ஐரோப்பா

தன் பதவியை ராஜினாமா செய்துள்ள பிரிட்டன் அமைச்சர்

பிரிட்டனின் சர்வதேச சுற்றாடல் அமைச்சர் ஸாக் கோல்ட்ஸ்மித் இன்று இராஜினாமா செய்துள்ளதுடன் பிரதமர் ரிஸி சுனக்கை கடுமையாக சடியுள்ளார்.

2022 செப்டெம்பரில் அப்போதைய பிரதமர் லிஸ் ட்ரஸினால், சர்வதேச சுற்றாடல் அமைச்சராக ஸாக் கோல்ட்ஸ்மித் நியமிக்கப்பட்டார். அதன் பின்னர் பிரதமர் ரிஷி சுனாக்கும் கோல்ட்ஸ்மித்துக்கு அதே பதவியை வழங்கினார்.

இந்நிலையில், அப்பதவியிலிருந்து இன்று இராஜினாமா செய்த கோல்ட்ஸ்மித், பிரதமர் ரிஷி சுனாக்கை கடுமையாக விமர்சித்துள்ளார்.

பிரதமர் போரிஸ் ஜோன்சனின் காலத்தில், காலநிலை மாற்றம், சுற்றாடல் பாதுகாப்பு, மிருக நலன்புரி விடயங்களில் பிரிட்டன் ஒரு தலைமையாக இருந்தது.ஆனால், இன்று படிப்படியாக இந்த அர்ப்பணிப்புகளை பிரிட்டன் கைவிட்டுள்ளது என தனது ராஜினாமா கடிதத்தில் கோல்ட்ஸ்மித் குறிப்பிட்டுள்ளார்.

அதோடு கடந்த வாரம் பாரிஸ் நகரில் நடந்த காலநிலை மாநாட்டில் கலந்துகொள்ளாமல், ஊடகத்துறை தொழிலதிபர் ரூபர்ட் முர்டோக்கின் வருடாந்த விருந்து நிகழ்வில் ரிஷி சுனாக் கலந்துகொண்டார் எனவும் ஸாக் கோல்ட்ஸ்மித் விசனம் வெளியிட்டுள்ளார்.

(Visited 17 times, 1 visits today)
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்

You cannot copy content of this page

Skip to content