Site icon Tamil News

சஜித்திற்கு பிரதமர் பதவி வழங்க வேண்டிய தேவை இல்லை – பிரசன்ன ரணதுங்க!

அரசியலமைப்புக்கு அமைய ஆட்சி மாற்றம் ஏற்படும் வரை ஜனாதிபதி பிரதமர் பதவிகளில் மாற்றம் ஏற்படாது என வீடமைப்பு அபிவிருத்தி அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

கடுவலை பகுதியில் நேற்று சனிக்கிழமை (22) இடம்பெற்ற ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் அமைப்பாளர் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துரைக்கையிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர், எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கு    பிரதமர் பதவி வழங்க வேண்டிய தேவை ஏதும் கிடையாது. நெருக்கடியான சூழலில் தலைமைத்துவத்தை ஏற்கும் தைரியம் அவருக்கு கிடையாது.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர் தினேஷ் குணவர்தனவை பிரதமராக நாமே தெரிவு செய்தோம். ஆகவேபிரதமர் பதவியில் மாற்றத்தை ஏற்படுத்தவேண்டிய தேவை ஏதும் கிடையாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.

ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்கவை தெரிவுசெய்ய ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன எடுத்த தீர்மானம் சரியானது என்பதை நாட்டு மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளார்கள். அரசியலமைப்புக்கு அமைய ஆட்சிமாற்றம் ஏற்படும் வரை ஜனாதிபதிஇ பிரதமர் பதவிகளில் மாற்றம் ஏற்படாது எனக் கூறினார்.

Exit mobile version