மத்திய கிழக்கு

நிவாரணப் பொருட்களைப் பெற முண்டியடித்த ஆயிரக்கணக்கான பாலஸ்தீன மக்கள்

  • May 28, 2025
  • 0 Comments

ரபாவில் நிவாரணப் பொருட்களைப் பெற ஆயிரக்கணக்கான பாலஸ்தீன மக்கள் முண்டி அடித்துச் சென்றனர். இஸ்ரேல் ராணுவத்தின் முழுக் கட்டுப்பாட்டில் உள்ள ரபாவில் நிவாரணப் பொருட்களை வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நிவாரணப் பெட்டிகளைப் பெற்றவர்கள், அதில் இருந்த மாவு, எண்ணெய், தக்காளி சாஸ் உள்ளிட்ட பொருள்களைச் சரிபார்க்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன. காசா மனிதாபிமான அறக்கட்டளை சார்பில் சுமார் 8 ஆயிரம் நிவாரணப் பெட்டிகள் வழங்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. காசா பகுதிக்கு நிவாரணப் பொருள்கள் செல்வதற்கு இஸ்ரேல் தடை விதித்திருந்தது. […]

இலங்கை

இலங்கையில் நாளுக்கு நாள் குறைந்து வரும் தங்க விலை!

  • May 28, 2025
  • 0 Comments

இலங்கையில் நாளுக்கு நாள் தங்க விலை குறைந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கமைய, கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 263,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 241,500 ரூபாவாகவும், 18 கரட் தங்கம் பவுண் ஒன்று 197,500 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படுகிறது. இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 32,875 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு […]

ஐரோப்பா

வெனிசுவேலாவிலிருந்து எண்ணெய் ஏற்றுமதிக்கு தடை – அதிரடியாக உயர்ந்தது எண்ணெய் விலை

  • May 28, 2025
  • 0 Comments

அமெரிக்காவின் Chevron நிறுவனம் வெனிசுவேலாவிலிருந்து கச்சா எண்ணெயை ஏற்றுமதி செய்யத் தடை விதிக்கப்பட்டதை அடுத்து எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. Brent ரகக் கச்சா எண்ணெயின் விலை பீப்பாய்க்கு 47 காசு உயர்ந்துள்ளது. இப்போது ஒரு பீப்பாயின் விலை 64.56 டொலராகும். அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் டிரம்ப்பின் நிர்வாகம் Chevron நிறுவனத்திற்குப் புதிய அதிகாரத்தைக் கொடுத்துள்ளது. நிறுவனம் தன்னுடைய சொத்துக்களை வெனிசுவேலாவில் வைத்துக்கொள்ளலாம். ஆனால் எண்ணெயை ஏற்றுமதி செய்வதற்கோ நடவடிக்கைகளை விரிவாக்கம் செய்வதற்கோ அனுமதி இல்லை. எனவே இப்போது […]

ஐரோப்பா

சுவிஸில் பரவும் கோவிட்டின் புதிய திரிபு – சுகாதார பிரிவினர் எச்சரிக்கை

  • May 28, 2025
  • 0 Comments

சுவிட்ஸர்லாந்தில் கோவிட்-19 வைரஸின் புதிய திரிபான LP.8.1 பரவத் தொடங்கியுள்ளது. கடந்த இலையுதிர்காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த திரிபு, இந்த ஆண்டின் தொடக்கத்தில் வேகமாகப் பரவத் தொடங்கியது. ஜனவரியில்,LP.8.1 ஐ கண்காணிக்க வேண்டிய திரிபு என, உலக சுகாதார நிறுவனம் தெரிவித்திருந்தது. இப்போது இது ஐரோப்பாவிலும் அதிகரித்து வருகிறது. அமெரிக்காவில், இந்த திரிபு இப்போது 55 சதவீத தொற்றுகளுக்கு காரணமாக உள்ளது. பிரித்தானியாவில் LP.8.1 குறைந்தது 60 சதவீத தொற்றுகளுக்கு காரணமாகிறது. இந்த திரிபு சுவிஸ் கழிவுநீரிலும் கண்டறியப்பட்டுள்ளதாக, […]

வாழ்வியல்

கால் வலியை குணமாக்கும் வைத்தியத்தியம்!

  • May 28, 2025
  • 0 Comments

நீண்ட நேரம் நின்று கொண்டே வேலை செய்வது, அதிக தூரம் நடப்பது, உடல் பருமன் அதிகரிப்பு, எலும்பு மூட்டு காயங்கள், தசை நார்களில் எரிச்சல், சுருள் நரம்பு, ரத்தம் உறைதல் ,வைட்டமின் பி6, பி 9 குறைபாடு, கிட்னி பாதிப்பு ,தைராய்டு, பெண்களுக்கு ஏற்படும் மெனோபாஸ் காலகட்டம், கால் பாதம் வளைவாக இல்லாமல் பிளாட்டாக இருப்பது மற்றும் அதிக அளவு ரத்த ஓட்டம் போன்ற பல்வேறு காரணங்களால் ஒருவருக்கு கால் வலி வரக்கூடும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். […]

வட அமெரிக்கா

இலங்கை மீது விதிக்கப்பட்ட தீர்வை வரி – வொஷிங்டனில் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை

  • May 28, 2025
  • 0 Comments

இலங்கை மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை இன்று வொஷிங்டனில் ஆரம்பமாகவுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பினால் இலங்கை மீது விதிக்கப்பட்ட தீர்வை வரி தொடர்பாக இந்த பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த பேச்சுவார்த்தைக்காக இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி, நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் ஹர்ஷன சூரியபெரும தலைமையிலான குழு அமெரிக்கா சென்றுள்ளது. ஐக்கிய அமெரிக்காவின் வர்த்தக பிரதிநிதிகள் குழு விடுத்த அழைப்பின் அடிப்படையில் இந்த பேச்சுவார்த்தைகள் இடம்பெறவுள்ளன. இருநாட்டுப் பிரதிநிதிகளும், இலங்கை மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான […]

ஐரோப்பா

லிவர்ப்பூல் வெற்றிப் பேரணி மீது மோதிய கார் – பொலிஸார் வெளியிட்ட தகவல்

  • May 28, 2025
  • 0 Comments

லிவர்ப்பூல் வெற்றிப் பேரணி மீது கார் மோதிய சம்பவத்தின் தொடர்பில் கைது செய்யப்பட்ட 53 வயது நபர் தொடர்பில் பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர். கொலை முயற்சி, ஆபத்தான முறையில் காரை ஓட்டியது, போதைப்பொருள் உட்கொண்ட பிறகு காரை ஓட்டியது ஆகிய சந்தேகத்தின் கீழ் அவர் கைதுசெய்யப்பட்டார். அச்சம்பவத்தில் 50க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர். பிரித்தானிய பொலிஸார் அந்த விவரங்களை வழங்கியது. 11 பேர் மருத்துமனையில் இருப்பதாகவும் அவர்களுடைய நிலை சீராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. சம்பவம் பயங்கரவாதச் செயல் இல்லை […]

ஆஸ்திரேலியா

இந்தியா தொடர்பான கருத்தினால் சர்ச்சையில் சிக்கிய நியூசிலாந்து அமைச்சர்

  • May 28, 2025
  • 0 Comments

நியூசிலாந்து அமைச்சர் தனது கருத்து தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டார். நியூசிலாந்து உள்துறை அமைச்சர் Erika Stanford இந்தியர்கள் குறித்து கருத்து தெரிவித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. “இந்தியர்களின் மின்னஞ்சல்களுக்கு ஒருபோதும் பதிலளிக்க வேண்டாம்” என்று அவர் சமீபத்திய நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் கூறினார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தொழிலாளர் கட்சி எம்.பி. Priyanca Radhakrishnan இந்தக் கருத்துகளை கடுமையாகக் கண்டித்துள்ளார். இந்தக் கருத்துக்கள் உணர்ச்சியற்றவை மற்றும் பாரபட்சமானவை என்று அவர் கூறுகிறார். The Indian Weekenderக்கு அளித்த பேட்டியில், இதுபோன்ற […]

விளையாட்டு

அதிக தொகைக்கு எடுக்கப்பட்டு மோசமாக விளையாடிய 7 வீரர்கள்

  • May 28, 2025
  • 0 Comments

நடப்பாண்டு ஐபிஎல் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், பல வீரர்கள் இதுவரை சிறப்பாக விளையாடி நாம் பார்த்திருந்தோம். அதைப்போலவே ஒரு சில வீரர்கள் அதிகமான தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டும் அவர்களால் சிறப்பாக விளையாட முடியாமல் போனது. எனவே, அந்த வீரர்களை எடுத்த அணி நிர்வாகங்கள் அடுத்த சீசன் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளில் விடுவிக்க முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அப்படி இந்த சீசன் சரியாக விளையாடாத அதிக தொகைக்கு எடுக்கப்பட்ட ஒரு 7 வீரர்களை அந்தந்த […]

இலங்கை

இலங்கையின் பல பகுதிகளில் 75 மில்லிமீற்றருக்கும் அதிக மழை!

  • May 28, 2025
  • 0 Comments

நாட்டின் பல பகுதிகளில் எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் பலத்த மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, மேல் , சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மாவட்டங்களிலும் தற்போதுள்ள மழைவீழ்ச்சி அதிகரிக்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும், நுவரெலியா, கண்டி, காலி, மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சப்ரகமுவ […]