இலங்கை

வர்த்தகர் தினேஷ் மரணம் குறித்து எழுந்துள்ள புதிய சந்தேகம்

கோடீஸ்வர தொழிலதிபர் தினேஷ் ஷாப்டரின் ஆயுள் காப்பீட்டுத் தொகையை பெறுவதற்காக அல்லது அவரது சொத்தை பெறும் நோக்குடன் அவருக்கு நெருக்கமான ஒருவர் அவரை கொலை செய்தாரா என்ற பல கோணத்தில் விசாரணை அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

தினேஷ் ஷாப்டரின் மரணம் ஒரு குற்றச் செயல் என நீதிமன்றம் தீர்ப்பளித்ததால், கொலையாளிகளை கண்டறிய கொலை மற்றும் கொள்ளை விசாரணைப் பிரிவு விசாரணையைத் ஆரம்பித்துள்ளது.

சிங்கப்பூர் மற்றும் ஐக்கிய இராச்சியத்தில் அவருக்குச் சொந்தமான சொத்துக்கள் தொடர்பிலும் விசாரணை அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொள்ள உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.பல கோடி ரூபாய்க்கான ஆயுள் காப்பீட்டுத் தொகையைப் பெறுவதற்காக, ஷாப்டரின் நெருங்கிய உறவினர் ஒருவர் இந்தக் கொலையைச் செய்தாரா என, விசாரணை அதிகாரிகள் தற்போது சந்தேகிக்கின்றனர்.

கொழும்பு மேலதிக நீதவான் ரஜீந்திர ஜயசூரிய, ஷாப்டருக்கான காப்புறுதி இழப்பீட்டுத் தொகையை ஒரு வார காலத்திற்கு இடைநிறுத்துமாறு காப்புறுதி நிறுவனங்களின் அதிகாரிகளுக்கு அண்மையில் உத்தரவிட்டார்.

ஷாப்டரின் மரணம் குறித்து விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட ஐவர் குழுவின் உறுப்பினர்கள், இது தொடர்பான அறிக்கை குறித்து கொலை மற்றும் கொள்ளை விசாரணைப் பிரிவு அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளனர்.

(Visited 5 times, 1 visits today)
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content