ஆஸ்திரேலியா

பாம்புகள் இனச்சேர்க்கையில் ஈடுபடுவதாக எண்ணிய நபர்; பின்னர் கண்ட அதிர்ச்சியளிக்கும் காட்சி!

அவுஸ்திரேலியாவில் கடற்கரைக்குச் சென்றிருந்த ஒருவர், இரண்டு பாம்புகள் ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்துகொண்டிருப்பதைக் கண்டு, அவை இனச்சேர்க்கையில் ஈடுபட்டுள்ளதாக எண்ணியுள்ளார்.

Cody Green என்பவர் மேற்கு அவுஸ்திரேலியாவிலுள்ள Binningup கடற்கரை என்னும் கடற்கரைக்கு காலாற நடப்பதற்காக சென்றுள்ளார்.அப்போது, இரண்டு பாம்புகள் பின்னிப்பிணைந்திருப்பதைக் கண்டுள்ளார் அவர். அவை இனச்சேர்க்கையில் ஈடுபட்டுள்ளதாக எண்ணி, அவற்றை தன் மொபைலில் படம் பிடிக்கத் துவங்கியுள்ளார் அவர். ஆனால், பிறகுதான் அந்த உண்மை அவருக்குப் புரிந்திருக்கிறது.

அவை இனச்சேர்க்கையில் ஈடுபடவில்லை. அவற்றில் ஒன்று Dugite என்னும் வகையைச் சேர்ந்த கொடிய நச்சுப் பாம்பு. இந்த பாம்புகள் cannibal என்னும் தன் இனத்தையே கொன்று தின்னும் கொடூர குணம் கொண்டவை.

இந்த பாம்புகள் மற்ற விலங்குகளைக் கொத்தி செயலிழக்கச் செய்தும் உடலை இறுக்கியும் கொன்றபிறகு அவற்றை அப்படியே முழுமையாக விழுங்கிவிடுமாம். தன் அளவுள்ள பாம்புகளைக்கூட அவை விழுங்கிவிடுமாம்.அந்த கொடிய பாம்பு மற்றொரு பாம்பை விழுங்கிக்கொண்டிருக்கும் அரிய காட்சியைத்தான் Cody கண்டிருக்கிறார், படமும் பிடித்திருக்கிறார்.

See also  போலி காதலால் ஏமாற்றப்படும் ஆஸ்திரேலியர்கள் - பெருந்தொகை பணத்தை இழந்த மக்கள்

 

(Visited 1 times, 1 visits today)
Avatar

hinduja

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆஸ்திரேலியா செய்தி

ஆர்ப்பாட்டகாரர்களால் முற்றுகையிடப்பட்ட அவுஸ்திரேலிய நாடாளுமன்றம்!

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் குடியேற்றவாசிகள் குறித்த கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் முன்னால் நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தற்காலிக பாதுகாப்பு மற்றும் செவ்விசாவைவைத்திருக்கும் 19000
ஆஸ்திரேலியா செய்தி

அவுஸ்திரேலிய தேர்தலில் களமிறங்கிய இலங்கை தமிழ் இளைஞன்

மே 27 நடைபெற உள்ள அவுஸ்திரேலியாவின் பெடரல் தேர்தலில் தமிழர்களும் களம்பிறக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் கிரீன் கட்சி சார்பாக செல்வன் சுஜன் அவர்கள் களமிறங்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் மனித

You cannot copy content of this page

Skip to content