பொழுதுபோக்கு

நாசரின் வீட்டில் சோகம்… அதிர்ச்சியில் திரையுலகம்

பிரபல நடிகரும் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவருமான நாசரின் தந்தை மெஹபூப் பாட்ஷா வயது மூப்புக் காரணமாக காலமானார். அவருக்கு வயது 95.

இந்திய சினிமாவிலேயே இப்படியொரு நடிகர் இருப்பாரா என மக்கள் மட்டுமின்றி திரையுலக பிரபலங்களே வியந்து பார்க்கும் அளவுக்கு நாசரை நடிகனாக்கி அழகு பார்த்த அவரது தந்தை மெஹபூபா இயற்கை எய்தினார்.

அவரது மறைவால் நாசரின் குடும்பம் கண்ணீர் கடலில் ஆழ்ந்துள்ளது.

நகை பாலிஷ் செய்யும் சாதாரண தொழிலாளியாக வேலை பார்த்து வந்த மெஹபூபா பாட்ஷா தனது மகன் நாசரின் விருப்பத்திற்கு ஏற்ப அவரை நடிப்புக் கல்லூரியில் படிக்க வைத்து நடிகராக பார்க்க விரும்பினார்.

ஆனால், சினிமாவில் சாமானியர்கள் சாதிக்க முடியாத நிலை, அப்போதும் நாசரை துரத்தியது. படித்து விட்டு வேலை கிடைக்கவில்லை என சென்னையில் ஒரு பிரபல ஹோட்டலில் சர்வராக நாசர் வேலை பார்க்க, இதுக்கா சினிமாவுக்கு படிச்ச, போய் சினிமாவில் சாதிக்கிற வழியை பாரு என ஊக்கப்படுத்தி அனுப்பியவர் தான் நாசரின் தந்தை.

95 வயதான நாசரின் தந்தை வயது மூப்புக் காரணமாக இன்று இயற்கை எய்தியுள்ளார். செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தட்டான்மலையில் உள்ள சொந்த வீட்டில் அவரது உடல் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. நடிகர் நாசரின் நெருங்கிய சினிமா நண்பர்கள் மற்றும் உறவினர்கள் இறுதி அஞ்சலியில் பங்கேற்று நாசருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

(Visited 4 times, 1 visits today)

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content