பொழுதுபோக்கு

அவ்வளோ பெரிய நடிகர் மகனுக்காக என்ன செய்றார் பாருங்க..

நடிகர் அஜித்குமார் தனது மகன் ஆத்விக் மற்றும் அவரது நண்பர்களுடன் கால்பந்து விளையாடிய போது எடுத்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

நடிகர் அஜித் தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷாவும், வில்லனாக பிக்பாஸ் ஆரவ்வும் நடிக்கின்றனர்.

மேலும் ஆக்‌ஷன் கிங் அர்ஜுனும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். விடாமுயற்சி திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க, அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது.

விடாமுயற்சி படத்தின் எஞ்சியுள்ள படப்பிடிப்பை வேறு லொகேஷனில் நடத்த முடிவெடுத்த படக்குழு,    பின்னர் சென்னைக்கு திரும்பியது.

சென்னை திரும்பியதும் நடிகர் அஜித் தன்னுடைய மகனுடன் ஃபுட்பால் விளையாடி மகிழ்ந்துள்ளார். அஜித்தின் மகன் ஆத்விக் சென்னையின் எஃப் சி அணியின் ஜூனியர் பிரிவில் விளையாடி வருகிறார்.

அந்த அணிக்காக விளையாடி தங்க பதக்கமெல்லாம் வென்றுள்ளார் ஆத்விக். அவர் மெடல் வாங்கியபோது அஜித் வெளிநாட்டில் இருந்தார். இதனால் ஷாலினி மட்டும் வந்து மகனை உற்சாகப்படுத்தினார். தற்போது சென்னை திரும்பியதும் மகனுடன் கால்பந்து விளையாடி அவரை மகிழ்வித்துள்ளார் அஜித்.

கால்பந்தை பார்த்ததும் குழந்தையாகவே மாறி அஜித் விளையாடியதை அவரது மகன் ஆத்விக் மற்றும் அவரது நண்பர்கள் உற்சாகத்துடன் பார்த்து மகிழ்ந்தனர். நடிகர் அஜித் ஃபுட்பால் விளையாடியபோது எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. விடாமுயற்சி படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு விரைவில் சென்னையில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

(Visited 7 times, 1 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content