ உதவியும் செய்து […]

இலங்கை

யாழ். துன்னாலை பிரதேசத்தில் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைது

  • December 20, 2023
  • 0 Comments

யாழ்ப்பாணம் வடமராட்சி துன்னாலை மேற்கு பகுதியில் பெண்ணொருவர் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டார். 37 வயதான குறித்த பெண் நெல்லியடிப் பொலிஸாரால் இன்றையதினம் (20) கைதுசெய்யப்பட்டார். 720 மில்லி கிராம் அளவுள்ள ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளதுடன் 23,000 ரூபா பணமும் சந்தேக நபரிடம் இருந்து கைப்பற்றப்பட்டது. குறித்த பணம் போதைப்பொருள் விற்பனை மூலம் கிடைத்திருக்கலாமென பொலிஸார் சந்தேகம் வெளியிட்டனர். சந்தேகநபரை பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதேவேளை நேற்றைய தினமும் துன்னாலை கிழக்கு பகுதியில் 51 […]

இலங்கை

இலங்கைக்கு கிடைக்கவுள்ள பாரிய நிதி உதவி!

  • December 20, 2023
  • 0 Comments

2023 டிசம்பரில், இலங்கை சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது தவணை,  மற்றும் உலக வங்கியிடமிருந்து நிதியுதவியைப் பெற்றுள்ளது என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறுகிறது. இதன்படி இரண்டாம் தவணையாக 337 மில்லியன் அமெரிக்க டொலர்கள் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்தும் 200 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்தும் 250 மில்லியன் அமெரிக்க டொலர்கள்  பெறப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 787 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியானது வரவு செலவுத் திட்டத்தை வலுப்படுத்துவதையும் நாட்டின் […]

பொழுதுபோக்கு

‘அயலான்’ படத்தில் இருந்து வெளியானது அயலா அயலா பாடல்…

  • December 20, 2023
  • 0 Comments

இயக்குனர் ரவி குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘அயலான்’ திரைப்படம் பல வருடங்களாக போஸ்ட் புரோடக்ஷன் பணிகளில் இருக்கும் நிலையில், இப்படம் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்படத்தின் ரிலீசுக்கு தாமதம், இபபடத்தில் இடம்பெற்றுள்ள VFX காட்சிகளை தத்ரூபமாக வடிவமைக்க நேரம் எடுத்து கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. இப்படம் வெளியாக இன்னும் ஒரு சில வாரங்களே உள்ள நிலையில்… தற்போது இபபடத்தில் இருந்து ‘அயலா அயலா’ என்கிற லிரிக்கல் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த […]

பொழுதுபோக்கு

கேத்தரினா கைஃப் – விஜய் சேதுபதி நடிப்பில் ‘மெரி கிறிஸ்துமஸ்’ டிரைலர் வெளியானது…

  • December 20, 2023
  • 0 Comments

கேத்தரினா கைஃப் மற்றும் விஜய் சேதுபதி பிரதான வேடங்களில் நடித்திருக்கும் ‘மெரி கிறிஸ்துமஸ்’ திரைப்படம் ஹிந்தி மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் தயாராகி இருக்கிறது. ரமேஷ், துரானி, சஞ்சய் ரவ்ட்ராய், ஜெயா துரானி, மற்றும் கேவல் கார்க் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் இப்படத்தை ஸ்ரீராம் ராகவன் இயக்கி இருக்கிறார். விநாயகர் பிரதிமா கண்ணன் மற்றும் டினு ஆனந்த் (நாயகன் புகழ்) ஆகியோர் இந்திப் பதிப்பில் நடித்து சிறப்பு சேர்த்திருக்கிறார்கள். இதேபோல் தமிழ்ப் பதிப்பில் ராதிகா சரத்குமார், சண்முகராஜா, […]

இலங்கை

ஜெரோம் பெர்னாண்டோவின் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

ஜெரோம் பெர்னாண்டோவின் சட்டத்தரணிகள் தாக்கல் செய்த பிணை மனு மீதான விசாரணையை 2024 ஆம் ஆண்டு ஜனவரி 4 ஆம் திகதிக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று ஒத்திவைத்தது. பௌத்தம் மற்றும் ஏனைய மதங்கள் தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டமை தொடர்பில் போதகர் ஜெரோம் பெர்னாண்டோ அண்மையில் நாடு திரும்பிய போது குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார். இந்த பிணை மனு உயர்நீதிமன்ற நீதிபதி ஆதித்யா படபெந்தி முன் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, […]

ஆசியா

தாய்லாந்தில் துப்பாக்கி உரிமம் வழங்குவது நிறுத்திவைக்கப்பட்டுள்ளது!

  • December 20, 2023
  • 0 Comments

தாய்லாந்தில் புதிய துப்பாக்கி உரிமம் வழங்குவதை ஓராண்டுக்கு நிறுத்திவிட்டதாக உள்துறை அமைச்சகம் இன்று (20.12) அறிவித்தது. இந்த மாற்றம் உடனடியாக அமலுக்கு வருவதாகவும், கொடிய துப்பாக்கி சம்பவங்களைத் தொடர்ந்து துப்பாக்கி கட்டுப்பாடு குறித்து இராஜ்யத்தில் விவாதம் நடைபெற்று வருவதாகவும் அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. அக்டோபரில் பாங்காக் ஷாப்பிங் மாலில் 14 வயது சிறுவன் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மூவர் உயிரிழந்துள்ளனர். அதேபோல் ஓராண்டுக்கு முன் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், 36 பேரை சுட்டுக் கொன்றார். இவ்வாறான சம்பவங்களைத் தொடர்ந்து துப்பாக்கி […]

ஐரோப்பா

போரிஸ்பில் சர்வதேச விமான நிலையம் மீண்டும் திறப்பு: பொருளாதாரத்திற்கு வெற்றியைக் குறிக்கும்- ஜெலென்ஸ்கி

போர்க் காரணங்களுக்காக மூடப்பட்ட போரிஸ்பில் சர்வதேச விமான நிலையத்தை மீண்டும் திறப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து உக்ரைன் அதிகாரிகள் ஆலோசித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுளள்து. உக்ரேனிய விமான நிறுவனமான ஸ்கைலைன் எக்ஸ்பிரஸின் வேண்டுகோளின்படி, போயிங் 777-300 விமானத்தின் தொழில்நுட்ப பரிமாற்றம் கிய்வ்-போரிஸ்பில் விமான நிலையத்திலிருந்து ஐரோப்பாவில் உள்ள ஒரு விமான நிலையத்திற்கு செய்யப்பட்டது” என்று விமான நிலையம் தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளது. விமான நிலையத்தை மீண்டும் திறப்பது உக்ரைனுக்கு, குறிப்பாக அதன் பொருளாதாரத்திற்கு வெற்றியைக் குறிக்கும் என்று ஜெலென்ஸ்கி […]

தென் அமெரிக்கா

தெற்கு பெருவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

  • December 20, 2023
  • 0 Comments

தெற்கு பெருவில் இன்று (20.12) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது. குறித்த நிலநடுக்கமானது 06 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக   புவி அறிவியல்களுக்கான ஜெர்மன் ஆராய்ச்சி மையம் (GFZ) தெரிவித்துள்ளது. நிலநடுக்கம் 80 கிமீ (50 மைல்) ஆழத்தில் இருந்ததாக GFZ தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேத விபரங்களை அதிகாரிகள் மதிப்பிட்டு வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.