இலங்கை செய்தி

பொலிஸ் பயங்கரவாதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்வோம் – கஜேந்திரகுமார்

மட்டக்களப்பில் மாவீரர் நினைவேந்தலில் ஒழுங்கு செய்தவர்களை குறிவைத்தே இந்த பயங்கரவாத தடைச்சட்டத்தில் 10 பேரினதும் கைது இந்த கைதுகள் அனைத்துமே மோசமான இனழிப்பு விழைவுகளுக்கு தடை எதுவும் இல்லாமல் தமிழ் மக்களை ஒட்டு மொத்தமாக அரசியல் பாதையில் இருந்து விலகிச் செல்ல செய்து முடிப்பதற்கான ஒரு முயற்சியாக இடம்பெறுவதுடன் பொலிஸ் பயங்கரவாதிகளுக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கையை மேற் கொள்ள வுள்ளோம் என நா. உறுப்பனர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் கடந்த சில தினங்களாக மாவீரர் நினைவேந்தலில் ஈடுபட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணி அமைப்பாளர் அவரது மகன் உட்பட 10 பேரை பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டவர்களை நா. உறுப்பனாகளான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், எஸ்.கஜேந்திரன், தேசிய அமைப்பாளர் த.சுரேஸ் இன்று சனிக்கிழமை (1) மட்டு சிறைச்சாலைக்கு சென்று அவர்களை சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தர்.

பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கடந்த 25 .27 ம் திகதி தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியைச் சேர்ந்த இருவர் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

See also  தஹாம் சிறிசேன மற்றும் ராஜிகா விக்கிரமசிங்க ஆகியோர் திலித்துடன் இணைகின்றனர்

இதில் அரசாங்கமே நினைவு கூறலாம் என தெரிவித்துவிட்டு வடக்கு கிழக்கிலே மூதூர் சம்பூரை தவிர தவிர அனைத்து நீதிமன்றங்களிலும் தடை உத்தரவு பெறுவதற்கு பொலிசார் முயற்சி எடுத்து போது அனைத்து நீதிமன்றங்களிலும் நினைவு கூறுவதற்கு உரிமை உண்டு என தீர்ப்பு வழங்கப்பட்டு அதேவேளை விடுதலைப்புலிகள் தடைசெய்யப்பட்ட அமைப்பு என்றவகையில் அந்த அமைப்பின் சின்னங்கள் இல்லாமல் அந்த நினைவேந்தல் நடைபெறமுடியம் என கட்டளை வழங்கப்பட்டது.

இந்த நிலையில் அந்த நினைவேந்தலில் கலந்துகொண்டு அதனை ஒழுங்கு செய்த ஒரே ஒரு காரணத்திற்காக இந்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது அப்பட்டமாக சிறிலங்காவினுடைய மோசமான சட்டங்களுக்கு ஊடான ஒரு செயற்பாடு இருந்தும் இந்த கைதுகள் அரசியல் காரணங்களுக்காக செய்யப்பட்டுள்ளதாக இருக்கின்றதே தவிர சட்ட காரணங்களுக்காக அல்ல என்பது மிக அப்பட்டமாக தெரிகின்றது.

அந்த வகையிலே நாங்கள் கைது செய்யப்பட்ட அத்தனைபேரையும் சந்தித்து பேசிய போது அவர்கள் தங்களுக்கு ஏற்பட்டுள்ள இந்த அநீதிக்கு முற்றுப் புள்ளிவைக்கின்ற ரீதியில் மேலதிகமான சட்ட நடவடிக்கை வேண்டும் என்றனர்.

See also  இலங்கையில் வரி செலுத்தும் மக்களுக்கான இறுதி அறிவிப்பு

எனவே பொலிசார் சட்ட ரீதியாக நடந்து கொள்ளுகின்ற பொலிஸ் பயங்கரவாதிகளுக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கையை நாங்கள் மேற்கொள்ளவுள்ளோம்.

தமிழ் மக்கள்; நியாயமில்லாத சிறிலங்கா பயங்கரவாத தடைச் சட்டத்தை தெரிந்து அதனுள் போகாது நடந்து கொண்ட போதும் அவர்கள் குறிவைக்கப்படுகின்றது இதனை தமிழ் தேசிய மக்கள் முன்னணி கடுமையாக எதிர்க்கின்றோம்.

அதேவேளை நாங்கள் விளங்கி கொண்டு இந்த பயங்கரவாதத்தை மக்கள் மீது திணிக்கின்ற செயற்பாடுகளுக்கு அடிபணியாது நாங்கள் இதை எதிர் நோக்க வேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம் நாங்கள் இதனை எதிர்கொள்வோம் என்றார்.

(Visited 4 times, 1 visits today)
Avatar

KP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content