ஆசியா

டிக்டாக் நேரலையில் விபரீத விளையாட்டால் பரிதாபமாக பறிபோன உயிர்!

டிக்டாக்கில் பிரபலமான சீனாவை சேர்ந்த நபர், டிக்டாக்கில் விபரீதமான ஒரு சவாலை செய்ய முயன்று, பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

சீனாவை சேர்ந்த வாங் என்பவர் ‘Brother Three Thousand’ என்ற டிக்டாக் பக்கத்தின் மூலமாக பிரபலமானவர் ஆவார். இவர் டிக்டாக்கில் பல விதமான சவால்களை ஏற்று நேரலையில் செய்து காட்டி அனைவரது பாராட்டையும் பெற்று வந்தவர்.இவரது பக்கத்திற்கு டிக்டாக்கில் நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, டிக்டாக் நேரலையில் ஏழு மது பாட்டில்களை தொடர்ந்து குடிப்பதாக பார்வையாளர்களுக்கு சவால் அளித்துள்ளார்.

டிக்டாக் நேரலையில் விபரீதமான விளையாட்டு: பரிதாபமாக பறிபோன உயிர்

இதனை தொடர்ந்து, அந்த போட்டியில் அடுத்து அடுத்து ஏழு மது பாட்டில்களை அவர் குடித்து முடித்துள்ளார். பின்னர் திடீரென அவர் உயிரிழந்து கிடப்பதாக அவரது பெற்றோர் பொலிஸாருக்கு தகவல் அளித்துள்ளனர்.இதனிடையே மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்ட பின்பு அவரது உடல், பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவர் அதிகப்படியான மது அருந்தியதால் தான் உயிரிழந்திருக்கிறார் என்பது உறுதியாகியுள்ளது. இச்சம்பவம் தற்போது சீனாவின் சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

டிக்டாக் நேரலையில் விபரீதமான விளையாட்டு: பரிதாபமாக பறிபோன உயிர்

சீனாவில் பொதுவாக இது போன்ற டிக்டாக் சாவல்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அதனை மீறி செய்பவர்களுக்கு கடுமையான தண்டனை அளிக்கப்படும் என தெரிவித்துள்ளது.அதிக மது அருந்தியதால் உயிரிழந்த வாங் என்ற அந்த நபருடைய ஏற்கனவே ஒரு டிக்டாக் பக்கம் இருந்திருக்கிறது. அதில் அவரை 44000 பேருக்கு மேல் பின் தொடர்ந்துள்ளனர்.அதனை தடை செய்த நிலையில், தற்போது அவர் புதிதாக ஒரு பக்கத்தை உருவாக்கி, அதில் நேரலைகளை செய்து வரும் போது இந்த அசாம்பாவிதம் நடைபெற்றுள்ளது.

(Visited 7 times, 1 visits today)
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்

You cannot copy content of this page

Skip to content