ஜேர்மனியில் குடியிருப்பு கட்டடத்தில் ஏற்பட்ட பாரிய தீ : மூவர் பலி!
மேற்கு ஜேர்மனியில் குடியிருப்பு கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
டுசெல்டார்ஃப் நகரில் உள்ள கட்டிடத்தின் ஒரு பகுதியில் தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் தீயை அணைக்க போராடி வருவதுடன், ஏணிகளைப் பயன்படுத்தி பால்கனியில் இருந்து பலரைக் காப்பாற்றியதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
16 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தீயணைப்பு சேவை தெரிவித்துள்ளது. தீவிபத்துக்கான காரணம் தெரியவில்லை என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
(Visited 10 times, 1 visits today)