ஐரோப்பா

பிரித்தானியாவில் Sheffield இல் வன்முறை சம்பவம் பதிவு : ஒருவர் ஸ்தலத்திலேயே பலி!

பிரித்தானியாவின், ஷெஃபீல்டில் நடந்த வன்முறையின் போது மக்கள் கூட்டத்தின் மீது கார் ஒன்று மோதியதில் 46 வயது நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றும் பலர் காயமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

கொலைச் சந்தேகத்தின் பேரில் 23 வயதுடைய நபரும், கொலை முயற்சியில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் 55 வயதுடைய நபரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெற்கு யோர்க்ஷயர் பொலிஸார் தெரிவித்தனர்.

“வன்முறை மற்றும் சீர்குலைவு பற்றிய புகாரைத் தொடர்ந்து” நகரின் பர்ன்கிரேவ் பகுதியில் உள்ள கல்லூரிக்கு அதிகாரிகள் அழைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், குழுவொன்றின்மீது கார் மோதியது.

இச்சம்பவம் புதன்கிழமை பிற்பகல் 2 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இதில் காயமடைந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

காயமடைந்தவர்களில் ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

(Visited 4 times, 1 visits today)
Avatar

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்

You cannot copy content of this page

Skip to content