Site icon Tamil News

மூத்த பத்திரிகையாளர் ஏ.டி.ரஞ்சித் குமார காலமானார்

மூத்த பத்திரிகையாளரும், எழுத்தாளருமான ஏ.டி.ரஞ்சித் குமார காலமானார்.

இறக்கும் போது அவருக்கு வயது 77 ஆகும்.

1947 ஆம் ஆண்டு ஏப்ரல் 07 ஆம் திகதி பிறந்த ஏ.டி.ரஞ்சித் குமார், மூத்த பாடகி தமயந்தி ஜயசூரியவின் கணவரும், நுவன் நயனஜித் குமாரின் தந்தையும் ஆவார்.

சுமார் ஐந்து தசாப்தங்களாக அரசியல் மற்றும் ஊடகத்துறைகளில் பணியாற்றிய அவர், சரசவிய மற்றும் சரசி வார இதழ்களின் ஆசிரியராக இருந்துள்ளார்.

கொஸ்கசந்தியா, காமினி ஹெல சினிமா சக்விதி, உள்ளிட்ட பல நூல்களின் ஆசிரியரும் ஆவார்.

ராஜ்ய சாகித்ய விருதுகளின் ஆலோசனைக் குழுவில் உறுப்பினராக இருந்த அவர், பல்கலைக்கழக திரைப்பட விழா மற்றும் சுமதி டெலி விருதுகள் ஆகியவற்றின் தலைமை அமைப்பாளராகவும் இருந்துள்ளார்.

சுமதி குழும நிறுவனங்களின் நிறைவேற்றுப் பணிப்பாளராகவும் பதவி வகிக்கும் ஏ.டி.ரஞ்சித் குமார வென்ற விருதுகளில் ரணபால போதினாகொட சினிமா இலக்கிய நினைவு விருது, சிறில் சி. பெரேரா நினைவு விருது, OCIC விருது மற்றும் சுமதிபால நினைவு விருது ஆகியவை அடங்கும்.

Exit mobile version