Tamil News

விஜய் சேதுபதியிடம் எனக்கு பிடித்தது இதுதான்… நடிகை அபிராமி பளிச்

தமிழ் சினிமா உலகத்தில் பல தடைகளை தாண்டி உருவான ஒரு நடிகர் தான் விஜய்சேதுபதி.

மக்கள் செல்வன் என்ற மிக பொருத்தமான பட்டத்துடன் தமிழ் திரை உலகில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இவர் பயணித்து வருகிறார். ஆரம்பத்தில் இருந்து பல படங்களில் நடித்திருந்தாலும், புதுப்பேட்டை படத்தில் தனுசுடன் இவர் நடித்த சிறிய கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்பட்டது.

அதன் பிறகு வெண்ணிலா கபடி குழு, நான் மகான் அல்ல, பலே பாண்டியா போன்ற படங்களில் நடித்த இவருக்கு, கிடைத்த ஒரு பிரேக் தான் தென்மேற்கு பருவக்காற்று.

அந்த படத்தின் மூலமாகத்தான் இவர் தமிழ் திரையுலகில் நாயகனாக அறிமுகமானார், அதன் பிறகு வெளியான பீட்சா என்ற திரைப்படமும் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் என்கின்ற திரைப்படமும், விஜய் சேதுபதி தனக்கு கொடுக்கப்படும் எந்தவிதமான கதாபாத்திரத்தையும் மிக நேர்த்தியாக நடித்து முடிப்பர் என்ற நம்பிக்கையை கொடுத்தது.

மிகக் குறுகிய காலகட்டத்தில் பல வெற்றி திரைப்படங்களை கொடுத்த வெகு சில நடிகர்களில் இவரும் ஒருவர். தற்பொழுது இவருடைய ஐம்பதாவது திரைப்படம் இயக்குனர் நிதிலன் சுவாமிநாதன் என்பவருடைய இயக்கத்தில் உருவாகியுள்ளது.

நேற்று இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான நிலையில், இந்த நிகழ்வில் கலந்து கொண்ட நடிகை அபிராமி விஜய் சேதுபதி அவர்கள் குறித்து சில தகவல்களை பகிர்ந்துள்ளார்.

“விஜய சேதுபதி அண்ணா இந்த படத்தில் உங்களோடு நடித்தது ரொம்பவும் மகிழ்ச்சி, நான் பார்த்து ப்ரம்மித்துபோன கண்களை கொண்டவர் கமல்ஹாசன் சார், அதற்கு பிறகு அப்படி ஒரு அழகிய கண்ணை நான் உங்களிடம் கண்டேன். நீங்கள் படம் தேர்வும் செய்யும் முறை எனக்கு பிடித்திருக்கிறது” என்று கூறி தன் அன்பை வெளிப்படுத்தினர் அவர்.

 

Exit mobile version