இலங்கை செய்தி

மூத்த பத்திரிகையாளர் ஏ.டி.ரஞ்சித் குமார காலமானார்

மூத்த பத்திரிகையாளரும், எழுத்தாளருமான ஏ.டி.ரஞ்சித் குமார காலமானார்.

இறக்கும் போது அவருக்கு வயது 77 ஆகும்.

1947 ஆம் ஆண்டு ஏப்ரல் 07 ஆம் திகதி பிறந்த ஏ.டி.ரஞ்சித் குமார், மூத்த பாடகி தமயந்தி ஜயசூரியவின் கணவரும், நுவன் நயனஜித் குமாரின் தந்தையும் ஆவார்.

சுமார் ஐந்து தசாப்தங்களாக அரசியல் மற்றும் ஊடகத்துறைகளில் பணியாற்றிய அவர், சரசவிய மற்றும் சரசி வார இதழ்களின் ஆசிரியராக இருந்துள்ளார்.

கொஸ்கசந்தியா, காமினி ஹெல சினிமா சக்விதி, உள்ளிட்ட பல நூல்களின் ஆசிரியரும் ஆவார்.

ராஜ்ய சாகித்ய விருதுகளின் ஆலோசனைக் குழுவில் உறுப்பினராக இருந்த அவர், பல்கலைக்கழக திரைப்பட விழா மற்றும் சுமதி டெலி விருதுகள் ஆகியவற்றின் தலைமை அமைப்பாளராகவும் இருந்துள்ளார்.

சுமதி குழும நிறுவனங்களின் நிறைவேற்றுப் பணிப்பாளராகவும் பதவி வகிக்கும் ஏ.டி.ரஞ்சித் குமார வென்ற விருதுகளில் ரணபால போதினாகொட சினிமா இலக்கிய நினைவு விருது, சிறில் சி. பெரேரா நினைவு விருது, OCIC விருது மற்றும் சுமதிபால நினைவு விருது ஆகியவை அடங்கும்.

(Visited 7 times, 1 visits today)
Avatar

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content