ஐரோப்பா

ஜெர்மனியில் முக்கிய நகரங்கள் பலவற்றில் வாழ்ந்து வருகின்ற மக்களுக்கு 500 யூரோ நிதி உதவி

ஜெர்மனி நாட்டில் சுற்றுப்புற சூழலை கருத்தில் கொண்டு முக்கிய நகரங்கள் பலவற்றில் வாழ்ந்து வருகின்ற மக்களுக்கு 500 யுரோ நிதி உதவி வழங்கப்பட இருக்கின்றது.

ஜெர்மனியி்ன் சில பெரிய நகரங்கள் சுற்றுப்புற சூழலை பாதுகாக்கின்ற நடவடிக்கையில் ஈடுப்படுவதற்காக மக்களுக்கு சில நிதி உதவிகளை மேற்கொள்ளவுள்ளதாக தெரிய வந்து இருக்கின்றது.

குறிப்பாக பெரிய நகரங்களில் மக்கள் உந்துருளியில் செல்வதற்குரிய வசதியை ஏற்படுத்துவதற்காக இவர்களுக்கு ஆக கூடிய தொகையாக 500 யுரோக்களை வழங்குவதற்கு முன் வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

குறிப்பாக போகன் நகரமானது இவ்வாறு உந்துருளியில் நகரங்களில் பயணம் மேற்கொள்வதற்காக 70 ஆயிரம் யுரோக்களை ஒதுக்கீடு செய்துள்ளதாகவும்,

அதாவது இவ்வகையான உதவி பணத்தை பெறுவதற்கு மக்கள் இணையத்தளத்தின் கூடாக விண்ணப்பம் செய்யலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

ஜெர்மனியின் பெரிய நகரங்களில் தற்பொழுது 8 சதவீதமான மக்களே உந்துருளியில் பயணம் மேற்கொள்வதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதனால் இந்த தொகையை 15 சதவீதமாக அதிகரிப்பதற்காக இவ்வகையான நிதி உதவியை வழங்குவதறகு முன்வந்துள்ளது.

அதாவது ஆக கூடியதாக 500 யுரோக்களை வழங்குவது என்றும் ஒரு உந்துருளியானது 1400 யுரோக்களுக்கு வேண்டப்படுமானால் 500 யுரோக்களை நகர நிர்வாகமானது இந்த வேண்டுகின்ற நபருக்கு வழங்கும் என்றும் தெரியவந்துள்ளது.

(Visited 6 times, 1 visits today)
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்

You cannot copy content of this page

Skip to content