Tamil News

போதையில் தகராறு? ஜெயிலர் பட வில்லன் விநாயகனை கைது செய்த பொலிஸார்

ஜெயிலர் திரைப்படத்தின் மூலம் பிரபலமான நடிகர் விநாயகன், ஏற்கனவே தமிழில் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

மலையாள மொழியில் சிறந்த வில்லனாகவும், குணச்சித்திர நடிகராகவும் திகழ்ந்து வந்த விநாயகன், எர்ணாகுளம் காவல் நிலையத்தில் தற்போது வைக்கப்பட்டுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

குடிபோதையில் அவர் தகராறு செய்ததாகவும், அதனால் அவர் மீது வழக்கு பதிவு செய்து எர்ணாகுளம் காவல் நிலையத்தில் தற்போது வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

இது குறித்து சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ ஒன்றும் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

நடிகர் விநாயகன், தனது குடியிருப்பு பகுதியில் சில பிரச்சினைகளை உருவாக்கியதாகக் கூறி அவரை போலீஸார் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.

அப்போது காவல் நிலையத்திற்கு சென்ற விநாயகன், காவல்நிலையத்தில் பிரச்சனை செய்ததற்காகவும், அதன் பிறகு அவர் கைது செய்யப்பட்டதாக மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதனையடுத்து “மருத்துவ பரிசோதனைக்காக அவர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்,” என்று அதிகாரி மேலும் கூறினார்.

 

Exit mobile version